search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குப்பை வளமீட்பு மைய கட்டிடம் திறப்பு
    X

    குப்பை வளமீட்பு மைய கட்டிடம் திறப்பு

    • சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பாண்டியர் 12-வது வார்டில் குப்பை வளமீட்பு மைய கட்டிட திறப்பு விழா நடந்தது.
    • நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட மருது பாண்டியர் 12-வது வார்டில் மத்திய மானிய நிதிகுழு திட்டத்தில் ரூ.33 லட்சம் மதிப்பிட்டில் குப்பை வள மீட்பு மைய புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.

    இதில் நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேலிங் எந்திரத்தின் மூலம் மக்காத நெகிழித்தாள்களை சுருக்கம் செய்து அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பும் பணியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், பொறியாளர் பாண்டீஸ்வரி, நகர அமைப்பு அலுவலர் திலகவதி, துப்புரவு ஆய்வாளர் மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் பிரேம்குமார், ஆறு சரவணன், ராம்தாஸ், பொதுப்பணி மேற்பார்வையாளர் உலகநாதன், ஒப்பந்ததாரர் அனுராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×