search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதுபாண்டியர் நினைவிடத்தில் அ.தி.மு.க. வினர் மரியாதை
    X

    மருதுபாண்டியர் நினைவிடத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    மருதுபாண்டியர் நினைவிடத்தில் அ.தி.மு.க. வினர் மரியாதை

    • மருதுபாண்டியர் நினைவிடத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க. வினர் மரியாதை செலுத்தினர்.
    • கிராம மக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருது சகோதரர்களின் சிலைக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் 221-வது நினைவு தினமான அக்டோபர் 24-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அக்டோபர் 27-ந் தேதி (இன்று) காளையார் கோவில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் பொதுமக்களால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    இதில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜ், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் தமிழ் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சிவாஜி, ஸ்டீபன், கோபி, கருணாகரன், சேவியர், தசரதன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு மருது சகோதரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    கிராம மக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருது சகோதரர்களின் சிலைக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    Next Story
    ×