search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் கார் முன்பு பெண்கள் திடீர்  தர்ணா
    X

    கலெக்டர் கார் முன்பு பெண்கள் திடீர் தர்ணா

    • ஜெயா இவரது சகோதரி மகாலட்சுமி. இவர்கள் இருவரும் இன்று சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மூத்த மகன் வீட்டிற்கு செல்லுமாறு விரட்டி விடுகிறார்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் ராம் நகரை சேர்ந்தவர் ஜெயா. இவரது சகோதரி மகாலட்சுமி. இவர்கள் இருவரும் இன்று சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஜெயா கூறியதாவது:- எனக்கு ரமேஷ் , குமரேசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் தற்போது குமரேசன் வீட்டில் இருந்து வந்தேன். குமரேசன் மனைவி அங்கு இருக்க விடாமல் மூத்த மகன் வீட்டிற்கு செல்லுமாறு விரட்டி விடுகிறார். இதனால் நான் வீடு இல்லாமல் அலைகிறேன். மேலும் இது குறித்து காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×