என் மலர்tooltip icon

    சேலம்

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:- வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஓட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை அன்று மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேலம்:

    ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தங்க கவசம்

    சேலம் கோட்டை மாரி யம்மன் கோவிலில் அம்ம னுக்கு தங்க கவச அலங்கா ரம் செய்யப்பட்டது. பக்தர் கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை வழிபட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ், பிரசாதம் வழங்கப்பட்டது.

    சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திர வியங்களால் சிறப்பு அபி ஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அம்ம னுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனை காண அப்பகுதி யில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.

    தாலி கயிறு

    இதேபோல எல்லை பிடாரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு தாலி கயிறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மந்திரங்கள் ஓத அர்ச்ச னைகள் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ரத்தின அங்கி

    நெத்திமேடு தண்ணீர் பந்தல் மகா காளியம்மன் கோவிலில் ரத்தின அங்கி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.

    இதே போல சேலம் மாநகரில் அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, கிச்சிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து இருந்தது. அவர்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனை காண வந்த பக்தர்கள் அனைவருக்கும் மாங்கல்யம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையால் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 577 கிலோ எடை உள்ள கஞ்சா நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்தது.
    • இதனை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் உயர் அலுவலர்கள் முன்னிலையில் போலீசார் தீயிட்டு அழித்தனர்.

    எடப்பாடி:

    சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையால் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 577 கிலோ எடை உள்ள கஞ்சா நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்தது.

    இதனை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் உயர் அலுவலர்கள் முன்னிலையில் போலீசார் தீயிட்டு அழித்தனர்.

    எடப்பாடி- சங்ககிரி பிரதான சாலையில் உள்ள மருத்துவக் கழிவு எரியூட்டும் நிலையத்தில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானிஸ்ரீ முன்னிலையில் சுமார் 577 கிலோ கஞ்சாவினை போலீசார் தீயிட்டு எரித்தனர்.

    இந்நிகழ்வின்போது டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், திருப்பூர் மாநகர துணை ஆணையர் ஆசைத்தம்பி, சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் சேலம் விரிவடைந்து வருகிறது .இதனால் வாகன போக்குவரத்தும் பல மடங்கு பெருகி உள்ளது.
    • பல சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் முடிக்கப்படாமல் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மிக மோசமாக காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் சேலம் விரிவடைந்து வருகிறது .இதனால் வாகன போக்குவரத்தும் பல மடங்கு பெருகி உள்ளது.

    பாதாள சாக்கடை பணிகள்

    ஆனால் சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் கியாஸ் குழாய் பதிப்பு போன்ற பல்வேறு பணிகளால் பல சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் முடிக்கப்படாமல் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மிக மோசமாக காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    ஓமலூர் மெயின் ரோடு

    சேலம் ஓமலூர் மெயின் ரோட்டில் டி.வி.எஸ்.பஸ் ஸ்டாப் அருகே இருந்து அங்கம்மாள் காலனி செல்லும் சாலை கடந்த மூன்று மாதங்களாக ஜல்லி கொட்டி ரோடுகள் போடாமல் அப்படியே உள்ளது.

    இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனம் உட்பட எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களில் வருவோர் இறங்கி தள்ளி செல்லும் நிலை நீடிக்கிறது. அங்குள்ள அ.தி.மு.க. அலுவலகம் அருகே பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக பணி முடியாமல் உள்ளது . இதனால் அந்த சாலை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நகர மலை அடிவாரம்

    குரங்கு சாவடியில் இருந்து நகரமலை அடிவாரம் செல்லும் சாலை கடந்த மூன்று ஆண்டு களாக சீர மைக்கப்படாமலே உள்ளது. இதனால் அந்த சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் புலம்பி தவிக்கிறார்கள்.

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கல்லாங்குத்து பகுதியில் சாலை அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடைபெறு வதால் அந்த சாலை கடந்த சில மாதங்களாக போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

    அதேபோல சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து களரம்பட்டி செல்லும் மெயின் ரோடு, எருமா பாளையம் மற்றும் சன்னியாசிகுண்டு செல்லும் பிரதான சாலைகள் சீரமைக்கப்படாமல் பல ஆண்டுகளாக மோசமான நிலையில் உள்ளது .இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.

    அம்மாபேட்டை

    சேலம் அம்மாபேட்டை ஜெயா தியேட்டர் முன்புள்ள ரோடு கான்கிரீட் ரோடாக போடும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது . அந்த பணிகளும் இன்னும் நிறைவு பெறாததால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் பல ரோடுகளை சுற்றி செல்லும் நிலை இன்றும் நீடிக்கிறது.தாதகாப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் ரோடு சீரமைப்பு பணி தொடங்கியும் பணிகள் நிறைவு பெறாதால் அந்த சாலையும் மிக மோசமாக காட்சியளிக்கிறது .

    ரெட்டியூர் மெயின் ரோடு

    இதேபோல சேலம் ரெட்டியூர் மெயின் ரோடு பணிகள் முடியாமல் அரைகுறையாக கடந்த 6 மாதமாக இருப்பதால் அந்த சாலையிலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் வாகன ஓட்டிகள் தவித்து வருகிறார்கள்.

    குகை காளியம்மன் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. ஆனால் அந்த கோவில் அருகே உள்ள சாலைகள் பல மாதங்களாகியும் இன்னும் பணி முடியாத நிலையே நீடிக்கிறது. இதனால் அந்த வழியாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் செல்லவும் குகை பெரியார் வளைவு செல்லவும் முடியாததால் திருச்சி குகை மெயின் ரோட்டில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.இந்த சாலையில் ஆம்புலன்ஸ் கூட வெகு நேரம் காத்து நின்று செல்லும் நிலை ஒவ்வொரு நாளும் பலமுறை ஏற்படுகிறது.

    முள்ளுவாடி கேட்

    சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளாக பாலப்பணி நடைபெற்று வருகிறது.இதனால் ெரயில் செல்லும் நேரங்களில் ெரயில்வே கேட் மூடப்பட்டு பின்னர் திறந்து விடப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் ஒவ்வொரு முறையும் ரெயில்கள் செல்லும்போது அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.

    இதே போல சேலம் மாநகரின் பல்வேறு சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே மோசமான நிலையில் உள்ள அனைத்து சாலைகளையும் போர்க்கால அடிப்படை யில் சீரமைக்க வேண்டும் என்பது சேலம் மாநகர பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சேலம் அரசு கலைக் கல்லுாரில் அறிவியல் கண்காட்சி மற்றும் புதிய கருவிகள் படைப்புத்திறன் போட்டி நடைபெற்றது.
    • இப்போட்டியில், சிறப்பிடம் பெற்ற 100 மாணவர்களை பெங்களூரு அருகிலுள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.

    வாழப்பாடி:

    மறைந்த ஜனாதிபதி விஞ்ஞானி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 91-–வது பிறந்தநாளையொட்டி, கடந்த 2022–-23 –ஆம் கல்வியாண்டில் சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புத்திறனை வளர்க்கும் நோக்கில், சேலம் அரசு கலைக் கல்லுாரில் அறிவியல் கண்காட்சி மற்றும் புதிய கருவிகள் படைப்புத்திறன் போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியில், சிறப்பிடம் பெற்ற 100 மாணவர்களை பெங்களூரு அருகிலுள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.

    இத்திட்டத்தின் படி, முதற்கட்டமாக அரசு மாணவர்கள் 50 பேர் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வாயிலாக இன்று வெள்ளிக்கிழமை பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இந்த குழுவில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர்கள் ச.சபரி, கோ. தாமரைக் கண்ணன், 10–-ம் வகுப்பு மாணவர் கவுதமணி, 11-ம் வகுப்பு மாணவர் மேகநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    முதன்முறையாக, அரசு செலவில் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட செல்லும் மாணவர்களுக்கு பள்ளித் தலைமையாசிரியர் வெங்கடாஜலம் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டி அனுப்பி வைத்தனர்.

    • சங்ககிரி வேளாண்மை துறையில் சம்பா பட்ட விதைப்புக்கு தேவையான சீரக சம்பா, தங்க சம்பா, தூய மல்லி உள்ளிட்ட பாரம்பரிய ரக நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
    • வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    சங்ககிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விமலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சங்ககிரி வேளாண்மை துறையில் சம்பா பட்ட விதைப்புக்கு தேவையான சீரக சம்பா, தங்க சம்பா, தூய மல்லி உள்ளிட்ட பாரம்பரிய ரக நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சம்பா பட்ட விதைப்புக்கு ஏடி.டி-45, டி.கே.எம்-13, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி ஆகிய ஆதார நெல் ரக விதைகளும், ஏடிடி-53 சான்று நெல் ரக விதைகளும், சீரக சம்பா, தங்க சம்பா, தூய மல்லி ஆகிய பாரம்பரிய நெல் ரக விதைகளும், விதை நேர்த்தி செய்வதற்கான உயிர் உரங்களான அசோஸ்பைரிலும், பாஸ்போ பாக்டீரியா மற்றும் நெல் நுண்ணூட்டங்களும் மானிய விலையில் சங்ககிரி, தேவூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (50), தொழிலாளியான இவர் நேற்றிரவு சில்லி சிக்கன் வாங்குவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார்.
    • அந்த வழியாக வந்த சத்யமூர்த்தி (32) என்பவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (50), தொழிலாளியான இவர் நேற்றிரவு சில்லி சிக்கன் வாங்குவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சத்யமூர்த்தி (32) என்பவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவ ரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேசன் இன்று அதிகாலை 2 மணியளவில் பரிதாபமாக இறந்தார். சத்யமூர்த்தி லேசான காயத்துடன் தப்பினார். இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தாரமங்கலம் பாட்டப்பன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (23 )இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
    • நேற்று இரவு யுவராஜ் வீட்டிற்கு சென்ற பெண்ணின் உறவினர் சிலர் யுவராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் பாட்டப்பன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (23 )இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    காதலுக்கு எதிர்ப்பு

    இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் அந்த பெண்ணை வேறொரு வருக்கு திருமணம் செய்து வைத்தனர். தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ள அந்த பெண் தனது கணவருடன் தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்தார்.

    தாரமங்கலம் பஸ் நிலை யம் அருகில் உள்ள பேக்கரி ஒன்றின் முன்பு நின்று இருந்த அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்ததாக கருதி அவருடைய அண்ணன்கள் 2 பேர் யுவ ராஜை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    மேலும் நேற்று இரவு யுவராஜ் வீட்டிற்கு சென்ற பெண்ணின் உறவினர் சிலர் யுவராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

    2 பேர் கைது

    இந்த நிலையில் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் அண்ணன்கள் 2 பேரை கைது செய்தனர்.

    • சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, சேலம் பிரதான சாலையில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.
    • இப்பகுதியை கடந்து செல்லும் போது, இரு சக்கர வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது சேறும் சகதியும் தெளித்து வருகிறது.

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, சேலம் பிரதான சாலையில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. குட்டையாக நிற்கும் மழைநீரில் குப்பை, மண் சேர்ந்து சகதியாக மாறியதால், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் இப்பகுதியை கடந்து செல்லும் போது, இரு சக்கர வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது சேறும் சகதியும் தெளித்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சாலையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க போதிய வடிகால் வசதி ஏற்படுத்தவும், தேங்கி கிடக்கும் சேறும், சகதியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நேரடியாக விற்பனை செய்வதற்கு வசதியாக வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள்,
    • பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பகுதி கிரா மங்களில் விளை விக்கப்ப டும் தக்காளி, தேங்காய் உள்ளிட்ட அனைத்து ரக காய்கறிகள், வாழைத்தார் மற்றும் பல்வேறு வகையான பூக்கள் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை வாழப்பாடியில் இயங்கும் தனியார் ஏல மண்டிகளிலேயே விற்பனை செய்து வருகின்றனர்.

    எனவே விவசாயிகள் அன்றாடம் அறுவடை செய்யும் காய்கறிகளை , நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கு வசதியாக வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து அரசு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வாழப்பாடி யில் உழவர் சந்தை அமைக்க முன் வந்தது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வந்து செல்வதற்கு பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய வாழப்பாடியில் பல இடங்களை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குழுவினர் பார்வையிட்ட னர். இறுதியாக, வாழப்பாடி கிழக்கு பள்ளக்காடு பகுதி யில் கடலுார் சாலையில் தனியார் பள்ளிக்கு அருகிலுள்ள அரசு பாதை புறம்போக்கு நிலத்தில் உழவர் சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு திட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டது.

    நிதி ஒதுக்கீடு

    இதற்கு வேளாண் விற்பனை மற்றும் வணிக வரித்துறை இசைவு தெரி வித்ததால், கட்டுமானப்பணி களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.

    இதனையடுத்து, வாழப்பாடியில் உழவர் சந்தை கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் தொடங்கி யுள்ளது. இதனால், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், நுகர்வோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    உழவர் சந்தை அமைப்ப தற்கு வழிவகை செய்த முன்னாள் எம்.எல்.ஏ.

    எஸ்.ஆர்.சிவலிங்கம், வட்டார ஆத்மா குழு தலை வர் எஸ்.சி. சக்கரவர்த்தி, பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மே கம், வாழப்பாடி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுக்கும், விவ சாயிகளும், பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.  

    • சேலம் இரும்பாலை பகு தியில் உள்ள சாலை வழியாக காரில் குட்கா கடத்தி வருவதாக கொண்ட லாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • வேகமாக வந்த ஒரு காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 40 பைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை பகு தியில் உள்ள சாலை வழியாக காரில் குட்கா கடத்தி வருவதாக கொண்ட லாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றிரவு போலீசார் உதவி கமிஷனர் ஆனந்தி தலைமையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    430 கிலோ குட்கா

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 40 பைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 430 கிலோ எடை கொண்ட அந்த குட்காவின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.

    இதையடுத்து அந்த காரை குட்காவுடன் பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில்,அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த பர்வீன் (24), தயாராம் மாலி (20) என்பது தெரிய வந்தது.

    தொடர் விசாரணை

    மேலும் அவர்கள் குட்காவை பெங்களூர் மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு கடத்தி சென்றதும், வாகன சோனையில் போலீசாரிடம் சிக்கியதும் தெரிய வந்தது. ெதாடர்ந்து அவ ர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாகனத்தில் வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு ஆகஸ்டு 20 மதுரை என்ற வாசகம் இலச்சினையுடன் பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது.
    • மாநாட்டின் தொடக்க விழா பாடல் பிரசார வாகனம் மூலமாக ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.

    சேலம்:

    அ.தி.மு.க. சார்பில் மதுரையில் வருகிற 20-ந்தேதி பொன்விழா எழுச்சி மாநாடு நடத்தப்படும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்தார்.

    இந்த மாநாட்டை மதுரை ரிங் ரோடு வலையங்குளம் கருப்பசாமி கோவில் எதிரில் நடத்த பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்பதால் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு இந்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி எடப்பாடி பழனிசாமி அணியினர் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்த தயாராகி வருகிறார்கள். இதற்காக பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மேலும் கட்சியினர் இடையே மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வாகன பிரசாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக பிரசார வாகனம் தயார் செய்யப்பட்டது. ரதம் போல தயார் செய்யப்பட்ட இந்த வாகனம் நேற்றிரவு சேலத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து இந்த வாகனத்தின் பிரசார தொடக்க விழா நிகழ்ச்சி சேலம் நெடுஞ்சாலை நகரில் இன்று காலை நடந்தது.

    இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மதுரை பொன்விழா மாநாடு பிரசார வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அந்த வாகனத்தில் வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு ஆகஸ்டு 20 மதுரை என்ற வாசகம் இலச்சினையுடன் பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாநாட்டின் தொடக்க விழா பாடல் இந்த பிரசார வாகனம் மூலமாக ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்த பிரசார வாகனம் இன்று சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. பிரசார வாகனத்துடன் தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்பட அ.தி.மு.க.வினர் 100 பேர் வாகனங்களில் செல்கிறார்கள்.

    தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வருகின்ற 20-ந்தேதி அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டிற்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் விதமாக இந்த வாகனம் இயக்கப்படவுள்ளது.

    இந்த பிரசார வாகனம் தொடக்க நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், பகுதி செயலாளர்கள் சரவணன், முருகன், மாரியப்பன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், மண்டல துணைத் தலைவர் கவுரிசங்கர், சேலம் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வக்கீல் கனகராஜ், மதுரை மாவட்ட இணைச் செயலாளர் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×