search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பஸ்களுக்கு டி.எஸ்.பி. எச்சரிக்கை
    X

    மாணவர்களை பயணம் செய்ய மறுத்த தனியார் பஸ் டிரைவர் கண்டக்டர்களுக்கு போலீஸ் டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார்.

    தனியார் பஸ்களுக்கு டி.எஸ்.பி. எச்சரிக்கை

    • மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்காத தனியார் பஸ்களுக்கு டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • இதே நிலை தொடருமானால் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரை சுற்றி சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேற்படிப்புக்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் பஸ்கள் மூலம் தேவகோட்டை வந்து செல்கின்றனர்.

    தற்போது அரையாண்டு தேர்வு முடிவடைந்து பள்ளிகள் நேற்று திறக்க ப்பட்டன. திருப்பத்தூர் சாலை ராம்நகரில் உள்ள மாணவ- மாணவிகளும், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளும் விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதற்காக தேவகோட்டை பஸ் நிலையத்திற்கு நேற்று வந்தனர்.

    அந்த மாணவ-மாணவிகளை தனியார் பஸ்களில் ஏற்றாமல் காரைக்குடி பயணிகளை மட்டும் பயணம் செய்ய அனுமதித்தனர். இதனால் திரளான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்தனர். இதுகுறித்து பஸ் நிலைய காப்பாளர் சந்தியாகு கொடுத்த தகவலின் பேரில் தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார்.

    மாணவ-மாணவிகளை பயணம் செய்ய மறுத்த தனியார் பஸ்களின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை எச்சரித்து அனுப்பினார். இதே நிலை தொடருமானால் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார்.

    Next Story
    ×