என் மலர்
சேலம்
- ஒரு பெரிய ஆட்டை சிறுத்தை கடித்து கொன்று இழுத்து சென்றது.
- ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் கடையாம்பட்டி அருகே பூசாரிப்பட்டி ஊராட்சியில் வைரன்காடு கிராமத்தையொட்டி தேங்கல்கரடு மலை பகுதி உள்ளது.
இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் விவசாயத்துடன் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் வளர்க்கும் ஆடுகளை அங்குள்ள கரட்டில் மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக எலத்தூர், குண்டுக்கல் உள்ளிட்ட வனப்பகுதி மற்றும் கரட்டு பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடி வந்துள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் வனத்துறையிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு பகுதியாக சுற்றிய சிறுத்தை வைரன்காடு பகுதியில் உள்ள தேங்கல்கரடு மலை பகுதியில் பதுங்கியது.
அப்போது விவசாயி கோவிந்தராஜ் என்பவரது 5 ஆடுகளை மேய்ச்சலுக்கு கரட்டு பகுதியில் விட்டிருந்தார். இதில் ஒரு பெரிய ஆட்டை சிறுத்தை கடித்து கொன்று இழுத்து சென்றது.
இதைக் கண்ட மற்ற 4 ஆடுகள் அங்குள்ள செங்குத்தான பாறை மீது ஏறி தப்பித்துள்ளன. அந்த பாறையின் அடியில் அடித்த ஆட்டை சாப்பிட்டுக் கொண்டு சிறுத்தை பதுங்கி இருந்தது. இதனால் பாறை மீது ஏறிய ஆடுகள் கீழே இறங்க முடியாமல் அங்கேயே தஞ்சமடைந்துள்ளன.
இதனிடைேய தனது ஆடுகளை மீட்க சென்ற கோவிந்தராஜை கண்ட சிறுத்தை விரட்டியுள்ளது. இதனால் பயந்துபோன அவர் அங்கிருந்து தப்பி ஓடி வந்தபோது கீழே விழுந்ததில் காயமடைந்தார். இதை பார்த்த கிராம மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மலையில் பதுங்கிய சிறுத்தையை தேடி வருகின்றனர். ஏற்கனவே கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ள நிலையில் டிரோன் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிறுத்தை மலை பகுதியில் பதுங்கி உள்ளதால் பொது மக்கள் யாரும் கரட்டு பகுதிக்கு செல்ல வேண்டாம். மேலும் அங்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது பற்றி அப்பகுதி பெண்கள் கூறுகையில், சிறுத்தை கரட்டில் உலாவுவதை நாங்கள் பார்த்தோம். கோவிந்தராஜை விரட்டியதை பார்த்து அச்சத்தில் உள்ளோம். சிறுத்தைக்கு தேவையான உணவு இந்த பகுதியில் கிடைப்பதால் இங்கேயே உலாவுகிறது. இதனால் சிறுத்தையை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- கல்வராயன் மலைக்கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்களான இவர்களை மரம் வெட்டும் வேலைக்கு புரோக்கர்கள் அழைத்து சென்றனர்.
- புரோக்கர்கள் நடமாட்டம் குறித்தும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் வெட்டி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது காட்டிற்குள் இருந்து செம்மரம் வெட்டி கடத்தி வந்த 48 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1588 கிலோ எடையுள்ள 51 முதல் ரக செம்மரக்கட்டைகள், 2 கார் ஒரு ஆட்டோ, 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு 2 கோடியாகும். சிக்கிய 48 பேரில் 17 பேர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
அதில் சேலம், கருமந்துறை, கரியகோவில், ஏத்தாப்பூர், ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த விஜயகுமார் (32), செந்தில் (36), ராஜேந்திரன் (30), மணி (26), கனகராஜ் (28), காமராஜ் (30), முருகேசன் (39), பழனிசாமி (34), அண்ணாமலை (40), குள்ளன் ஆண்டி (45), ஆறுமுகம் (42), சின்னபையன் (45), மாணிக்கம் (30), முருகேசன் (37), வெங்கடேஷ் (36), பழனி (43), லட்சுமணன் ( 45) ஆகியோர் என தெரிய வந்தது.
கல்வராயன் மலைக்கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்களான இவர்களை மரம் வெட்டும் வேலைக்கு புரோக்கர்கள் அழைத்து சென்றனர். அங்கு செம்மரங்களை வெட்டி ஏற்றி சென்றபோது அவர்கள் சிக்கினர். இந்த தகவலையடுத்து 17 பேர் குறித்து ஆத்தூர், கருமந்துறை, கரியகோவில், ஏத்தாப்பூர், போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேலம் மாவட்ட போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். 2-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திராவில் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள தகவல் கிடைத்ததும் சில மலைக்கிராமங்களில் இருந்து தொழிலாளர்களின் உறவினர்கள் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். அதனால் அவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் செம்மரம் வெட்ட சேலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகளை அழைத்து சென்ற புரோக்கர்கள் யார் என்பது குறித்தும் சேலம் மாவட்ட போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்துகிறார்கள். தொடர்ந்து மலைக்கிராமங்களுக்கு வந்து செல்லும் புரோக்கர்களை கண்காணித்து கைது செய்யவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் உத்தரவிட்டுள்ளார். இதனால் புரோக்கர்கள் நடமாட்டம் குறித்தும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- அணைக்கு வினாடிக்கு 552 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 2 மாதத்துக்கும் மேலாக காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடந்து வருகிறது.
இதே போல் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
வழக்கமாக டெல்டா பாசனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். மேலும் அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து குறிப்பிட்ட நாளிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
அதே போல் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் தொடர்ந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இந்த ஆண்டு டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை.
பருவமழை பொய்த்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. அதே நேரம் தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் அணையின் நீர்மட்டம் படிபடியாக குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.38 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 552 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதாலும், தொடர்ந்து பாசனத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் அணையின் நீர்மட்டம் தினமும் ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது.
இதற்கிடையே கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் இன்று மேட்டூர் அணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆலயத்தில் ஆண்டு திரு விழா நடக்க உள்ளது.
- இதையொட்டி சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆலயத்தில் ஆண்டு திரு விழா நடக்க உள்ளது. இந்த திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள். இதையொட்டி சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வாஸ்கோடகாமா வேளாங்கண்ணி சிறப்பு ரயில் வருகிற 27-ந் தேதி, வருகிற செப்டம்பர் மாதம் 1 மற்றும் 6-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது.
வாஸ்கோடகாமாவில் இரவு 9.51 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் பெங்களூரு வழியாக சேலத்திற்கு அடுத்த நாள் மாலை 5.20 மணிக்கு வந்து சேர்கிறது.
பின்னர் 5 நிமிடத்தில் புறப்பட்டு ராசிபுரத்திற்கு மாலை 5. 52 மணிக்கும், நாமக்கல்லுக்கு 6.13க்கும், கரூருக்கு மாலை 6.58 செல்கிறது. பின்னர் தஞ்சா
வூர், திருவாரூர் நாகப்பட்டி
னம் வழியே வேளாங் கண்ணிக்கு 3-வது நாள் அதிகாலை 3 .50 மணிக்கு சென்றடைகிறது.
மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி வாஸ் கோடகாமா சிறப்பு ரெயில்
வருகிற 30-ந் தேதி, செப் டம்பர் 4 மற்றும் 9-ந் தேதி களில் இயக்கப்படு கிறது.
வேளாங்கண்ணியில் அதிகாலை 1.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் நாமக்கல்லுக்கு காலை 8 .23 மணிக்கும் ராசிபுரத்திற்கு காலை 8.50-க்கும் வந்து சேலத்திற்கு காலை 9.40 மணிக்கு வந்தடையும்.
பின்னர் 5 நிமிடத்தில் புறப்பட்டு பங்காருபேட்டை பெங்களூர் வழியே வாஸ்கோடகாமாவுக்கு அடுத்த நாள் காலை 8 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது .இதனை பயணி கள் பயன்படுத்திக் கொள்ளு மாறு சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
- போக்குவரத்து கழகம் சார்பில் பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
- நாளை 16-ந் தேதி ஆடி அமாவாசை கொண்டாடப்படுகிறது.
சேலம்:
போக்குவரத்து கழகம் சார்பில் பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி நாளை 16-ந் தேதி ஆடி அமாவாசை கொண்டாடப்படுகிறது. சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் தர்மபுரியில் இருந்து நாளை மாதேஸ்வர மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சேலம் டவுன் பஸ் நிலையத்திலிருந்து சித்தர் கோவிலுக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதே போல சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் மேட்டூர் மாதேஸ்வரன் மலைக்கும் தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து மேட்டூர் மாதேஸ்வரன் மலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ஆடி அமாவாசை முன்னிட்டு சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு மேச்சேரி-மேட்டூர் வழியாகவும், மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு கொளத்தூர்- பாலாறு வழியாகவும், தர்மபுரியில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு மேச்சேரி-மேட்டூர் வழியாகவும், கிருஷ்ணகிரியில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு தர்மபுரி, மேச்சேரி, மேட்டூர், வழியாகவும்,ஓசூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு கிருஷ்ணகிரி, தர்ம புரி, மேச்சேரி, மேட்டூர், வழியாகவும், மாதேஸ்வரன் மலைக்கு நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்றார்.
- காமராஜர் காலனி பகுதியில் சாக்கடை கால்வாயை சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர்.
- இதனால் சாக்கடை கழிவு நீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர்.
சேலம்:
சேலம் பெரமனூர், காமராஜர் காலனி பகுதியில் சாக்கடை கால்வாயை சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். இதனால் சாக்கடை கழிவு நீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. இதனால் அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவே ற்றப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அப்போது செயற்பொறி யாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர்கள் தமிழ்ச்செல்வன், செந்தில் குமார் மற்றும்
- ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது.
- சுதந்திர தின விடுமுறையையொட்டி ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் படையெடுத்தனர்.
ஏற்காடு:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது.
ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை காண தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இன்று 76-வது சுதந்திர தின விடுமுறையையொட்டி ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் படையெடுத்தனர். ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா , சேர்வராயன் குகை கோவில், பக்கோடா பாயிண்ட் , லேடிஸ்சீட் , படகு இல்லம் போன்ற சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். படகு இல்லத்தில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.
பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினார்கள்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை யொட்டி ஏற்காட்டில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இச்சூழலை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவில் ஏற்காடு வருவதால் இன்று மலை பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக அதிகாலையில் இருந்தே இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அணிவகுத்தப்படி சாரை, சாரையாக மலை பாதை வழியாக ஏற்காடுக்கு வந்தபடி இருந்தது. பொதுவாக சேலத்தில் இருந்து 45 நிமிடத்தில் ஏற்காடு வந்துவிடலாம். ஆனால் இன்று வாகன நெரிசலால் மலை பாதை வழியாக ஏற்காடு வர 2, 3 மணி நேரம் வரை ஆனது. இதனால் ஏற்காடு மலை பகுதி ஸ்தம்பித்து காணப்பட்டது.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் உள்ளூர் கடைக்காரர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை
இதுபோல் மேட்டூர் அணையை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அணை கரை பகுதியில் கூடினர். அவர்கள் மதகு வழியாக சீறி பாயும் தண்ணீரை பார்த்தனர். பல ஏக்கர் பரப்பளவிலான அணை பூங்காவிலும் பொதுமக்கள் குவிந்தனர்.
மேட்டூர் அணைைய ஒட்டியுள்ள அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பூங்காவை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.
கொல்லிமலை
பிரசித்தி பெற்ற கொல்லிமலையிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. செம்மேடு, கொல்லிலை அறப்பளீஸ்வரர் கோவில், சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். ஆகாய கங்கை நிர்வீழ்ச்சி, மாசிலா அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
- மல்லூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (17-ந்தேதி) நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
சேலம்:
சேலம் வேம்படிதாளம் துணை மின் நிலையம் மற்றும் மல்லூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (17-ந்தேதி) நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லூர் நகர், பனமரத்துப்பட்டி, திருமனூர், பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனூர் வலசு, நெ.3 கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்தகவுண்டம் பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், இளம்பிள்ளைநகர், காந்திநகர், தப்பகுட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காகாபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன்காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை சேலம் தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
- கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தில் உறவினர்களுக்கும், கருப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து லலிதா எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் கருப்பூர் அருகே உள்ள சிங்குகாடு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லலிதா (வயது 60). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பரமசிவம், லலிதா இருவரும் கடந்த 6 வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லாமல் பிரிந்து வாழ்ந்து வந்தனர். நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்ற லலிதா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் லலிதாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் ஊர் அருகே குழந்தைவேலு என்பவரது விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றின் கரையில் லலிதாவின் செருப்பு கிடந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தில் உறவினர்களுக்கும், கருப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசாரும் ஓமலூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி லலிதாவின் உடலை தேடினர். வெகு நேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவில் லிலதா உடலை கண்டுபிடித்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லலிதா எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
- அணையில் நீர் குறைவாக உள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். அதன்படி நடப்பாண்டில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இதையடுத்து நீர் இருப்பை கருத்தில் கொண்டு தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
தற்போது நீர் இருப்பு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 2 ஆயிரத்து 415 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து ஆயிரத்து 478 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 54.10 அடியாக இருந்தது.
இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. அணையில் நீர் குறைவாக உள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நடைபெறும் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தார்.
- மணிப்பூர் போன்ற விவகாரங்களில் மக்கள் பிரச்சினைகளை பூர்த்தி செய்யாமல் கலவரம் ஏற்படுத்தி மத்திய அரசு ஆதாயம் தேடுகிறது.
சேலம்:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நடைபெறும் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வேலையின்மை மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக பிரதமர் சொன்னார். ஆனால் மத்திய, மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
மணிப்பூர் போன்ற விவகாரங்களில் மக்கள் பிரச்சினைகளை பூர்த்தி செய்யாமல் கலவரம் ஏற்படுத்தி மத்திய அரசு ஆதாயம் தேடுகிறது. நெல்லையில் தொடர்ந்து கொலைகள் நடக்கிறது. இது போன்ற கொலைகளுக்கு பின்னால் இருப்பவர்கள் யார்? என கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என ஆளுநர் பகிரங்கமாக அறிவிக்கிறார். ஆளுநர் அலுவலகம் பா.ஜ.க பிரசார அலுவலகம் போல செயல்படுகிறது. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அனிதா உள்பட 25 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனியாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்லூரிகளை காட்டிலும் நீட் பயிற்சி மையம் அதிகமாக உருவாகி உள்ளது.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறைகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய அரசோடு நெருக்கத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் பேசி தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கை கொண்டுவர வேண்டும். அண்ணாமலை பாதயாத்திரை செல்வதாக கூறி சொகுசு பயணமாக சென்று கொண்டிருக்கிறார். அதனால் எந்த பலனும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- சடையப்பன் குடும்பத்தினர் உள்பட 10 பேர் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தனர்.
- சடையப்பன் தான் மறைத்து வைத்து எடுத்து வந்த 3 லிட்டர் மண்எண்ணையை தலையில் ஊற்ற முயன்றார். இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சடையப்பன் (வயது 38). இவரது மனைவி தெய்வானை (35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.
தீக்குளிக்க முயற்சி
இந்த நிலையில் சடையப்பன் குடும்பத்தினர் உள்பட 10 பேர் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தனர். அப்போது சடையப்பன் தான் மறைத்து வைத்து எடுத்து வந்த 3 லிட்டர் மண்எண்ணையை தலையில் ஊற்ற முயன்றார். இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர் .
அப்போது சடையப்ப னின் தங்கை சடையம்மாள் (32) திடீரென பிளேடால் கையை அறுத்தார். இத
னால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்தி ரிக்கு அழைத்து செல்ல முயன்றனர் . ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்தார். இைதயடுத்து போலீசார் அவரை சென்று வாகனத்தில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர் . தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சடையப்பன் கூறுகையில், தங்களது வீட்டின் அருகில் அரசு சார்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது . இது தங்களுக்கு பெரும் இடைஞ்சலாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கா ததால் மன வேதனையில் உள்ளோம். எனவே கலெக்டர் தலையிட்டு இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், என்றார்.






