என் மலர்
சேலம்
- மாரியப்பன். இவரது மனைவி பெரியா (70), இவர் நேற்று முன்தினம் அங்குள்ள எடப்பாடி-குமார பாளையம் சாலையை மேற்கில் இருந்து கிழக்காக கடக்க முயன்றார்.
- அதிவேகமாக வந்த ஆம்னி கார் மோதி தூக்கி வீசப்பட்டார்.
சேலம்:
சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள பூலா கவுண்டம்பட்டி வடக்கு காடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பெரியா (70), இவர் நேற்று முன்தினம் அங்குள்ள எடப்பாடி-குமார பாளையம் சாலையை மேற்கில் இருந்து கிழக்காக கடக்க முயன்றார்.
கார் மோதி பலி
அப்போது எடப்பாடியில் இருந்து குமாரபாளையம் நோக்கி அதிவேகமாக வந்த ஆம்னி கார் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் அந்த கார் அதே வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இதனை பார்த்த அவரது மகன் கந்தசாமி அவரை மீட்டு ஈேராடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள தென்னை மரத்தான் வளைவு இலகூத்தூர் பகுதியை சேர்ந்தவர் காவேரி ( 67), தொழிலாளியான இவர் தனக்கு சொந்த மான ஆட்டை விற்பதற்காக நேற்று முன்தினம் இருப்பாளி சந்தைக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். வன்னாங்குட்டை-இருப்பாளி ரோட்டில் சென்ற போது அவரது மகனின் மடியில் இருந்த ஆடு திடீரென துள்ளிதயதால் நிலை தடுமாறிய வாகனம் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட காவேரி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ேசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிக்சசை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார், இது குறித்து பூலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணை அமைந்துள்ளது.
- கபினி அணைக்கு வினாடிக்கு 2,684 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
சேலம்:
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இன்று காலை நிலவரப்படி 100. 64 அடி (மொத்த கொள்ளளவு 124.80 அடி) தண்ணீர் இருந்தது.
இந்த அணைக்கு வினாடிக்கு 5,578 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3,598 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதேபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணை அமைந்துள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 2,684 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5,598 கனஅடி தண்ணீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
- மனம் உடைந்த தாமோதரன் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
- வாலிபர் தற்கொலை குறித்து மல்லியக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி பஜனைமடத்தெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி மீனா. இவர்களது மகன் தாமோதரன் (18), பிளஸ்-2 படித்து வந்த இவர், படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். இதையடுத்து படிப்பை தொடருமாறும், அல்லது வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் கூறி உள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த தாய் மீனா அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் சென்னைக்கு அழைத்து சென்றனர். அப்போது செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது திடீரென நெஞ்சு வலிப்பதாக தாமோதரன் கூறினார்.
இதையடுத்து உறவினர்கள் அவரை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இது குறித்து மல்லியக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் சுகவனேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. வருகிற 27ந் தேதி கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபி ஷேகம் நடத்தப்பட இருக்கிறது.
- அப்போது கும்பாபிஷேக விழாவில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
சேலம்:
தமிழக சட்டசபையில் அருள் எம்.எல்.ஏ. தனது தொகுதி குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் கடந்த ஆண்டு சேலம் சுகவனேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. வருகிற 27ந் தேதி கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபி ஷேகம் நடத்தப்பட இருக்கிறது. அப்போது கும்பாபிஷேக விழாவில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும். சேலம் மாவட்டம் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள மாரியம்மன் கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமா? என அருள் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் 2014-ம் ஆண்டு கும்பாபிஷேக திருப்பணி தொடங்கப்பட்டது. தி.மு.க. அரசு வந்த பிறகு பிறகுதான் 2 ஆண்டுகளில் திருப்பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. நான் 3 முறை கோவிலுக்கு ஆய்வுக்கு சென்றேன். வருகிற 27-ந் தேதி காலையில் கும்பாபிஷேக விழாவும், மாலையில் திருத்தேர் பவனியும் நடைபெற இருக்கிறது. அன்று நிச்சயமாக கும்பாபிஷேக விழா தமிழில் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சங்ககிரி புதிய பஸ் ஸ்டாண்டில் தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என தணிக்கை மேற்கொண்டனர்.
- அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பொறுத்தி இருந்த 7 தனியார் பஸ்களுக்கு சோதனை செய்து ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவின்பேரில் சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், புஷ்பா ஆகியோர் சங்ககிரி புதிய பஸ் ஸ்டாண்டில் தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பொறுத்தி இருந்த 7 தனியார் பஸ்களுக்கு சோதனை செய்து ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- போலீசார் மினி மாரத்தான் போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த வார விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தாரமங்கலம் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள்
மினி மாரத்தான் போட்டி
இதையடுத்து போலீசார் மினி மாரத்தான் போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். போலீஸ் நிலையத்திலிருந்து தொடங்கி மினி மாரத்தான் போட்டி குறுக்குப்பட்டி, பவளத்தானூர் வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்து அடைந்தது. அப்போது சப்- இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், ரவிச்சந்திரன், மதிவாணன் மற்றும் கருணாகரன் உட்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
- மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
- இங்கு ஒப்பந்த அடிப்படையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒப்பந்த அடிப்படையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலைய ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 40 பேர், நேற்று மாலை திடீரென அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாதம் 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதனை 30 நாட்களாக அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். ஒரு மாத ஊதியத்தை தீபாவளி போனசாக வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் அனல் மின் நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அனல் மின் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- போலீசார் ஈஸ்வரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சக்திவேலை அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான ராசிபுரம் பிரிவு ரோட்டில் இருந்து மல்லியகரை வரை சாலை விரிவாக்கப் பணி கடந்த 1 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் நரசிங்கபுரம் பழைய வீட்டு வசதி வாரியம் அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த பணிக்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (25) மேற்பார்வையாளராக இருந்தார். இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்த ஈஸ்வரமூர்த்தி, மேம்பாலம் கட்ட பள்ளம் தோண்டிய மண் மீது நடந்து சென்றபோது சறுக்கி விழுந்தார்.
அப்போது இதை கவனிக்காமல் டிரைவர் சக்திவேல் என்பவர் பொக்லைன் எந்திரத்தை பின்னால் இயக்கினார். இதில் ஈஸ்வரமூர்த்தி மீது பொக்லைன் எந்திரம் ஏறியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் நகர போலீசார் ஈஸ்வரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சக்திவேலை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
மேம்பால பணியில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர் பொக்லைன் எந்திரம் ஏறியதில் உடல் நசுங்கி பலியான சம்பவம் சக ஊழியர்கள், அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர்.
- பூக்களை வாங்கி செல்வதற்கு பரமத்தி வேலூர், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கண்டிபாளையம், வடகரையாத்தூர், ஜேடர்பாளையம், ஆனங்கூர், பாகம்பாளையம், தண்ணீர் பந்தல், நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி முல்லை, சம்பங்கி, அரளி, ரோஜா, செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
பூக்கள் பூக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் பூக்களைப் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர்.
பூக்களை வாங்கி செல்வதற்கு பரமத்தி வேலூர், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர்.
நேற்று குண்டுமல்லி கை கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.50- க்கும், அரளி ரூ.80- க்கும், ரோஜா ரூ.150- க்கும், முல்லைப் பூ ரூ.400- க்கும், செவ்வந்திப்பூ ரூ.100- க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் வாங்கிச் சென்றனர். புரட்டாசி மாதம் திருமணம் மற்றும் கோவில் விசேஷங்கள் அதிகமாக இல்லாததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.
- சிமிலி ஏஜென்ஸ் (வயது 42). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வீராணம் அருகே உள்ள பருத்தி காடுக்கு சென்றுள்ளார்.
- பின்னர் அவர் மறுநாள் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் காதர்கான் தெருவை சேர்ந்தவர் எபினேசர். இவரது மனைவி சிமிலி ஏஜென்ஸ் (வயது 42). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வீராணம் அருகே உள்ள பருத்தி காடுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மறுநாள் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால் வீட்டில் இருந்து எதுவும் திருடு போகவில்லை.
மற்றொரு சம்பவம்
இதேபோல் சேலம் கந்தம்பட்டி பகுதியில் வரதராஜன் மனைவி ராஜாமணி என்பவர் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டுப் போட்டிகளில் 01.01.2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியனவையாக கருதப்படும்.
தேசிய விளையாட்டுப் போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தகுதியானவர்களாக கருதப்படுவர். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பின்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே தகுதியானவர்களாக கருதப்படுவர்.
குறிப்பாக, 40 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலும். விண்ணப்பதாரர் வேலை வாய்ப்பு பெற்றிடுவதற்கான இதர முழு தகுதிகளும் பெற்றிருத்தல் வேண்டும்.
வீரர், வீராங்கனையர்கள் மேற்காணும் வழிகாட்டு தலின்படி 3 சதவித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவ தற்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான விளையாட்டு வீரர், வீராங்கனையர்கள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் மேற்காணும் இணையதள முகவரி அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பித்திடுமாறு தெரிவித்து கொள்ளப்ப டுகிறது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- பல ஆண்டு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யவும் மற்றும் 2ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்.
- அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால் கடந்த சில மாதங்களில் பல நூறு குறு, சிறுதொழில்கள் முடங்கி விட்டன. பலர் நிறுவனத்தையே மூடிவிட்டு சென்று விட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட சிறு குறு தொழில் சங்கம் சார்பில் நாமக்கல் கலெக்டரிம் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு, உச்ச நேர மின் கட்டண அறிவிப்பு மற்றும் நிலைக் கட்டண உயர்வு போன்ற கோரிக்கைகளை நீக்க வலியுறுத்தி தமிழக தொழிற்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டமாக போராட்டங்கள் நடத்தி எங்களது ஆட்சேபனைகளை தெரிவித்தோம்.
பல ஆண்டு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யவும் மற்றும் 2ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்.
அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால் கடந்த சில மாதங்களில் பல நூறு குறு, சிறுதொழில்கள் முடங்கி விட்டன. பலர் நிறுவனத்தையே மூடிவிட்டு சென்று விட்டனர். குறு, சிறுதொழில்களை நம்பி தொழில்முனைவோர்களும், பல லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் மின்சாரத்தை நம்பியே உள்ளது. சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு பெருமளவில் வேலை வாய்ப்பை வழங்கி வரும் சிறுதொழில்கள் மின் கட்டண உயர்வால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீதான மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு கொடுக்கும் போது மாவட்ட சிறு, குறு தொழில் சங்க தலைவர் இளங்கோ, லாரி பாடி பில்டர் சங்க தலைவர் தங்கவேல், தேங்காய் நார் சங்க தலைவர் குழந்தைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






