என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆத்தூர் அருகே எலி பேஸ்ட் தின்று வாலிபர் தற்கொலை
- மனம் உடைந்த தாமோதரன் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
- வாலிபர் தற்கொலை குறித்து மல்லியக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி பஜனைமடத்தெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி மீனா. இவர்களது மகன் தாமோதரன் (18), பிளஸ்-2 படித்து வந்த இவர், படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். இதையடுத்து படிப்பை தொடருமாறும், அல்லது வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் கூறி உள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த தாய் மீனா அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் சென்னைக்கு அழைத்து சென்றனர். அப்போது செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது திடீரென நெஞ்சு வலிப்பதாக தாமோதரன் கூறினார்.
இதையடுத்து உறவினர்கள் அவரை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இது குறித்து மல்லியக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்