என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள படகு இல்லத்தில் படகு சவாரி செய்த காட்சி.
விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும்.
- விடுமுறையையொட்டி நேற்று முன்தினம் மற்றும் நேற்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்தனர்.
ஏற்காடு:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கி.மீ. மிகவும் சிக்கனமான மலை வாச தலமாகும். எனவே இது ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படு கிறது.
ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை காண தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
தென்மேற்கு
பருவ மழை
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை யொட்டி ஏற்காட்டில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
ஏற்காட்டிற்கு விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
தொடர் விடுமுறை
இந்த நிலையில் விடுமுறையையொட்டி நேற்று முன்தினம் மற்றும் நேற்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்தனர். அதுேபால் இன்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள் ஏற்காடு அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் குழந்தை கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி யுடன் விளையாடினார்கள்.
படகு சவாரி
மேலும் சுற்றுலா பயணி கள் படகு சவாரி செய்ய படகு இல்லத்தில் குவிந்த னர். அங்கு மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சென்றவாறு சிலு சிலு காற்றுடன் இயற்கை காட்சிகளை ரசித்தனர். சுற்றுலா பயணிகள் அழகு சாதன பொருட்கள், அழகு செடி கள் உள்ளிட்டவை களும் வாங்கிச் சென்றனர்.






