என் மலர்
உள்ளூர் செய்திகள்

வருகிற 27-ந் தேதி முதல் சேலம் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்
- நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆலயத்தில் ஆண்டு திரு விழா நடக்க உள்ளது.
- இதையொட்டி சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆலயத்தில் ஆண்டு திரு விழா நடக்க உள்ளது. இந்த திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள். இதையொட்டி சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வாஸ்கோடகாமா வேளாங்கண்ணி சிறப்பு ரயில் வருகிற 27-ந் தேதி, வருகிற செப்டம்பர் மாதம் 1 மற்றும் 6-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது.
வாஸ்கோடகாமாவில் இரவு 9.51 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் பெங்களூரு வழியாக சேலத்திற்கு அடுத்த நாள் மாலை 5.20 மணிக்கு வந்து சேர்கிறது.
பின்னர் 5 நிமிடத்தில் புறப்பட்டு ராசிபுரத்திற்கு மாலை 5. 52 மணிக்கும், நாமக்கல்லுக்கு 6.13க்கும், கரூருக்கு மாலை 6.58 செல்கிறது. பின்னர் தஞ்சா
வூர், திருவாரூர் நாகப்பட்டி
னம் வழியே வேளாங் கண்ணிக்கு 3-வது நாள் அதிகாலை 3 .50 மணிக்கு சென்றடைகிறது.
மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி வாஸ் கோடகாமா சிறப்பு ரெயில்
வருகிற 30-ந் தேதி, செப் டம்பர் 4 மற்றும் 9-ந் தேதி களில் இயக்கப்படு கிறது.
வேளாங்கண்ணியில் அதிகாலை 1.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் நாமக்கல்லுக்கு காலை 8 .23 மணிக்கும் ராசிபுரத்திற்கு காலை 8.50-க்கும் வந்து சேலத்திற்கு காலை 9.40 மணிக்கு வந்தடையும்.
பின்னர் 5 நிமிடத்தில் புறப்பட்டு பங்காருபேட்டை பெங்களூர் வழியே வாஸ்கோடகாமாவுக்கு அடுத்த நாள் காலை 8 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது .இதனை பயணி கள் பயன்படுத்திக் கொள்ளு மாறு சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.






