என் மலர்
ராணிப்பேட்டை
- நாளை வெள்ளிக்கிழமை முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை தேர்ந்தெடுக்க மனுக்கள் பதிவேற்றம் செய்யும் பணி கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.
மேலும் இந்த இரு கட்டங்களிலும் ஏதேனும் ஒரு காரணத்தால் பதிவேற்றம் செய்ய இயலாமல் விடுபட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் பணி நாளை வெள்ளிக்கிழமை முதல் 20-ந்தேதி வரை 3 நாட்களில் ஏற்கனவே மனுக்களை பெற்று பதிவேற்றம் நடைபெற்ற மையங்களிலேயே மீண்டும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
மேலும் தற்போது முதல் அமைச்சரின் அறிவிப்பின்படி, வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், முதல் அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெரும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்.
மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
இதுவரை விண்ணப்பிக்காத பயனாளிகள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களின் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
- ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்
- போலீசார் குவிப்பு
நெமிலி:
நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட சயனபுரம் ஊராட்சியில் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலை வர் பவானி தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற் றது.
அப்போது சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஊராட்சியில் எந்தவித வளர்ச்சிபணி களும் நடைபெறவில்லையென்றும், பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும் கிராம சபை கூட் டத்திற்கு வராமல் புறக்கணிப்பு செய்தனர்.
பின்பு கிராம சபை புறக்கணிப்பு கூட்டதுண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கிராம சபை புறக்கணிப்பு கூட்டத்தை நடத்தினர். அப்போது ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங் களை எழுப்பினர்.
இந்த நிலையில் அப்பகுதியில் எந்த அசம்பாவிதமும் நடை பெறாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகு தியில் பெரும் பரபரப்பு நிலவியது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நிறுத்தம்
- செயற்பொறியாளர் தகவல்
ஆற்காடு:
ஆற்காடு, பூட்டுத்தாக்கு, கத்தியவாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆற்காடு நகரம் முழுவதும், அவுசிங்போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழ னூர், ராமநாதபுரம், கூராம் பாடி, உப்புப்பேட்டை, கிருஷ் ணாவரம், லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், கத்திய வாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம் புதூர், ராமாபுரம், ரத்தினகிரி, கன் னிகபுரம்,சனார்பண்டை, மேலகுப்பம், கீழ்செங்காநத் தம், மேல் செங்காநத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.
இந்த தகவலை ஆற்காடு மின்வினியோகசெயற்பொறி யாளர் விஜயகுமார் தெரிவித் துள்ளார்.
- தொழிலாளர் உதவி கமிஷனர் தகவல்
- 110 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன
ராணிப்பேட்டை:
சென்னை தொழிலாளர் கமிஷனர் அதுல்ஆனந்த் உத்தரவின் பேரிலும் கூடுதல் தொழிலாளர் கமிஷனர் உமாதேவி, வேலூர் தொழிலாளர் இணை கமிஷனர் புனிதவதி அறிவுரையின்படியும், வேலூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) தே.ஞானவேல் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேசிய விடுமுறை தினமான (சுதந்திர தின விழா) நேற்று கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக் கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.
160 நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில் கடைகள் மற் றும் நிறுவனங்களில் 55 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 51முரண்பாடுகளும் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 4 முரண்பாடுகளும் என்று மொத்தம் 110 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. அந்த அபராதம் விதித்து நிறுவனங்களின் மீது இணக்க கட்டண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு அரசு ஒப்பந்த பணிகளில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் பணிய மர்த்தப்படவில்லை என்று ஒப்பந்ததாரர்களிடம் சுயசான்று பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை வேலூர் தொழிலாளர் உதவிகமிஷனர் (அமலாக்கம்) தே.ஞானவேல் தெரிவித்துள்ளார்.
- பிள்ளைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
- கலெக்டர் வளர்மதி அறிவுரை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த குடிமல்லூர் ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பேசியதாவது -
பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் காலங்களில் நீங்கள் தெரிவித்த தேவைகள், வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
தாய்மார்கள், குழந்தைகளிடையே ரத்தசோகை பிரச்சனை இல்லாமல் இருக்க நாம் அனைவரும் ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நம்மை சுற்றியுள்ள இயற்கை உணவுப் பொருட்களையே சரியான முறையில் எடுத்துக்கொண்டு ராணிப்பேட்டையை ரத்தசோகை இல்லாத மாவட்டமாக உருவாக்கிட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நம் குழந்தைகளை நல்ல பண்போடும், பெரியவர்களிடத்தில் நல்ல மரியாதையுடன் நடந்து கொள்வதை சொல்லி வளர்க்க வேண்டும். ஒழுக்கம் தான் மிகவும் முக்கியம். படித்தால் அனைத்தும் தெரியும் என்று எண்ணி விடக் கூடாது. பிள்ளைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதை உறுதி செய்திட வேண்டும். யாரேனும் பள்ளிக்கு செல்லாமல் இருந்தால் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு தகவல் தெரிவித்திடுங்கள். பிள்ளைகளை தொடர்ந்து படிக்க வைத்திடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் குமார், ஒன்றிய குழு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், சிவப்பிரகாசம் உள்படபலர் கலந்து கொண்டனர்.
- 80 வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டது
- செயல் இயக்குனர் பேச்சு
ராணிப்பேட்டை;
ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பெல் நிறுவன செயல் இயக்குனர் ராஜீவ் சிங் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை பார்வையிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பெல் நிறுவனமானது கடந்த 2022-23-ம் ஆண்டு ரூ.23ஆயிரத்து 365 கோடியை வருவாயாக பெற்றுள்ளது. இது கடந்த நிதிஆண்டை விட 10 சதவீதம் கூடுதலாகும்.மேலும் வரிக்குப் பிந்திய ரூ.448 கோடியை லாபமாக ஈட்டி உள்ளது.
இது அனைவரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
பெல் நிறுவனம் கடந்த 2022-23 ம் ஆண்டு 1,580 மெகாவாட் தேவையான மின் உற்பத்தி உபகரணங்களை தயாரித்து நிறுவியுள்ளது.
மேலும் 2,498 மெகாவாட்டுக்கான சோலார் மின் உற்பத்தி உபகரணங்களையும் தயாரித்துள்ளது.
இதில் பங்களாதேஷ் மைத்திரி பவர் ப்ராஜெக்ட் திட்டமும் அடங்கும். பெல் நிறுவனம் நடப்பு ஆண்டில் ரூ.23ஆயிரத்து 548 கோடிக்கான புதிய ஆர்டர்களை பெற்றுள்ளது. இதனுடன் சேர்த்து பெல் நிறுவனத்தின் தற்போதைய மொத்த ஆர்டர் கையிருப்பு ரூ.91ஆயிரத்து 336 கோடி ஆகும்.
பெல் நிறுவனமானது சமீபத்தில் மிகப்பெரிய ரெயில்வே டெண்டர்களில் ஒன்றான 80 வந்தே பாரத் ெரயில் பெட்டிகள் தயாரிப்பிற்கான ஆர்டர்களை பெற்றுள்ளது. இந்த ஆர்டரானது பெல் நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்கு மிகவும் உந்துதலாக அமையும்.
ராணிப்பேட்டை பெல் நிறுவனமானது பெல் கார்ப்பரேட் பாதுகாப்பு துறை ஏற்பாடு செய்த போட்டியில் 2022-23ம் ஆண்டு சிறந்த பாதுகாப்பு திட்ட விருதை வென்றுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- கலெக்டர் வழங்கினார்
- மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டைமாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட் டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற் றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, வேலைவாய்ப்பு, கடன்உதவி, இலவச வீடுகள், குடிநீர் வசதி வேண்டி மனு கொடுத்தனர். மொத்தம் 283 மனுக்களை பொது மக்களி டம் இருந்து பெற்று, சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களி டம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற் கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவ டிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும், கலெக்டர் தனது விருப்ப நிதியில் இருந்து இருளர் இன மக்கள் 12 நபர்க ளுக்கு நலிந்தோர் நிதியுதவி, குடிசை வீடு மாற்று நிதியுதவி, சுய தொழில் நிதியுதவி, திரு நங்கை சுயதொழில் நிதியுதவி என ரூ.64 ஆயிரம் வழங்கி னார்.
கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொது) முரளி, சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் ஸ்ரீ வள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், நேர்முக உதவி யாளர் (நிலம்) கலைவாணி, கலால் உதவி ஆணையாளர் வரதராஜ். மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் சரவணகு மார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- 2 நாட்கள் நடக்கிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்புமுகாம்கள் நடைபெற உள்ளது. நாளை (புதன்கிழமை) அரக்கோணம் தாலுகா மின்னல் ஊராட்சி சாலை கைலாச ம் புரம் கிராமத்தில் உள்ள என்.எல்.பி.திருமண மண்டபத்திலும், 19-ந் தேதி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கிலும் முகாம் நடைபெற உள்ளது.
அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களது ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற் றும் 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் முகாம்களில் நேரில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
மேலும் யூ.டி.ஐ.டி. அட்டை மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகிறவர்கள் மாற் றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய அடை யாள அட்டை நகல், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் ரேஷன் அட்டை நகலுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
- போலீசார் விசாரணை
- தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்
ஆற்காடு:
ராணிப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் உக்கம் சந்த். ஆற்காடு அடுத்த காவ னூரில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார்.
இவரது மகன் பியூஸ் (வயது 22). இவர் தனது தந்தைக்கு துணையாக கடையில் இருந்து வந்துள் ளார். இந்த நிலையில் நேற்று மதியம் பியூஸ் காவனூரில் இருந்து ராணிப்பேட்டைக்கு பைக்கில் சென்றார்.
ஆற்காடு அண்ணா சாலை யில் வந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் பியூஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழேவிழுந்த அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்
- மின்விசிறியில் பிணமாக தொங்கினார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை வள்ளலார் நகர் ஈ.வே.ரா. தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது29) இவர் பி.காம் வரை படித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சந்தோஷ் பார்த்து வந்த வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் சந்தோஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்க சென்றவர் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் எழுந்திரிக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சந்தோஷ் அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 7 வருடங்களாக பெண் பார்த்து வந்தனர்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த புளியந்தாங்கல் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 32). இவர் நெல்லிக்குப்பம் சிப்காட் பேஸ்-3 உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 7 வருடங்களாக வினோத்தின் திருமணத்திற்கு பெண் பார்த்து வந்தனர். இதில் ஜாதகம் எதுவும் சரியாக அமையாததால் இதுவரை திருமணம் நடைபெறவில்லை என்ற விரக்தியில் இருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வினோத் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் வினோத்தை மீட்டு ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீயணைப்பு துறையினர் பிணமாக மீட்டனர்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்கா ட் வ.உ.சி நகர் 4-வது தெரு வை சே ர்ந்தவர் அனீப்.
இவரது மகன் சையத் (10). சிப்கா ட்டில் உள்ள அரசி னர் பள்ளி யில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று மாலை தனது நண்ப ர்களுடன் மணியம்பட்டு பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றான்.
அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி விட்டார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி தேடினர்.
பல மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் இன்று காலை சிறுவனை பிணமாக மீட்டனர். மேலும் சையது உடலை போலீ சார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






