என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • திருப்பத்தூர் பயணிகளுக்கு அவலம் தொடருகிறது.
    • இது போன்ற அசாதாரண சூழ்நிலையை அடிக்கடி சந்திக்க வேண்டி உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் முகமது தாரிக். இவர் தாயாருடன் மதுரையில் இருந்து திருப்பத்தூர் வருவதற்காக மாட்டு த்தாவணி பஸ் நிலையத்தில் மன்னார்குடி செல்லும் அரசு பஸ்சில் ஏறி உள்ளார். நடத்துனரிடம் திருப்பத்தூர் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

    அதற்கு நடத்துனர் இது மன்னார்குடி செல்லும் பஸ். தொலைதூரமாக செல்லும் பயணிகளுக்கு மட்டுமே நாங்கள் முன்னுரிமை வழங்க முடியும். திருப்பத்தூர் பயணிகள் இந்த பஸ்சில் ஏறக்கூடாது என்று கூறினார். இருவ ருக்கும் கைகலப்பு ஏற்படும் நிலையில் அருகில் இருந்தவர்கள் அமைதிப்படுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து முகமது தாரிக் திருப்பத்தூரில் உள்ள உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தகவலை தெரிவித்தார். அந்த பஸ் திருப்பத்தூர் வரும்போது சாலையில் பஸ்சை மறித்தனர். நடத்துனர் மற்றும் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆங்கில புத்தாண்டு தினமாக இருப்பதால் போராட்டத்தை கைவிடுமாறு வலியு றுத்தினார்.

    இனி இதுபோன்று நடக்காத வகையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிக்கு பரிந்துரை செய்வதாகவும் இன்ஸ்பெக்டர் தெரி வித்தார். அவனைத் தொடர்ந்து நடத்துனர் ராஜே ந்திரன் போராட்டத்தில் ஈடுபட்ட வரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    மதுரையில் இருந்து திருப்பத்தூர் வருபவர்கள் இது போன்ற அசாதாரண சூழ்நிலையை அடிக்கடி சந்திக்க வேண்டி உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

    • சபரி சாஸ்தா பஜனை குழுவினர் அன்னதானம் வழங்கப்பட்டது.
    • சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கருதாவூரணி சபரி சாஸ்தா பஜனைக் குழுவின் 26ம் ஆண்டு அன்னதானம் நடந்தது. இந்த குழு சார்பில் கார்த்திகை முதல் தேதியில் இருந்து தினமும் பஜனை நடைபெற்று, சிறப்பு தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தில் கலந்து கொண்டனர். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மேற்பார்வையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    இதில் தேவகோட்டை நகர் மற்றும் கண்டதேவி, ஆறாவயல், சித்தானூர், பெரியகாரை, கோட்டூர் காவனவயல், உடப்பன்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாணவர் தங்கம் வென்றார்.
    • மாணவர் சாய்வாசனை பயிற்சியாளர் ஜெரிமார்டின், பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    சிவகங்கை

    சிவகங்கை முதலியார் தெருவை சேர்ந்த பாஸ்கரன்-லதா தம்பதியரின் மகன் சாய்வாசன் (14). சென்னை தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். பாட்மின்டன் வீரரான இவர் ஒடிசா மாநிலம் புவனேசுவரில் நடந்த தேசிய பாட்மின்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்றார். 15 வயதிற்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சாய்வாசன், அசாம் வீரர் போர்னில் ஆகாசை 15-21, 23-21, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்.சாய்வாசனை பயிற்சியாளர் ஜெரிமார்டின், பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • நெற்குப்பை பேரூராட்சி மன்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி மன்ற மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது.

    சேர்மன் புசலான் தலைமை வகித்தார். செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். மாதாந்திர வரவு-செலவு கணக்குகள் உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டது. பேரூராட்சியில் நடை பெற்று வரும் பணிகளின் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    திட்ட இயக்குநரின் வேண்டு கோளுக்கிணங்க பேரூராட்சிகளில் அன்றாட பணிகள் மேற்கொள்ள உதவியாளர், எழுத்தாளர், மின் மற்றும் குடிநீர் பராமரிப்பு மேற்கொள்ள உதவியாளர், புள்ளிவிவர தொகுப்பாளர், அலுவலக காவலர், டிராக்டர் ஓட்டுநர் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு சுமார் 10 பேரை பணி நியமனம் செய்தல், மலம், ஜலம் கழிப்பில்லா பேரூராட்சியாக மாற்ற உறுதிமொழி எடுத்தல், குப்பை இல்லாத பேரூராட்சியாக மாற்றி நட்சத்திர அங்கீகாரம் பெற உறுதிமொழி எடுத்தல், போன்ற பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

    இளநிலை உதவியாளர் சேரலாதன், மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • தேவகோட்டையில் நாட்கணக்கில் வைத்து விற்கப்படும் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ஷாகுல் அமீது என்பவர் 10 நாட்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்பது தெரியவந்தது.

    தேவகோட்டை,

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 1 லட்சத்திற்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள இறைச்சி கடைகளில் விற்கப்படும் ஆட்டுக்கறி சுகாதாரமற்ற முறையிலும், நாட்கணக்கில் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

    இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் உதவியாளர் மாணிக் கம் ஆகியோர் தலைமையில் தேவகோட்டை பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னர்.

    அப்போது நகைக்கடை பஜாரில் இறைச்சி கடை நடத்தி வரும் ஷாகுல் அமீது என்பவர் 10 நாட்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்பது தெரியவந்தது. அவருக்கு சொந்தமாக அண்ணாநகர், ஆறாவயல், வெள்ளையன் ஊரணி ஆகிய பகுதி களிலும் இறைச்சி கடை கள் உள்ளன. இங்கும் கெட்டுப்போன இறைச்சி விற்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து மேற்கண்ட 4 கடைகளில் இருந்தும் 1000 கிலோ ஆட்டுக்கறி பறிமுதல் செய்யப்பட்டு சாகுல் அமீதுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தேவகோட்டையில் இறைச்சி களுக்காக ஆடுகள் அறுக்கும் போது பரிசோதனை செய்து ரசீது வழங்கி கடைகளுக்கு இறைச்சிகளில் சீல் வைத்து அனுப்பப்படுவது வழக்கம்.

    ஆனால் இந்த நடைமுறை கடந்த சிலமாதங்களாக பின்பற்றப்படுவது இல்லை. இதனால் சுகாதாரமற்ற நாட்கணக்கில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் விற்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி உட்கொள்ளும் பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    எனவே இனியாவது நகராட்சி நிர்வாகம் கடுமையாக கண்காணித்து ஆட்டு இறைச்சி விற்ப னைக்கு விதிகளை பின் பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • கடனுக்குரிய மானியத்தொகையை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று கலெக்டர் கூறி உள்ளார்.
    • கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    தகுதியுடைய கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாது காக்கவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை பாது காக்கவும், துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், கண்மாய்களில் உள்ள மடைகள், தடுப்புச்சுவர்கள் பழுதடைந்து இருப்பின் விரைந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், மேலும் புதிய தடுப்பணைகள் கட்டித்தரவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்க உறுதுணையாக இருக்கவும், கடனுக்குரிய மானியத்தொகையை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நிர்வாகி சோனைமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது சிறுகுடி. இந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி கிடையாது. தற்போது சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி வந்து விட்டாலும் பஸ் வசதி இல்லாமல் மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள முத்தனேந்தல் அல்லது இடைக்காட்டூர் வந்து சிறுகுடி மக்கள் பஸ் ஏறி வெளியூர் சென்று வந்தனர்.

    இது குறித்து மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசியிடம் உங்கள் முயற்சியால் சிறுகுடிக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    தமிழரசி எம்.எல்.ஏ. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 75 வருடமாக போக்குவரத்து வசதி இல்லாத சிறுகுடி கிராமத்திற்கு புதிய பஸ் வழித்தடத்தை தொடங்கி வைத்தார்.

    மேலும் அவர் கிராம மக்களோடு பஸ்சில் பயணமும் செய்தார். இதில் தி.மு.க. ஒன்றிய குழு துணை தலைவர் முத்துசாமி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம், ஒன்றிய கவுன்சிலர்கள் ராதா சிவச்சந்திரன், மலைச்சாமி, நிர்வாகி சோனைமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 1,150 பேருக்கு பட்டங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • ஜனாப் அப்துல் சலீம், சிராஜுதீன் மற்றும் அவுரங்கசீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் 12-வது பட்டமளிப்பு விழா நடந்தது. ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான் தொடங்கி வைத்தார்.

    முதல்வர்அப்பாஸ் மந்திரி வரவேற்று அறிக்கை சமர்ப்பித்தார். சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா, கல்வியியல் கல்லூரி அறிக்கை சமர்ப்பித்தார்.

    சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு 1,150 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

    முன்னாள் கல்லூரி மாணவியும், மானாமதுரை எம்.எல்.ஏ.வுமான தமிழரசி,முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜுமுதின், கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அஹமது ஜலாலுதீன், பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அஸ்ரப் அலி, ஜனாப் அப்துல் சலீம், சிராஜுதீன் மற்றும் அவுரங்கசீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • பேட்டகாளி, சோழன், அணில், கரிசல், கரிகாலன், புல்லட் என இவர் வளர்க்கும் காளைகளுக்கு செல்ல பெயர் வைத்துள்ளார்.
    • ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஒவ்வொரு காளையும் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகிறது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இலங்கையின் முன்னாள் முதலமைச்சரும், இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் திருப்பத்தூர் அருகே ஆளவிளாம்பட்டி கிராமத்திலுள்ள அவரது தோப்பில் தமிழகம் மற்றும் வெளி மாநில காளைகளை வாங்கி பராமரித்து வருகிறார்.

    ஜல்லிக்கட்டில் ஆர்வம் உள்ள செந்தில் தொண்டமான் தன்னுடைய காளைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வைப்பது வழக்கம். அவருடைய காளைகள் பரிசுகளை குவித்து நம்பர் ஒன் காளைகளாக திகழ்ந்து வருகின்றன.

    பேட்டகாளி, சோழன், அணில், கரிசல், கரிகாலன், புல்லட் என இவர் வளர்க்கும் காளைகளுக்கு செல்ல பெயர் வைத்துள்ளார். சீறிப்பாய்வதில் அசாத்திய திறமை, பெருத்த திமில், கூரிய கொம்புகள், ராஜநடையோடு கம்பீரமாக வலம் வரும் இந்த காளைகள் களத்தில் வீரர்களை மிரள வைக்கும் அளவிற்கு சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகிறார் செந்தில் தொண்டமான்.

    பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக எனது தோட்டத்திலேயே வாடிவாசல் ஏற்பாடு செய்து அதன் வழியாக பாய்ந்தோட பயிற்சி வழங்குதல், சீறிப்பாய்ந்து மணற்மேடுகளை முட்டுதல், மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் இருக்க தனி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காளையின் உடல் வலிமைக்காக வழக்கமான உணவுகளை தவிர்த்து பேரிச்சம் பழம், பருத்தி விதை, புண்ணாக்கு, முட்டை, கோதுமை தவிடு போன்ற ஊட்டமளிக்கும் உணவுப் பொருள்களை வழங்குகின்றோம்.

    காளைகளுக்கு தினமும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஒவ்வொரு காளையும் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகிறது.

    ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டிக்கும் சென்றுவர கேரவன், தனித்தனி அறைகளில் பேன், ஏர்கூலர், வசதியுடன் கூடிய தங்குமிடம் என இந்த காளைகளுக்கு அனைத்து வசதிகளோடு கூடிய பராமரிப்பும் தீவிர பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1,461 மகளிர் குழுக்களுக்கு ரூ.84.13 கோடி கடனுதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • அதனை தொடர்ந்து சிவகங்கையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் விழா நடந்தது.

    சிவகங்கை

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து சிவகங்கையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் விழா நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். கார்த்தி சிதம்பரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 1,4611 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.84.13 கோடி கடனுதவிகளை வழங்கினார்.பின்னர் அவர் பேசியதாவது:-

    சுயஉ தவிக்குழுக்கள் அமைத்து சுழல்நிதி கடன் திட்டத்தை வழங்கி பெண்களின் வாழ்வாதா ரத்தை உயர்த்தியவர் மகளிர் குழு பயன்பெறும் வகையில் குழு உறப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். அந்த அளவிற்கு சுயதொழில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

    பொதுவாக ஒரு வீட்டில் குடும்பத்தலைவி போதிய வருவாய் ஈட்டும் நிலையில் இருந்தால்தான், அந்த குடும்பம் கடனின்றி சிறப்பாக வழிநடத்தி செல்ல முடியும். பெண்கள் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு எத்தகைய திட்டங்களை பெற்று பயன்பெற முடியுமோ அத்தகைய திட்டங்களை மேற்கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வானதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் ரவிச்சந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது.
    • விழாவில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமை தாங்கி நகர் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றினார்.

    காரைக்குடி

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138-வது தொடக்க விழா மற்றும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயண விழாவினை முன்னிட்டு காரைக்குடி நகரில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது. விழாவில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமை தாங்கி நகர் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார். நகர தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர்மன்ற உறுப்பினர்கள் ரத்தினம், அமுதா, அஞ்சலிதேவி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராமசாமி, நகரச் செயலாளர் குமரேசன், வக்கீல் ராமநாதன், வர்த்தக காங்கிரஸ் நகர தலைவர் ஜெயபிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அருணா, பாலா, சிவா, அழகேஷ், முத்து, மணி, புதுவயல் முகம்மது மீரா, கண்டனூர் குமார் மற்றும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் நாச்சம்மை, விஜி, சூர்யா, பிரதீக்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • “நம்ம ஸ்கூல்” திட்டத்திற்கு செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளிக்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
    • பள்ளி யின் கல்வி இயக்குனர் டாக்டர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

    காரைக்குடி

    காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாபெரும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகாமிற்கு தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், பள்ளியின் தலைவர் செல்லப்பன் கலந்து கொண்டனர்.

    அப்போது பள்ளியின் தாளாளர் சத்தியன் "நம்ம ஸ்கூல்" திட்டத்திற்காக ரூ. 2 லட்சம் நன்கொடையையும், நினைவு பரிசையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னிடம் வழங்கினார். பள்ளி யின் கல்வி இயக்குனர் டாக்டர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

    ×