என் மலர்
சிவகங்கை
- மருதுபாண்டியர் நினைவிடத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க. வினர் மரியாதை செலுத்தினர்.
- கிராம மக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருது சகோதரர்களின் சிலைக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் 221-வது நினைவு தினமான அக்டோபர் 24-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 27-ந் தேதி (இன்று) காளையார் கோவில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் பொதுமக்களால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜ், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் தமிழ் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சிவாஜி, ஸ்டீபன், கோபி, கருணாகரன், சேவியர், தசரதன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு மருது சகோதரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கிராம மக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருது சகோதரர்களின் சிலைக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- சைக்கிள் மீது பைக் மோதி 2 பேர் பலியானார்கள்.
- இந்த விபத்து குறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி குமார் (வயது 45). இவரது மைத்துனரான புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கோபால்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (40) இருவரும் மோட்டார் சைக்கிளில் பொன்னமராவதியில் இருந்து கோட்டையூர் நோக்கி சென்றனர்.
கே.புதுப்பட்டிக்குள் வரும்போது அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி அழகன் என்பவர் சைக்கிளை ஓட்டி வந்தார். எதிர்பாராத விதமாக பைக்கும், சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகராஜ், அழகன் ஆகியோர் படுகாய மடைந்தனர். இருவரும் ஆம்புலன்சு மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அழகனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த நாகராஜ் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
- வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வௌ்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்்துறை வேலை வாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
வருகிற 28-ந் தேதி (வௌ்ளிக்கிழமை) காலை 10 மணிஅளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலை நாடுநர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்்தி தனியார்் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.
இதில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவா் சோ்க்கை, வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவி த்தொகை பெறுவதற்கான விண்ணப்பபடிவம் ஆகியவையும்் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞா்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு அடையாள அட்டை, ஆதார்்அட்டையுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ரத்துசெய்யப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருப்புவனம் அருகே தொடர் மழையால் பாலம் அடித்துச்செல்லப்பட்டது.
- போக்குவரத்து பாதிக்கப்பட்டு 5 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பிரமனூர் ஊராட்சியைச் சோ்ந்த வயல்சோி-காிசல்குளம் சாலையில் பாலம் அமைந்துள்ளது. தொடா் மழையின் காரணமாக இந்த பாலம் அடித்து செல்லப்பட்டது.
இந்த பாலம் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காிசல்குளம் உள்பட 5 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. இந்த சாலை ஊராட்சி ஒன்றிய சாலையாகும்.
பாலம் சேதமடைந்து உள்ளது தொடா்பாக, கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், புளியங்குளம் முதல்வாடி தரைப்பாலம் நீரில் மூழ்கி பாலத்திற்கு 2 அடி தண்ணீர் செல்வதைத் தொடா்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குழந்தைகள். பொதுமக்கள் பாலத்தை கடக்க இயலாத நிலை உள்ளதால், உடனடியாக இந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வருவாய்த்துறை, ஊராட்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, சிவகங்கை கோட்டாட்சியா் சுகிதா, ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் வெண்ணிலா, நீர்வளத்துறை செயற்பொறியாளா் (சருகனியாறு வடிநிலைக் கோட்டம்) பாரதிதாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- 221-வது நினைவு தினத்தையொட்டி மருதுபாண்டியா்கள் சிலைகளுக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
- சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள நினைவு மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செய்தி- மக்கள் தொடா்புத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள மருது பாண்டியா்கள் நினைவு மண்டபத்தில் மருதுபாண்டியா்களின் 221-வது நினைவு தின விழா நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் அமைச்சர்கள் பெரியசாமி, சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், பி.மூர்த்தி, பழனிவேல்தியாகராஜன் ஆகியோர் மருது பாண்டி யா்களின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர்.
முன்னதாக, கலெக்டர் மதுசூதன் ரெட்டி மருதுபாண்டியா்களின் நினைவு மண்டப வளா கத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மாியாதை செலுத்தினார்.
மானாமதுரை சட்டமன்ற உறுப்பினா் தமிழரசிரவிக்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினா் மாங்குடி, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணி ப்பாளா் செந்தில்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர்.அதனைத்தொடா்ந்து, திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மருதுபாண்டியா்களின் நினைவுத்தூணுக்கு அமைச்சா்கள், கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும்் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன், தேவகோட்டை கோட்டா ட்சியா் பிரபா கரன், திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி, செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) ராஜசெல்வன், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) ராஜா, திருப்பத்தூர் வட்டாட்சியா வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் மற்றும் மருதுபாண்டியா்களின் வாரிசுதாரா்கள் கலந்து கொண்டனா்.
- மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
- சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என எச்சரிக்கை.
தீபாவளிக்கு மறுநாளான இன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவின் சூரிய கிரகணம் இன்று மாலை 4.29 மணிக்கு தென்படும். மாலை 5.42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் சூரிய கிரகணம் தென்படும். சென்னை, கோவை, ஊட்டி மற்றும் ஐதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்ககூடாது என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் கோளரங்குகளில் சூரிய கிரணகத்தை பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சூரிய கிரணகத்தையொட்டி தமிழகத்தின் முக்கிய கோயில்களில் நடைசாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இன்று காலை 11:00 மணிக்கு நடை சாத்தப்படும். கிரகணம் முடிந்த பின்னர் இரவு 7:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் ஊத்துக்கோட்டை, ஆரணியை அடுத்த, சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் செவ்வாய்க்கிழமையான இன்று அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று மதியம் 2 மணி முதல், இரவு 7:00 மணி வரை கோவில் அடைக்கப்பட்டு இருக்கும் என்றும், 26ம் தேதி வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- அரசு சார்பில் மருதுபாண்டியர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது
- மருது பாண்டியர்களின் நினைவு தினம் அரசு நிகழ்ச்சியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை:
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சுதந்திர போரிட்டதால் ஆங்கிலேயர்களால் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். இதனையடுத்து அரசு சார்பில் மருதுபாண்டியர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டு இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ந் தேதி மருது பாண்டியர்களின் நினைவு தினம் அரசு நிகழ்ச்சியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மருதுபாண்டியர்களின் 221வது நினைவு நாளை முன்னிட்டு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு திருப்பத்தூரில் உள்ள மணிமண்டபத்தில், மருதுபாண்டியர்களின் சிலைகளுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள நினைவுத்தூணுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசு சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
- தீபாவளி பண்டிகையையொட்டி தரமற்ற, சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
- சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் அளிக்கலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமானதாக விளங்கும் உணவு மற்றும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய, தீபாவளி பண்டிகையையொட்டி ஆட்டு இறைச்சி வியாபாரம் செய்யும் அனைத்து வணிகா்களும் உரிய உரிமம், பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும்.
ஆடு வதை செய்யும் இடங்களுக்கு போதிய அளவு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். நோயுற்ற ஆடுகளை வதை செய்து விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். சுகாதாரமான முறையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யும் இடத்தை பராமரிக்க வேண்டும்.
பணிபுரியும் பணியா ளா்கள் மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணியாளா்கள் முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். ஆட்டு இறைச்சியை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
பதிவு பெற்ற ஆட்டு இறைச்சி கடைகளில் மட்டுமே பொதுமக்கள் ஆட்டு இறைச்சியை வாங்க வேண்டும். ஆட்டு இறைச்சி வாங்கும்போது சில்வா் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மருதுபாண்டியர், தேவர் குருபூஜையை முன்னிட்டு 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
- மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்ைக மாவட்டத்தில் 31-ந் தேதி (திங்கட்கிழமை) வரை 144 தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான உத்தரவை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பிறப்பித்துள்ளார். நாளை (24-ந் தேதி) மருது சகோதரர்களை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்ட நினைவு தினம் திருப்பத்தூரில் அரசு சார்பிலும், 27-ந்் தேதி அவர்களின் சமாதி அமைந்துள்ள காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழாவாகவும் அனுசரிக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவார்கள். மேலும் அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா நடைபெறுகிறது.
இதையொட்டி 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவித்துள்ளார்.
- மானாமதுரை பகுதியில் சனிபிரதோஷ வழிபாடு செய்யப்பட்டது.
- 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள குறிச்சிகாசி விஸ்வநாதர் கோவிலில் சனிபிரதோஷ வழிபாடு நடந்தது. காசிவிஸ்வநாதர், காசிநந்திக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் சிவலிங்கத்திக்கு அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர்.
இதேபோல் இடைக்காட்டூர் மணிகண்டேஸ்வரர், மேலெநெட்டூர் சொர்ண வாரீஸ்வரர், வேம்பத்தூர் கைலாசநாதர், கட்டிக்குளம் ராமலிங்கம் சுவாமி, மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர், சிருங்கேரி சங்கரமடத்தில் உள்ள சந்திர மவுலீசுவரர் ஆகிய கோவில்களிலும் சனிபிரதோஷம் வழிபாடு-அபிஷேகம் பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
- தொடர் மழையால் நீரில் மூழ்கி வாழை, நெற்பயிர்கள் சேதமானது.
- விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் காயாம்பட்டி வருவாய் கிராமத்தில் விவசாயிகள் நெல், தென்னை, வாழை பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த வருடங்களில் பருவமழை காலத்தில் தொடர்மழை பெய்வதால் மதுரை மாவட்டத்தின் எல்லையில் உள்ள செம்மிணிபட்டி கிராமத்திற்கு உட்பட்ட கருப்பாச்சி கண்மாய் துார் வாரததால் சுமார் 25 ஏக்கருக்கு மேல் பட்டா இடத்தில் நீர்பிடிப்புக்கு உள்ளாகிறது.
அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மற்றும் நெல் நடவு செய்தனர். தற்போது சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக கண்மாய் நிரம்பி வாழை பயிரிட்ட நிலத்தில் 2 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பியது. இதனால் சுமார் 25 ஏக்கர் வாழை, நெற் பயிர்கள் கண்மாய் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இதனால் வருடம் தோறும் பெருத்த நஷ்டத்தை இந்த பகுதி விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி ராமநாதன் கூறுகையில், அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும், மதுரை- சிவகங்கை என இரு மாவட்ட அதிகாரிகளும் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி எங்களது கோரிக்கை களை நிறைவேற்ற முடியாமல் தட்டிக்கழிப்பதாக குற்றம் சாட்டினார்.
- அ.தி.மு.க. வினர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கினர்.
- அவைத்தலைவர் பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
அ.தி.முக. 51-வதுஆண்டு விழாவையொட்டி சிவகங்கை நகர் அ.தி.மு.க. வட்டசெயலாளர் சேதுபதி ஏற்பாட்டில் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
மேலும் சிவகங்கை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன், காமராஜர் காலனி அருகே உள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவை வழங்கினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், நகர செயலாளர் ராஜா, மண்டல தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் தமிழ்செல்வன், அவைத்தலைவர் பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






