search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில் பாரம்பரிய உணவு திருவிழா
    X

    பாரம்பரிய உணவுகளை சமைத்து பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த காட்சி.

    ஏற்காட்டில் பாரம்பரிய உணவு திருவிழா

    • ஏற்காட்டில் மகளிர் திட்ட அலுவலகத்தில் ஏற்காடு வட்டார அளவிலான பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது.
    • ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மகளிர் திட்ட அலுவலகத்தில் ஏற்காடு வட்டார அளவிலான பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது. ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ஊராட்சி ஒன்றிய மேலாளர் கென்னடி, மகளிர் திட்ட வட்டார மேலாளர் மகாலிங்கம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த ஊட்டச்சத்து திருவிழாவில் ஏற்காட்டில் உள்ள 9 ஊராட்சியில் உள்ள மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு ராகி, சாமை, வரகு போன்ற பல்வேறு தானியங்களை வைத்து தயாரித்த பாரம்பரிய உணவு வகைகளை பார்வைக்கு வைத்தனர். இந்த உணவுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சுவைத்து பார்த்து சிறப்பாக செய்திருந்த 3 குழுக்களை தேர்ந்தெடுத்தனர்.

    இதன்படி ஏற்காடு ஊராட்சியை சேர்ந்த பி.எல்.எப் குழு, மாரமங்கலம் ஊராட்சியை சேர்ந்த பனித்துளி மகளிர் குழு, வெள்ளக்கடை ஊராட்சியை சேர்ந்த சிறகுகள் மகளிர் குழு ஆகிய குழுக்கள் தேர்தெடுக்கப்பட்டனர். இந்த 3 குழுக்கள் மாவட்ட அளவில் நடைபெற இருக்கும் உணவு ஊட்டச்சத்து திருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன் மற்றும் மோகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×