என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்புமுகாம்கள் நடைபெற உள்ளது. நாளை (புதன்கிழமை) அரக்கோணம் தாலுகா மின்னல் ஊராட்சி சாலை கைலாச ம் புரம் கிராமத்தில் உள்ள என்.எல்.பி.திருமண மண்டபத்திலும், 19-ந் தேதி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கிலும் முகாம் நடைபெற உள்ளது.
அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களது ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற் றும் 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் முகாம்களில் நேரில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
மேலும் யூ.டி.ஐ.டி. அட்டை மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகிறவர்கள் மாற் றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய அடை யாள அட்டை நகல், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் ரேஷன் அட்டை நகலுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்