என் மலர்
சேலம்
- சின்னசாமி. இவரது மகன் அபிமன்னன் (46), திருமணம் ஆகாத இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார்.
- அபிமன்னன் பறைவை காடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஓமலூரை சேர்ந்த கருணாநிதி (55) என்பவருடன் தகராறு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் கருப்பூரை அடுத்த மூங்கில்பாடி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் அபிமன்னன் (46), திருமணம் ஆகாத இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார்.
தகராறு-மோதல்
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி குடிபோதையில் இருந்த அபிமன்னன் பறைவை காடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஓமலூரை சேர்ந்த கருணாநிதி (55) என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கருணாநிதி அங்கிருந்த வெந்நீரை எடுத்து அபிமன்னன் மீது ஊற்றினார். இதில் அவரது கை வெந்தது. ஆனாலும் குடி போதையில் இருந்த அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் சுற்றி வந்தார்.
தொடர்ந்து மருந்து போடாத நிலையில் அபிமன்னன் கை அழுகியதால் வலி தாங்க முடியாமல் அபி மன்னன் துடித்தார். பின்னர் அவரது தாய் பழனியம்மாளிடம் கூறினார். பழனியம்மாள் அவரை நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அபிமன்னன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இது குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி கருணாநிதியை தேடி வருகிறார்கள். மேலும் வெந்நீர் ஊற்றியதால் அபிமன்னன் இறந்ததால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றுவது தொடர்பாக போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
- சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியருக்கு கந்தசஷ்டி விரதம் கடந்த 13-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
- சப்பரத்தில் உற்சவர் ஆறுமுகம் கொண்ட சண்முகர் கோவில்மாட வீதியை சுற்றி வந்தார். மாலையில் உற்சவர் சண்முகருக்கு அபிஷேகம் செய்து பூஜை நடந்தது.
சேலம்:
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியருக்கு கந்தசஷ்டி விரதம் கடந்த 13-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று காலை மூலவர் சுப்ரமணியருக்கு வள்ளி, தெய்வானையுடன் அபிஷேகம் நடந்தது. பின்னர் சப்பரத்தில் உற்சவர் ஆறுமுகம் கொண்ட சண்முகர் கோவில்மாட வீதியை சுற்றி வந்தார். மாலையில் உற்சவர் சண்முகருக்கு அபிஷேகம் செய்து பூஜை நடந்தது.
வேல் வாங்கும் நிகழ்வு
இன்று மாலை கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஸ்வர்ணாம்பிகை அம்மனிடம் இருந்து உற்சவர் சண்முகர் வேல் வாங்கும் நிகழ்வு நடக்கிறது. மதியம் 3.30 மணிக்கு உற்சவர் மயில் வாகனத்தில் புறப்பட்டு ராஜகணபதி, லட்சுமி பெருமாள், முதல் அக்ரஹாரம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் பகுதிகளில் சூரனை வதம் செய்யும் விழா நடக்கிறது.
மாலை 6 மணிக்கு கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு யானை வாகனத்தில் உற்சவர் புறப்பாடு நடக்கிறது. நாளை மதியம் 3 மணி முதல் 4.30 மணிக்குள் வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் நடக்க உள்ளது.
அதேபோல் அம்மா பேட்டை குமர குரு சுப்ரமணியர், சீலநாயக் கன்பட்டி ஊத்துமலை முருகன், ஏற்காடு அடிவார ஆறுபடை முருகன் உள்பட மாநகரில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நடக்கிறது.
வடசென்னி மலை பாலசுப்ரமணியர்
ஆத்துார் அருகே வடசென்னி மலை பாலசுப்ரமணியர் கோவிலில் 49-ம் ஆண்டு சூரசம்ஹார விழா கடந்த 12-ந் தேதி கந்த சஷ்டி பூஜையுடன் தொடங்கியது. நேற்று மாலை 6.30 மணிக்கு மூலவருக்கு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர் விபூதி, மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இரவு 8 மணிக்கு சூரனை வதம் செய்வதற்கு பார்வதி தேவியிடம் பாலசுப்ரமணியர் வேல் வாங்கும் நிகழ்வு நடந்தது. வேலை வாங்கிச்சென்ற பாலசுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, விநாயகருடன் மலர் அலங்காரம் செய்யப்பட்ட தெப்பத்தேரில் இரவு 8.30 மணிக்கு கோவில் குளத்து நீரில் 3 முறை இழுத்து வரப்பட்டார். அப்போது திருமண மாகாத பெண்கள், குழந்தை வரம் வேண்டுவோர், பல்வேறு பிரச்னைகள் நீங்கவும் பெண்கள், விளக்கு, வாழை கற்பூரம் ஏற்றி குளத்தில் விட்டு வழிபட்டனர். இன்று மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
- மேட்டுப்பட்டி பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன் மனைவி முருகாயி (42).
- பெயிண்ட் அடிக்கும் பணி முடிவடைந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு அணிந்து கொள்வதற்காக பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை முருகாயி எடுக்க சென்றுள்ளார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன் மனைவி முருகாயி (42).
பெயிண்ட் அடிக்கும் பணி
இவரது வீட்டிற்கு பெத்தநாயக்கன்பாளையம் தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவரும் தற்போது கவர்கல்பட்டியில் வசித்து வருபவருமான மாரியப்பன் (29) என்ற வாலிபர் கடந்த மாதம் தொழிலாளர்களுடன் இணைந்து பெயின்ட் அடிக்கும் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
பெயிண்ட் அடிக்கும் பணி முடிவடைந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு அணிந்து கொள்வதற்காக பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை முருகாயி எடுக்க சென்றுள்ளார். அப்போது நகைகள் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
6½ பவுன் திருட்டு
உடனடியாக இதுகுறித்து வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார் பெருமாயி வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் பீரோவில் வைத்திருந்த 6½ பவுன் நகைகளை மாரியப்பன் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுலோச்சனா (32). இவரும் இவரது தாயார் சின்னப்பொண்ணு என்பவரும் மருத்துவமனைக்கு செல்வதற்காக முத்தம்பட்டி கேட் பஸ் நிறுத்தம் அருகே அவ்வழியாக சென்ற தனியார் டவுன் பஸ்சில் ஏற முயன்றனர்.
- தனது தாயார் சின்னப்பொண்ணு பஸ்சில் ஏறாததை கண்ட சுலோச்சனா பஸ்சில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகள் சுலோச்சனா (32). இவரும் இவரது தாயார் சின்னப்பொண்ணு என்பவரும் மருத்துவமனைக்கு செல்வதற்காக முத்தம்பட்டி கேட் பஸ் நிறுத்தம் அருகே அவ்வழியாக சென்ற தனியார் டவுன் பஸ்சில் ஏற முயன்றனர்.
தவறி விழுந்தார்
அப்போது தனது தாயார் சின்னப்பொண்ணு பஸ்சில் ஏறாததை கண்ட சுலோச்சனா பஸ்சில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுலோச்சனா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விசாரணை
இந்த விபத்து குறித்து சுலோச்சனாவின் சகோதரி வெண்ணிலா (34) கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கு காரணமான தனியார் பஸ் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக சென்றபோது பஸ்சில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் தாய் கண்ணெதிரே பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளது.
- நாளை இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் உலககோப்பைக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளன.
சேலம்:
தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளது.
நாளை இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் உலககோப்பைக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளன.
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டி சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் உடல் நலத்துடன் விளையாடி இந்தியாவிற்கு கோப்பையை பெற்றுத்தர வேண்டி சிறப்பு மந்திரங்கள் ஓதப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு ஆண்டும் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நவம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 20-ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
- சேலம் அழகாபுரத்தில் உள்ள கூட்டுறவு சமுதாய கூடத்தில் 70-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சேலம்:
ஒவ்வொரு ஆண்டும் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நவம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 20-ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி முதல் கூட்டுறவு சங்கங்களில் கொடி ஏற்றுதல், உறுதிமொழி ஏற்பு, மரக்கன்றுகள் நடுதல், இலவச கால்நடை சிகிச்சை முகாம், விவசாயிகள் மகளிர் சுய உதவிகுழுக்கள் மற்றும் விவசாய கூட்டு பொறுப்பு குழுக்கள் பங்கு பெறும் உறுப்பினர் சந்திப்பு முகாம், பள்ளி கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா போட்டி, ஓவியப் போட்டி, கூட்டுறவு அமைப்புகளை பரவலாக்குதல் மற்றும் எளிமைப்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள், பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நாளை (19-ந் தேதி) மாலை சேலம் அழகாபுரத்தில் உள்ள கூட்டுறவு சமுதாய கூடத்தில் 70-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை, ஆவின், கைத்தறி மற்றும் துணிநூல் துறை, சேகோசர்வ், மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு துறைகளின் 1,033 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவு இணைப்பதிவாளர் தலைமையின் கீழ் 362 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சிறப்பாக செயல்பட்டுவரும் கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு சுமார் ரூ.25 கோடி மதிப்பில் கடனுதவிகளை அமைச்சர் வழங்க உள்ளார்.
கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் மாநகராட்சி மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கத்தினர், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
- பழைய நகைகளை வாங்கி விட்டு புதிய நகைகளாக தருவது, நகை சீட்டு சேமிப்பு திட்டங்கள், முதலீட்டுக்கு கூடுதல் வட்டி உள்பட பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்தனர்.
- இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் நகை கடைகளில் பணத்தை ெசலுத்தி நகை சீட்டு போட்டு வந்தனர்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி, அம்மாப்பேட்ைட, தாரமங்கலம், ஆத்தூர், மற்றும் தருமபுரி, திருச்சி, கரூர், கோவை ஆகிய மாவட்டங்களில் எஸ்.வி.எஸ். என்ற பெயரில் 11 நகைக்கடைகள் செயல்பட்டு வந்தது.
பொங்கும் தங்கம் திட்டம்
இந்த கடைகளில் பொங்கும் தங்கம் பழசுக்கு புதுசு, என்ற திட்டத்தின் கீழ் பழைய நகைகளை வாங்கி விட்டு புதிய நகைகளாக தருவது, நகை சீட்டு சேமிப்பு திட்டங்கள், முதலீட்டுக்கு கூடுதல் வட்டி உள்பட பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்தனர்.
இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் நகை கடைகளில் பணத்தை ெசலுத்தி நகை சீட்டு போட்டு வந்தனர். மேலும் பழைய நகைகளையும் ஒப்படைத்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல கோடிகளை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
தப்பி ஓட்டம்
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கடை உரிமையாளரான சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டியை சேர்ந்த சபரிசங்கர் (40 )மற்றும் மேலாளர்கள் சம்பந்தப்பட்ட கடைகளை பூட்டி விட்டு பல கோடி நகை பணத்துடன் தப்பி ஓடி தலைமறைவாகினர். இதனால் பணம் செலுத்தி ஏமாந்த மக்கள் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
6 பிரிவில் வழக்கு
அதன் பேரில் மாவட்ட மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நகைக்கடை உரிமையாளர் சபரி சங்கர், மேலாளர் முருகன், ஏஜெண்ட் பிரகாஷ் ஆகியோர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு அவர்களை தேடி வருகிறார்கள். தொடர்ந்து நகைக்கடை மோசடி குறித்து அந்தந்த மாவட்டங்களில் புகார்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் எஸ்.வி,எஸ். நகைக்கடைகளில் கலெக்சன் ஏஜெண்ட், மார்க்கெட்டிங்கில் பணி புரிந்த ஊழியர்களும் பணம் செலுத்தி ஏமாந்த பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் நகைக்கடை முக்கிய நிர்வாகிகள் 14 பேரை பிடித்து வந்து அங்கிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் 14 பேரில் சிலர் கடைகளில் இருந்த எங்களது பணம், நகைகளை எடுத்து சென்று பதுக்கி வைத்துள்ளனர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினால் நகைக்கடை உரிமையாளரை பிடித்து விடலாம், அவரிடம் இருந்து எங்களது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
விடுவிப்பு
இதையடுத்து 14 பேரையும் அழைத்து சென்ற டவுன் போலீசார் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட நகை கடைகளில் இருந்து பணம் , நகைகள் எடுத்தீர்களா? என்பது குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களிடம் முகவரியை எழுதி வாங்கி விட்டு அழைக்கும் போது விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த 14 பேரையும் பிடித்து ஒப்படைத்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- பெண் இன்ஸ்பெக்டரை ரெயிலில் இருந்து கீழே இறங்கு என்று கூறிய டிக்கெட் பரிசோதகர், ரெயில் பெட்டியின் கதவு வரை தள்ளி சென்றார்.
- சென்னையில் உள்ள ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அனுப்ப உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
சேலம்:
மங்களூருவில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு வெஸ்ட் கோர்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயிலில் சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை செல்ல ரெயில்வே பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஏறினார். பின்னர் அவர் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் காலியாக இருந்த ஒரு சீட்டில் அமர்ந்தார். அவர் அதற்கான அனுமதி சீட்டையும் வைத்திருந்தார்.
ஆனால் அந்த ரெயிலில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் அவரிடம் இருந்த பயண அனுமதி சீட்டை பிடுங்கி கொண்டு என்னிடம் கேட்காமல் எப்படி ரெயிலில் ஏறலாம் என்று கூறியபடி தகாத வார்த்தைகளால் திட்டினார்.
மேலும் பெண் இன்ஸ்பெக்டரை ரெயிலில் இருந்து கீழே இறங்கு என்று கூறிய அவர் ரெயில் பெட்டியின் கதவு வரை தள்ளி சென்றார். இதனை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து டிக்கெட் பரிசோதகரை எச்சரித்தனர். இதனால் சற்று அமைதியான டிக்கெட் பரிசோதகர் தொடர்ந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த சம்பவம் ஓடும் ரெயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து சென்னையில் உள்ள ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அனுப்ப உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் பூக்கள் செடியிலேயே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
- விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பூக்கள் வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்:
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உட்பட பல்வேறு பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.
கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி பூக்கள் விலை படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்கள் தேவை அதிகரித்தது.
மேலும் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் பூக்கள் செடியிலேயே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்களின் வரத்து மார்க்கெட்டுக்கு பாதியாக குறைந்துள்ளது. இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பூக்கள் வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று 800 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ இன்று 1200 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல நேற்று 600 ரூபாயாக இருந்த முல்லைப்பூ இன்று 800 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்ற ஜாதி மல்லி 360 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்ற காக்கட்டான் 500 ரூபாய்க்கும், 140 ரூபாய்க்கு விற்ற நந்தியாவட்டம் இன்று 500 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி 140 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆனாலும் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
- ஏற்காட்டில் மகளிர் திட்ட அலுவலகத்தில் ஏற்காடு வட்டார அளவிலான பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது.
- ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மகளிர் திட்ட அலுவலகத்தில் ஏற்காடு வட்டார அளவிலான பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது. ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ஊராட்சி ஒன்றிய மேலாளர் கென்னடி, மகளிர் திட்ட வட்டார மேலாளர் மகாலிங்கம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஊட்டச்சத்து திருவிழாவில் ஏற்காட்டில் உள்ள 9 ஊராட்சியில் உள்ள மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு ராகி, சாமை, வரகு போன்ற பல்வேறு தானியங்களை வைத்து தயாரித்த பாரம்பரிய உணவு வகைகளை பார்வைக்கு வைத்தனர். இந்த உணவுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சுவைத்து பார்த்து சிறப்பாக செய்திருந்த 3 குழுக்களை தேர்ந்தெடுத்தனர்.
இதன்படி ஏற்காடு ஊராட்சியை சேர்ந்த பி.எல்.எப் குழு, மாரமங்கலம் ஊராட்சியை சேர்ந்த பனித்துளி மகளிர் குழு, வெள்ளக்கடை ஊராட்சியை சேர்ந்த சிறகுகள் மகளிர் குழு ஆகிய குழுக்கள் தேர்தெடுக்கப்பட்டனர். இந்த 3 குழுக்கள் மாவட்ட அளவில் நடைபெற இருக்கும் உணவு ஊட்டச்சத்து திருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன் மற்றும் மோகன் ஆகியோர் செய்திருந்தனர்.
- சேலம் எருமாபாளையம் டெப்போவில் இருந்து தடம் எண் 7 என்ற சிறப்பு பஸ் சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு இயக்கப்பட்டது.
- ஆத்தூருக்கு கட்டணமான 36 ரூபாய்க்கு பதிலாக 57 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
சேலம்:
தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 400-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதில் சேலம் எருமாபாளையம் டெப்போவில் இருந்து தடம் எண் 7 என்ற சிறப்பு பஸ் சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் ஆத்தூருக்கு கட்டணமான 36 ரூபாய்க்கு பதிலாக 57 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
இதில் பயணித்த ஆத்தூரை சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முருகேசன் என்பவர் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகவும், சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு செல்ல 3 மணி நேரத்திற்கு மேல் ஆனதாகவும் ஆத்தூர் கிளை மேலாளர் வெங்கடேசனிடம் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சேலம்-ஆத்தூர் தடத்தில் 56 கிலோ மீட்டருக்கு 36 ரூபாய் டிக்கெட் என குறிப்பிட்டு இருந்த நிலையில் கண்டக்டர் செங்கோட்டையன் கூடுதல் கட்டணமாக 57 ரூபாய் வசூலித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கண்டக்டர் செங்கோட்டையன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மேலாளர் பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில் செங்கோட்டையனை சஸ்பெண்டு செய்து சேலம் போக்குவரத்து கழக பொது மேலாளர் உத்தரவிட்டார். மேலும் பஸ் மெதுவாக இயக்கப்பட்டது தொடர்பாக டிரைவர் மாரிமுத்துவிடம் விளக்கம் கேட்டு நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சுதாவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மூச்சு திணறல் இருந்து வந்ததும், இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டி வலசு பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் செந்தில் (32), இவர் கொங்கணாபுரம் அருகே உள்ள தங்காயூரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலைப்பார்த்து வருகிறார்.
இவருக்கும் எடப்பாடி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது மகள் சுதா (27), என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் சுதாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது தாய் சின்ன பொண்ணு என்பவர் சுதாவை எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது வழியிலேயே சுதா மயங்கினார்.
இதையடுத்து அவரது தாயார் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் சுதாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அப்போது சுதா இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது சுதாவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மூச்சு திணறல் இருந்து வந்ததும், இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது.
திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






