search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "be warned"

    • மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்காத தனியார் பஸ்களுக்கு டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • இதே நிலை தொடருமானால் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரை சுற்றி சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேற்படிப்புக்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் பஸ்கள் மூலம் தேவகோட்டை வந்து செல்கின்றனர்.

    தற்போது அரையாண்டு தேர்வு முடிவடைந்து பள்ளிகள் நேற்று திறக்க ப்பட்டன. திருப்பத்தூர் சாலை ராம்நகரில் உள்ள மாணவ- மாணவிகளும், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளும் விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதற்காக தேவகோட்டை பஸ் நிலையத்திற்கு நேற்று வந்தனர்.

    அந்த மாணவ-மாணவிகளை தனியார் பஸ்களில் ஏற்றாமல் காரைக்குடி பயணிகளை மட்டும் பயணம் செய்ய அனுமதித்தனர். இதனால் திரளான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்தனர். இதுகுறித்து பஸ் நிலைய காப்பாளர் சந்தியாகு கொடுத்த தகவலின் பேரில் தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார்.

    மாணவ-மாணவிகளை பயணம் செய்ய மறுத்த தனியார் பஸ்களின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை எச்சரித்து அனுப்பினார். இதே நிலை தொடருமானால் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார்.

    • ஆபத்தை உணராமல் பாசன வாய்க்காலில் செல்லும் தண்ணீரில் குதித்தும், கரணம் அடித்தும் உற்சாக மாக குளிக்கின்றனர்.
    • குழந்தைகளை எங்கு செல்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என கண்காணிக்க வேண்டும்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்ட க்குடியை அடுத்துள்ள கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து விவசாயிகளின் நலன் கருதி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஆவி னங்குடி பகுதியில் சாலை யோரம் செல்லும் பாசன வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்காலில் அதிக அள வில் தண்ணீர் தற்போது செல்கிறது. நேற்று பள்ளி விடு முறை நாள் என்பதால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பாசன வாய்க்காலில் செல்லும் தண்ணீரில் குதித்தும், கரணம் அடித்தும் உற்சாக மாக குளிக்கின்றனர்.

    நீர் நிலைகளில் தற்போது பல்வேறு இடங்களில் மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எங்கு செல்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என கண்காணிக்க வேண்டும். அதுமட்டுமின்றி மாண வர்கள் குளிக்கும் இடம் அருகே அரசு மேல்நிலை ப்பள்ளி மற்றும் போலீஸ் நிலையம் உள்ளது. இது போன்று தண்ணீரில் ஆபத்து உணராமல் குளிக்கும் மா ணவர்கள் மற்றும் சிறுவர்க ளை காவல்துறையினர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×