என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் மாநகராட்சியில் 800-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளனர்.
    • தாங்கள் ஏற்கனவே வேலை பார்த்த இடத்திலேயே மீண்டும் பணி அமர்த்த வேண்டும் என்றும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சியில் 800-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் மாநகராட்சியில் சேரும் குப்பைகளை அள்ளி வாகனங்கள் மூலம் குப்பை கொட்டும் பகுதிக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கிச்சிப்பாளையம், அழகாபுரம், செவ்வாய்ப்பேட்டை உள்பட பல பகுதிகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் செட்டிசாவடி மற்றும் அம்மாபேட்டை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு குப்பைகளை அரைக்கும் பணிக்கு இடமாற்றம் செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று திரண்டனர். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும் தாங்கள் ஏற்கனவே வேலை பார்த்த இடத்திலேயே மீண்டும் பணி அமர்த்த வேண்டும் என்றும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீஸ் உதவி கமிஷனர் வெங்க டேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியா ளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது நாங்கள் வசிக்கும் மண்டலத்துகுள்ளே எங்களுக்கு பணி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இங்கிருந்து நகர மாட்டோம். என்று கூறியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த சம்பவம் மாநகராட்சி அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அருண்குமார் (23). இவரது மனைவி மணிமொழி (22). இருவரும் வெவ்வேறு சமுதாயத்ைத சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
    • தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களை மிரட்டி வருகிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள வெள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (23). இவரது மனைவி மணிமொழி (22). இருவரும் வெவ்வேறு சமுதாயத்ைத சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. தற்போது 5 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கலப்பு திருமண தம்பதியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அப்போது அருண்குமார் கூறியதாவது:-

    பெற்றோர் சம்மதத்துடன் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் எனது உறவினரான தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களை மிரட்டி வருகிறார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் எங்களது உயிருக்கு பாதுகாப்பில்லை. எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயா இவரது சகோதரி மகாலட்சுமி. இவர்கள் இருவரும் இன்று சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மூத்த மகன் வீட்டிற்கு செல்லுமாறு விரட்டி விடுகிறார்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் ராம் நகரை சேர்ந்தவர் ஜெயா. இவரது சகோதரி மகாலட்சுமி. இவர்கள் இருவரும் இன்று சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஜெயா கூறியதாவது:- எனக்கு ரமேஷ் , குமரேசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் தற்போது குமரேசன் வீட்டில் இருந்து வந்தேன். குமரேசன் மனைவி அங்கு இருக்க விடாமல் மூத்த மகன் வீட்டிற்கு செல்லுமாறு விரட்டி விடுகிறார். இதனால் நான் வீடு இல்லாமல் அலைகிறேன். மேலும் இது குறித்து காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் வீட்டின் மேற்கூறையில் ஏறி ஓட்டை பிரித்து விட்டு வீட்டுக்குள் புகுந்தார்.
    • சத்தத்தை கேட்டு கண்விழித்த மோகன்ராம் மற்றும் அக்கம் பக்கத்தினர் மர்ம நபரை பிடிக்க முயன்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை அருகே உள்ள பொன்னம்மாப்பேட்டை கணபதி தெருவை சேர்ந்தவர் மோகன்ராம் (வயது 72). இவரது மனைவி வத்சலா ( 68). இந்த தம்பதி நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் வீட்டின் மேற்கூறையில் ஏறி ஓட்டை பிரித்து விட்டு வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த மோகன்ராம் கழுத்தில் இருந்த 1½ பவுன் தங்கச் சங்கிலி மற்றும் செல்போனை திருடிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற முற்படும்போது திடீரென வத்சலா கண் விழித்தார். அவர் திருடனை பார்த்ததும் கூச்சலிட்டார். இந்த சத்தத்தை கேட்டு கண்விழித்த மோகன்ராம் மற்றும் அக்கம் பக்கத்தினர் மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார்.இதுகுறித்து மோகன்ராம் கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைவரிசை காட்டிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    • பசுமை வெளி பூங்காவில் இன்று காலை 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பசுமை வெளி பூங்காவில் இன்று காலை 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் ஸ்ரீராம்புரம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 43) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் எதற்காக சேலம் வந்தார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.
    • தக்காளி வரத்து அதிகரித்ததால் படிப்படியாக விலை சரிந்து நேற்று முன்தினம் , முதல் தர தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனையானது.

    சேலம்:

    சேலம் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.

    சேலம் மார்க்கெட்டுகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தக்காளி வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிக பட்சமாக 160 ரூபாய் வரை விற்பனையானது. பின்னர் வரத்து அதிகரித்ததால் படிப்படியாக விலை சரிந்து நேற்று முன்தினம் , முதல் தர தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும்விலை உயர்ந்து ஒரு கிலோ முதல் தர தக்காளி 80 ரூபாய்க்கும், 2-ம் தரம் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    மற்ற காய்கிறிகளில் விலை விவரம் வருமாறு-

    சின்னவெங்காயம் 60 முதல் 80, கேரட் 100-120, கத்திரி 40-60, பச்சை மிளகாய் 100-120, வெண்டைக்காய் 40-50, உருளை கிழக்கு 40-60, பெரிய வெங்காயம் 25-30, பீன்ஸ் 100-110, முருங்கைக்காய் 40-60, இஞ்சி ஒரு கிலோ 320 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    • தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும்.
    • விடுமுறையையொட்டி நேற்று முன்தினம் மற்றும் நேற்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்தனர்.

    ஏற்காடு:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கி.மீ. மிகவும் சிக்கனமான மலை வாச தலமாகும். எனவே இது ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படு கிறது.

    ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை காண தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    தென்மேற்கு

    பருவ மழை

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை யொட்டி ஏற்காட்டில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

    ஏற்காட்டிற்கு விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

    தொடர் விடுமுறை

    இந்த நிலையில் விடுமுறையையொட்டி நேற்று முன்தினம் மற்றும் நேற்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்தனர். அதுேபால் இன்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

    சுற்றுலா பயணிகள் ஏற்காடு அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் குழந்தை கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி யுடன் விளையாடினார்கள்.

    படகு சவாரி

    மேலும் சுற்றுலா பயணி கள் படகு சவாரி செய்ய படகு இல்லத்தில் குவிந்த னர். அங்கு மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சென்றவாறு சிலு சிலு காற்றுடன் இயற்கை காட்சிகளை ரசித்தனர். சுற்றுலா பயணிகள் அழகு சாதன பொருட்கள், அழகு செடி கள் உள்ளிட்டவை களும் வாங்கிச் சென்றனர்.

    • நெய்மண்டி அருணாச்சலம் தெருவில் ஒரு ரேசன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இருந்து நேற்று நள்ளிரவு ஒரு லாரியில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
    • அப்போது அந்த வழியாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் ரோந்து வந்தனர். பின்னர் அங்கு இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை நெய்மண்டி அருணாச்சலம் தெருவில் ஒரு ரேசன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இருந்து நேற்று நள்ளிரவு ஒரு லாரியில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

    போலீஸ் ரோந்து

    அப்போது அந்த வழியாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் ரோந்து வந்தனர். பின்னர் அங்கு இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதையடுத்து லாரி டிரைவர் உள்பட 6 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ரேசன் கடையில் இருந்து அரிசி மூட்டைகளை கடத்தி வாழப்பாடி அருகே உள்ள கீரிப்பட்டி பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

    6 பேர் கைது

    இது தொடர்பாக போலீசார் ஆத்தூர் பகுதியை சேர்ந்த விக்டர் ேஜம்ஸ், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சாதிக்பாஷா, வாழப்பாடியை சேர்ந்த சுப்பிரமணி, குகை பகுதியை சேர்ந்த நடேசன், ஒடிசாவை சேர்ந்த ஷாமால் கோம் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். லாரியில் 3 டன் ரேசன் அரிசி கடத்தப்படுவதற்கு தயாராக இருந்தது.

    ஊழியர் தப்பி ஓட்டம்

    இந்த நிலையில் இந்த ரேசன் கடையின் ஊழியருக்கும், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இரவு நேரம் என்பதால் யாரும் இருக்க மாட்டார்கள் என்று திட்டமிட்டு ரேசன் அரிசி கடத்த முயன்றனர்.

    • இந்தியாவின் 76-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • இதையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மகாத்மாகாந்தி மைதானத்தில் சுதந்திர தின விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

     சேலம்:

    இந்தியாவின் 76-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இைதயொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மகாத்மாகாந்தி மைதானத்தில் சுதந்திர தின விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நலத்திட்ட உதவிகள்

    மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பங்கேற்று அணி வகுப்பு மரியாதையை ஏற்று 9.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும அவர் பல்வேறு அரசு துறைகளின் மூலம் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். தொடர்ந்து 1800 மாணவ-மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கும் அவர் சமாதான புறாவையும் பறக்க விடுவதுடன் பல்வே று துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்க உள்ளார்.

    இதற்காக முதற்கட்டமாக மைதானம் முழுவதும் சமன்படுத்தப்பட்டுள்ளது.பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கு பெறுபவர்களுக்கான இடத்தில் சாமியானா பந்தல்ேபாடப்பட்டுள்ளது. ேமலும் விழாவில் கலந்து கொள்பவர்களுக்காக குடிநீர், கழிவறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    ஒத்திகை நிகழ்ச்சி

    கொடியேற்றும் கம்பமும் சீரமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான நேற்று சுதந்திரதினவிழா ஒத்திகை நடந்தது. அதன்படி மாவட்ட ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்ற படி மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலனும் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஒத்திகையும் நடந்தது. இதில் 8 பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு நடனமாடி ஒத்திகையில் ஈடுபட்டனர். சுதந்திர தின விழாவையொட்டி காந்தி மைதானம் முழுவதும் போலீ ஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை நாமக்கல் நல்லி பாளையம் அரசு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா கொடியேற்றி வைத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் அவர் நல உதவிகளையும் வழங்குகிறார். இதையொட்டி அந்த மைதானம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சுதந்திர தினவிழாவையொட்டி மக்கள் கூடும் இடங்களில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    குறிப்பாக சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் பதுகாப்பு போடப்பட்டுள்ளன. இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஆத்தூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, வாழப்படி, ஓமலூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாமக்கல்லில் ஆஞ்சநேயர் கோவில், மலைக்கோட்டை உள்பட முக்கிய இடங்களிலும் புறநகரில் திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பள்ளி பாளையம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம் உள்பட மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம் மற்றும் நாமக்கல் வழியாக வடமாநிலங்களில் இருந்து செல்லும் ரெயில்களில் மோப்ப நாய் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் மூலம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும்டி ரெயில்வே போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சந்தேகப்படும் படியாக வரும் நபர்களையும் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • ரூபாய் நோட்டுக்களை வாங்கிப் பார்த்த அண்ணாதுரை அவை கள்ள நோட்டுகள் என்பதை தெரிந்து கொண்டார்.
    • கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவர் அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்த நபர் ரூ.200 நோட்டுகள் 3 கொடுத்து இறைச்சி வாங்கினார்.

    ரூபாய் நோட்டுக்களை வாங்கிப் பார்த்த அண்ணாதுரை அவை கள்ள நோட்டுகள் என்பதை தெரிந்து கொண்டார். இதையடுத்து அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் கரூர் மாவட்டம், பள்ளிப்பட்டியை சேர்ந்த உபைஸ் அலி (24) என்பதும், இவர் மேட்டூர் சதுரங்காடில் உள்ள காஜா மொய்தீன் (40) என்பவருக்கு சொந்தமான பேன்சி ஸ்டோரில் வேலை பார்த்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து சம்பந் தப்பட்ட பேன்சி ஸ்டோரில் மேட்டூர் டி.எஸ்.பி மரியமுத்து மற்றும் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.

    இதில் கலர் பிரிண்டரை பயன்படுத்தி கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது கண்டுபி டிக்கப்பட்டது. இதையடுத்து கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய செல்போன, கலர் பிரிண்டர், கள்ள நோட்டுகள், காகிதத் தாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு:-

    மேட்டூர் காவேரி நகரை சேர்ந்த முகமது அலீபா மகனான காஜாமைதீன் (40) மேட்டூரில் 3 இடங்களில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

    இவருக்கு ரூ.20 லட்சம் கடன் ஏற்பட்டது. இந்த கடனை அடைப்பதற்காக திட்டமிட்ட அவர் தனது உறவினரான தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மஜீத் தெருவை சேர்ந்த முகமது பாபு மகன் அப்துல் அகீம் (24), தனது கடையில் வேலை பார்த்த உபைஸ் அலி (24) என்பவரையும் மேட்டூருக்கு அழைத்து வந்துள்ளார்.

    பின்னர் 3 பேரும் மேட்டூர் சதுரங்காடியில் பேன்ஸி ஸ்டோரில் கலர் பிரிண்டர் ஒன்றை வைத்து, அதில் 200 ரூபாய் நோட்டுகளை செல்போன் செயலி மூலமாக நகலெடுத்து, மேட்டூர் முழுவதும் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    நேற்று காஜாமைதீன் நகல் எடுக்கப்பட்ட 200 ரூபாய் நோட்டுகளை உபைஸ் அலியிடம் கொடுத்து நாட்டுக் கோழி வாங்கி வரும்படி அனுப்பி வைத்தார்.

    இந்த நோட்டுகள் போலியானவை என இறைச்சிக் கடைக்காரர் கண்டுபிடித்து விட்டதால் இந்த கும்பல் சிக்கியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து கடை உரிமையாளர் காஜா மைதீன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    மேலும் இவர்களுக்கு கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்றும், எவ்வளவு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிப்பட்டி கிராம மக்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்தனர்.
    • விபத்தில் குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் வாயக்கால் பட்டறை வீராணம் பிரதான சாலையை சேர்ந்தவர் ஜெகதீஷ் (50), நகை கடையில் பணி புரிகிறார். இவரது மகள்கள் பிரியதர்ஷினி,வினிதா, பிரியதர்ஷிணியின் ஒரு வயது குழந்தை நிதின், நேற்று ஜெகதீஷ், வினிதா, நிதின் ஆகிய 3 பேரும் கோவிலுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினர்.

    மோட்டார் சைக்கிள் உடையாப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து குழந்தை தவறி விழுந்த நிலையில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியதால் தாத்தா கண் முன்னே அந்த குழந்தை ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தது. மற்ற 2 பேரும் லேசான காயத்துடன் தப்பினர்.

    இதற்கிடையே அங்கு திரண்ட அதிகாரிப்பட்டி கிராம மக்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்தனர். மேலும் பஸ்சில் இருந்து இறங்கிய டிரைவரையும் பொது மக்கள் துரத்தி தாக்கினர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த அம்மாப்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே பஸ் கண்ணாடியை உடைத்ததாக அதிகாரிப்பட்டியை சேர்ந்த தனீஷ்குமார் (23), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் (32), சிவசங்கர்( 20), பேளூரை சேர்ந்த விஷ்ணு (22) மற்றும் தனியார் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் தலைவாசல் நாவலூரை சேர்ந்த ரமேஷ்குமார் (42)ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அனைவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    • அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • நீர்வரத்தை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்னும் சில நாட்களில் 50 அடிக்கு கீழே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் திறப்பது அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    மேலும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யவில்லை. இதனால் இந்தாண்டு போதிய அளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வரவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் இந்தாண்டு அதிகளவில் குறைந்து விட்டது.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தண்ணீர் முழுமையாக மேட்டூர் அணையை வந்தடையவில்லை. அதிகபட்சமாக 5 ஆயிரம் கனஅடி மட்டுமே மேட்டூர் அணைக்கு வந்தது. இந்த நிலையில் படிபடியாக அதுவும் குறைந்து விட்டது.

    இதன் காரணமாக மேட்டூர் அணை குட்டை போல் மாறியது. மேலும் அணையின் நீர்தேக்க பகுதிகள் மற்றும் 16 கண் பாலம் பகுதி ஆகியவை பாளம், பாளமாக வெடித்து வறண்டு காணப்படுகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 54.69 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 415 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்னும் சில நாட்களில் 50 அடிக்கு கீழே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ×