வீர அழகர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

வீர அழகர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
வீர அழகர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகையாற்று கிழக்குப்பகுதியில் உள்ளது பிரசித்தி பெற்ற வீர அழகர்கோவில். இங்கு வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் திரண்டனர்.

மேள தாளத்துடன் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாளை பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என வரவேற்றனர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதேபோல் அப்பன் பெருமாள் கோவில், தியாக விநோத பெருமாள், உடைகுளம் மான்பூண்டி நல்லாண்டவர் பெருமாள் கோவில், வேம்பத்தூர் பூமி நீளாபெருமாள் கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com