என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருட்கள் கடத்தல்"

    • கீழ் தலத்தில் உள்ள வகுப்பறையில் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்க, மேல் தலத்தில் இந்த உற்பத்தி நடந்து வந்துள்ளது.
    • வார நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட போதைப்பொருள்கள், பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்பட்டு வந்தன.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் பள்ளியில் போதைபொருள் தயாரிக்கப்பட்டு வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மேதா என்ற பள்ளியில் பள்ளி நிர்வாகி மலேலா ஜெய பிரகாஷ் கவுட் தலைமையில், மேல் தலத்தில் உள்ள கெமிஸ்ட்ரி லேபில் Alprazolam என்ற போதைப்பொருள் தயாரிப்பு கடந்த 6 மாதங்களாக நடந்து வந்துள்ளது. 

    கீழ் தலத்தில் உள்ள வகுப்பறையில் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்க, மேல் தலத்தில் இந்த உற்பத்தி நடந்து வந்துள்ளது.

    வார நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட போதைப்பொருள்கள், பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்பட்டு வந்தன.

    இதுதொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் 7 கிலோ Alprazolam, ரூ.21 லட்சம் பணம், போதைப்பொருள் தயாரிப்பாக்கான கச்சா பொருட்கள், உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. ஜெய பிரகாஷ் மற்றும் அவரின் 2 சகாக்கள் கைது செய்யப்பட்டனர். 

    • ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து இளவரசன், அஜித் ஆண்டனி, வேலுச்சாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இரவு நேர ரோந்து பணியை தீவிரபடுத்தியுள்ளார். மாவட்டம் முழுவதும் போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு உரிய வகையில் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் தடை செய்யப்பட்ட 100 கிலோ குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து காரில் இருந்த 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கவுந்தபாடி, பெரியபுலியூர் பகுதியை சேர்ந்த இளவரசன் (32), அம்மாபேட்டை பூதப்பாடி பகுதியை சேர்ந்த டிரைவர் அஜித் ஆண்டனி (26), கோபி நல்லதம்பி நகரை சேர்ந்த வேலுச்சாமி (60) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இதில் காய்கறி வியாபாரம் செய்து வரும் வேலுச்சாமி, இளவரசனிடம் இருந்து குட்கா பொருட்களை பெற்று அதை கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து இளவரசன், அஜித் ஆண்டனி, வேலுச்சாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 100 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

    • யாருடைய முகமும் தங்களுக்கு தெரியாது என்று போதை விற்பனை கும்பல் தெரிவித்துள்ளனர்.
    • கஞ்சா சிகரெட்டுகள் ஆகியவையும், 2 கார்கள், 5 செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் ஏ.புதுப்பட்டி பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் கொடைக்கானலில் இருந்து கம்பம் நோக்கி சென்ற கேரள பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அதில் 250 கிராம் கஞ்சா, ஒரு பாக்கெட் கஞ்சா சிகரெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. காரில் 50 கிராம் எடை கொண்ட 30 மெத்தபட்டமைன் போதை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவரவே அதனை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.1.75 லட்சமாகும். இதனை தொடர்ந்து காரில் வந்த கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த விகாஸ் ஷியாம் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த ஆரிப் ராஜா (22), கம்பம் நாராயணதேவன்பட்டியை சேர்ந்த ராம்குமார் (33) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்களுடன் வந்த சல்மான் என்பவர் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் பெங்களூரில் இருந்து ஆன்லைன் பணபரிவர்த்தனை செய்து போதை பொருட்களை விற்று வந்தது தெரியவந்தது. போதை கும்பல் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்க ளில் தேடுதல்வேட்டை மேற்கொண்டனர். கோவையை சேர்ந்த அன்பழகன் (25), வருசநாடு பகுதியை சேர்ந்த ஆனந்த் (23), பெங்களூரை சேர்ந்த யாசர் முத்தர் (23) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.1.25 லட்சம் மதிப்பிலான 25 கிராம் மெத்தபட்டமைன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட 6 பேர்களையும் தேனி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவின் பேரில் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 85 கிராம் மெத்தபட்டமைன், 10 கிராம கோகைன், போதை ஸ்டாம்பு, கஞ்சா சிகரெட்டுகள் ஆகியவையும், 2 கார்கள், 5 செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    முக்கிய குற்றவாளி களான நோகன் மற்றும் சல்மான் ஆகியோர் கேரளா மற்றும் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

    இந்த கும்பல் கொடைக்கானலில் பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எவ்வளவு விலை கொடுத்தும் போதை பொருட்களை வாங்கிவிடுவார்கள் என்பதால் அதுபோன்ற நபர்களை குறிவைத்து இவற்றை விற்பனை செய்து வந்துள்ளனர். ஆன்லைன் உணவு டெலிவரி போல பணத்தை செலுத்தியதும், அவர்கள் இருக்கும் இடத்திற்கு போதை பொருட்கள் வந்து சேர்ந்துவிடும். இதனால் யாருடைய முகமும் தங்களுக்கு தெரியாது என்று போதை விற்பனை கும்பல் தெரிவித்துள்ளனர். இதன் நெட்ஒர்க் பல மாநிலங்களை கடந்து செல்வதால் மேலும் பலர் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பஸ்சில் பொருட்கள் வைக்கும் பகுதியில் பெரிய பார்சல் ஒன்று இருந்தது.
    • பஸ் புதுச்சேரி பஸ் நிலையம் வந்தபோது அதை சக ஊழியர்கள் முன்னிலையில் பிரித்து பார்த்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி- பெங்களூரு இடையே அரசு (பி.ஆர்.டி.சி.) பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல் சம்பவத்தன்று புதுச்சேரி அரசு பஸ் பெங்களூருலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரிக்கு புறப்பட்டு வந்தது.

    அந்த பஸ்சை டிரைவர் அரிதாஸ் ஓட்டி வந்தார். கண்டக்டராக வெங்கடாசலபதி (வயது 53) பணியில் இருந்தார். இந்த பஸ் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் வந்தபோது பி.ஆர்.டி.சி. பறக்கும் படையினர் பஸ்சில் ஏறி திடீர் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது பஸ்சில் பொருட்கள் வைக்கும் பகுதியில் பெரிய பார்சல் ஒன்று இருந்தது. அந்த பார்சல் யாருடையது? என்ற விவரமும் இல்லை. இந்த பார்சல் சம்பந்தமாக பறக்கும் படையினர் கண்டக்டர் வெங்கடாசலபதியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை.

    இதனிடையே பஸ் புதுச்சேரி பஸ் நிலையம் வந்தபோது அதை சக ஊழியர்கள் முன்னிலையில் பிரித்து பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருந்தது.

    இதுகுறித்து மேலாண் இயக்குனர் சிவகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பஸ் கண்டக்டர் வெங்கடாசலபதியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார்.

    இந்த போதைப்பொருட்களை புதுச்சேரிக்கு அனுப்பியவர்கள் யார்? போதைப்பொருள் கும்பலுக்கும் பஸ் ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதா? இதுபோன்று பெங்களூருரில் இருந்து புதுச்சேரிக்கு போதைப்பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வந்ததா? என்பது குறித்து துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது.

    ×