search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம்

    • 2 நாட்கள் நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்புமுகாம்கள் நடைபெற உள்ளது. நாளை (புதன்கிழமை) அரக்கோணம் தாலுகா மின்னல் ஊராட்சி சாலை கைலாச ம் புரம் கிராமத்தில் உள்ள என்.எல்.பி.திருமண மண்டபத்திலும், 19-ந் தேதி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கிலும் முகாம் நடைபெற உள்ளது.

    அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களது ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற் றும் 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் முகாம்களில் நேரில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    மேலும் யூ.டி.ஐ.டி. அட்டை மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகிறவர்கள் மாற் றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய அடை யாள அட்டை நகல், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் ரேஷன் அட்டை நகலுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×