என் மலர்
நீங்கள் தேடியது "Conductor suspended"
- பயணிகளை மழையில் இறக்கி விட்டதால் நடவடிக்கை
- வேலூர் மண்டல பொது மேலாளர் உத்தரவு
பேரணாம்பட்டு:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டு பேரணாம்பட்டுக்கு சென்றது.
அந்த பஸ்சின் டிரைவர் வெங்கடேசனும், கண்டக்டர் சத்திய நாராயணனும் பயணிகளை பேரணாம்பட்டு பஸ் நிலையத்தில் இறக்கி விடாமல் கொட்டும் மழையில் 1.5 கிலோமீட்டர் முன்பாக புத்துக்கோவில் சந்திப்பு சாலையில் இறக்கி விட்டு சென்றனர்.
மேலும் பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பாமல் அவரையும் டிப்போவில் விட்டு சென்றனர். இந்த சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவலறிந்த வேலூர் மண்டல பொது மேலாளர் கணபதி, பேரணாம்பட்டு கிளை மேலாளர் ரமேஷை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.
விசாரணையில் பயணிகளை நடுரோட்டில் இறக்கி விடப்பட்ட சம்பவம் உறுதியானது. இதனையடுத்து நேற்றிரவு அரசு பஸ் டிரைவர் வெங்கடேசன், கண்டக்டர் சத்திய நாராயணன், டெப்போ செக்யூரிட்டி கவுதமன் ஆகிய 3 பேரை சஸ்பெண்டு செய்து வேலூர் மண்டல பொது மேலாளர் கணபதி உத்தரவிட்டுள்ளார்.
- சேலம் எருமாபாளையம் டெப்போவில் இருந்து தடம் எண் 7 என்ற சிறப்பு பஸ் சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு இயக்கப்பட்டது.
- ஆத்தூருக்கு கட்டணமான 36 ரூபாய்க்கு பதிலாக 57 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
சேலம்:
தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 400-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதில் சேலம் எருமாபாளையம் டெப்போவில் இருந்து தடம் எண் 7 என்ற சிறப்பு பஸ் சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் ஆத்தூருக்கு கட்டணமான 36 ரூபாய்க்கு பதிலாக 57 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
இதில் பயணித்த ஆத்தூரை சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முருகேசன் என்பவர் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகவும், சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு செல்ல 3 மணி நேரத்திற்கு மேல் ஆனதாகவும் ஆத்தூர் கிளை மேலாளர் வெங்கடேசனிடம் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சேலம்-ஆத்தூர் தடத்தில் 56 கிலோ மீட்டருக்கு 36 ரூபாய் டிக்கெட் என குறிப்பிட்டு இருந்த நிலையில் கண்டக்டர் செங்கோட்டையன் கூடுதல் கட்டணமாக 57 ரூபாய் வசூலித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கண்டக்டர் செங்கோட்டையன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மேலாளர் பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில் செங்கோட்டையனை சஸ்பெண்டு செய்து சேலம் போக்குவரத்து கழக பொது மேலாளர் உத்தரவிட்டார். மேலும் பஸ் மெதுவாக இயக்கப்பட்டது தொடர்பாக டிரைவர் மாரிமுத்துவிடம் விளக்கம் கேட்டு நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பஸ்சில் பொருட்கள் வைக்கும் பகுதியில் பெரிய பார்சல் ஒன்று இருந்தது.
- பஸ் புதுச்சேரி பஸ் நிலையம் வந்தபோது அதை சக ஊழியர்கள் முன்னிலையில் பிரித்து பார்த்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி- பெங்களூரு இடையே அரசு (பி.ஆர்.டி.சி.) பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல் சம்பவத்தன்று புதுச்சேரி அரசு பஸ் பெங்களூருலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரிக்கு புறப்பட்டு வந்தது.
அந்த பஸ்சை டிரைவர் அரிதாஸ் ஓட்டி வந்தார். கண்டக்டராக வெங்கடாசலபதி (வயது 53) பணியில் இருந்தார். இந்த பஸ் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் வந்தபோது பி.ஆர்.டி.சி. பறக்கும் படையினர் பஸ்சில் ஏறி திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது பஸ்சில் பொருட்கள் வைக்கும் பகுதியில் பெரிய பார்சல் ஒன்று இருந்தது. அந்த பார்சல் யாருடையது? என்ற விவரமும் இல்லை. இந்த பார்சல் சம்பந்தமாக பறக்கும் படையினர் கண்டக்டர் வெங்கடாசலபதியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை.
இதனிடையே பஸ் புதுச்சேரி பஸ் நிலையம் வந்தபோது அதை சக ஊழியர்கள் முன்னிலையில் பிரித்து பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருந்தது.
இதுகுறித்து மேலாண் இயக்குனர் சிவகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பஸ் கண்டக்டர் வெங்கடாசலபதியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார்.
இந்த போதைப்பொருட்களை புதுச்சேரிக்கு அனுப்பியவர்கள் யார்? போதைப்பொருள் கும்பலுக்கும் பஸ் ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதா? இதுபோன்று பெங்களூருரில் இருந்து புதுச்சேரிக்கு போதைப்பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வந்ததா? என்பது குறித்து துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து கவுந்தப்பாடிக்கு (எண்17) டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருக்கிறது.
இந்த பஸ்சில் திடீரென இந்தி எழுத்தால் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.
அதாவது ஊர் போர்டுக்கு மேலே பெருந்துறை மார்க்கெட் என்று ஆங்கிலத்திலும் அதன் கீழே இந்தி எழுத்திலும் பெயர் இருந்தது.
இதை கண்ட பொது மக்கள் குறிப்பாக சமூக ஆர்வலர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்தி எழுத்தில் ஊர் பெயரா? என ஆச்சரியப்பட்டனர். தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் இந்தி திணிக்கப்பட்டு வருகிறது. அதே போல் பஸ்களிலும் இந்தியை கொண்டு வந்து விட்டார்களா? என்று ஒருவருக்கொருவர் பரபரப்பாக பேசிக்கொண்டனர்.
அந்த பஸ்சில் பயணம் செய்த ஒரு பயணி இந்தி எழுத்தால் எழுதப்பட்ட ஊர் பெயர் போர்டை படம் எடுத்து சமூக வலைதளத்திலும் வாட்ஸ்- அப்பிலும் பரவ விட்டார்.
இது மேலும் பலருக்கு பரவ அவர்களும் அதிர்ச்சி அடைந்து இது குறித்து தங்கள் எதிர்ப்பு கருத்தை வாட்ஸ்-அப்பில் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் மேலும் பரவ இது தொடர்பாக அந்த பகுதி வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் கேட்டபோது, “பெருந்துறை சிப்காட் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் பெருந்துறை சந்தைக்கு வருவார்கள். பஸ்சில் ஊர் பெயர் தெரியாமல் வேறு பஸ்சில் சென்று ஏமாற்றம் அடைகிறார்கள். இதற்காகத் தான் அவர்கள் தெரிந்து கொள்ள இந்தியில் பெருந்துறை மார்க்கெட் என போர்டில் பொறிக்கப்பட்டது. வேறு எந்த காரணத்துக்காகவும் அல்ல. இந்தியை திணிக்க வேண்டும் என்பதற்காகவும் அல்ல” என்று கூறினார்.
இந்தியில் எழுதப்பட்ட விவகாரம் மேலும் பரபரப்பாக பேச சம்பந்தப்பட்ட அரசு டவுன் பஸ்சில் இருந்த இந்தி எழுத்து உடனடியாக அழிக்கப்பட்டு விட்டது.
மேலும் அந்த பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்த சீனிவாசன் என்பவர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் சஸ்பெண்டு செய்து ஈரோடு கோட்ட பொது மேலாளர் உத்தரவிட்டார். #Tamilnews






