என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • நோயாளிகளிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்
    • குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர வேண்டும்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசு மருத்துவமனை யில் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விஜயா முரளி திடீர் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அனைத்து டாக்டர்களையும் அழைத்து அவர்க ளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது பழுதடைந்த ரத்த பரிசோதனை செய்யும்நுண்ணியல் மைக்ரோ பயாலஜி கருவி புதிதாக வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், டாக்டர்களும், செவிலியர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர வேண்டும். உள்நோ யாளிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பல் சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    மேலும் காது கேட்கும் கருவி வழங்குவ தற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் டாக்டர்கள், செவிலியர்கள் அன்புடன் பழக வேண்டும் என்று கூறினார்.

    அப்போது டாக்டர்கள் விவேக், வெண்ணிலா, சதீஷ்குமார், சங்கீதா, இளவரசி, பல் மருத்துவர் ஹர்சிதா, மருத்துவ எழுத் தாளர் அன்வர் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.

    • நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம்
    • கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர்‌ கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.

    மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் வருகிற 20-ந் தேதி நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கைப்பிடி இல்லாத மாடிப்படியில் ஏறியபோது விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் கிராமத்தில் பத்மஜா என்பவரின் வீடு உள்ளது. இவரது 6 மாடி கொண்ட அடுக்குமாடி வீட்டில் மாடிக்கு செல்ல படிக்கட்டில் கைப்பிடி வைக்கப்படவில்லை.

    இந்நிலையில் அந்த வீட்டிற்கு வண்ண பூச விழுப்புரம் மாவட்டம் துருவை கிராமத்தில் இருந்து 3 தொழிலாளர்கள் பணிசெய்து வந்தனர்.

    இவர்கள் சுண்ணாம்பு அடிக்கும் பணியை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று இரவு தனஞ்செழியன் (வயது 51) என்ற தொழிலாளி கைப்பிடி இல்லாத மாடிப்படியில் ஏறிய போது 3-வது மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார்.

    இதனால் பலத்த காயம் அடைந்த தனஞ்செழியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தத்ரூபமாக செய்து காட்டினர்
    • சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் நடந்தது

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. மலைமேல் உள்ள லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்ய 1,305 படிகளை கடந்து பக்தர்கள் சென்று வருகின்றனர்.

    இங்கு அமிர்த வள்ளி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மலை மீது உள்ள லட்சுமி நரசிம்மரை உள்ளூர், வெளியூர் என ஏராளமான பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், உடல் பாதிப்புள்ளவர்கள் படிக்கட்டு வழியாக சென்று லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்வது கடினமானது. இவர்களை டோலி தொழிலாளர்கள் கட்டணம் பெற்று சுமந்து செல்கின்றனர்.

    இதுபோன்ற வயதானவர்கள் உட்பட படிக்கட்டுகளை ஏற முடியாத பக்தர்களுக்கு என 'ரோப் கார்' வசதி அமைக்க வேண்டுமென பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அதற்கான பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. இதில், பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு 'ரோப் கார்' அமைக்கும் பணிகள் முழுமை அடைந்து, சோதனை ஓட்டமும் வெற்றி கரமாக முடிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கோவிலுக்கு 'ரோப் கார்' மூலமாக பயணிக்க வரும் பக்தர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய காத்திருப்பு அறை, மலை உச்சியில் 15 படிக்கட்டுகளை கடக்க லிப்ட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும் இந்த பணிகள் முழுமையடைந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பக்தர்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இந்த நிலையில் லட்சுமி நரசிம்ம சுவாமி மலைகோவிலுக்கு செல்லும் ரோப் காரில் பயணிக்கும் போது ஏற்படும் அவசரகால விபத்துக்களை எதிர்கொள்ளும் பொருட்டு மீட்பு ஒத்திகை பணி இன்று காலை அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் நடைபெற்றது. ரோப்காரில் பக்தர்கள் விபத்தில் சிக்கினால் எப்படி மீட்பது என தத்ரூபமாக செய்து காட்டினர்.

    இந்நிகழ்வில் சோளிங்கர் தீயணைப்பு துறையினர், சோளிங்கர் வட்டாட்சியர், சோளிங்கர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், மற்றும் இந்து சமய அறநிலைய துறையினர் கலந்து கொண்டனர்.

    • உறவினர்கள் சாலை மறியல்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த மலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். விவசாயி, இவருடைய மனைவி ரேவதி இவர்களுடைய மகன் சஞ்சய் (வயது 17). இவர் சோளிங்கர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டிலிருந்து பாணாவரத்திற்கு பைக்கில் சென்றார்.

    அப்போது பாணாவரம் அருகே சென்ற போது சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் பைப் லைனில் மோதி கீழே விழுந்தார். இந்த விபத்தில் சஞ்சய் பலத்த காயம் அடைந்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாணாவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது அங்கு மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லாததால் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபேட்டை அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சஞ்சய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பாணாவரம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்திருந்தால் சஞ்சய் இறந்திருக்க மாட்டார்.

    மேலும் மருத்துவர் இல்லாததே இறப்பிற்கு காரணம் எனக் கூறி 100-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவு 12 மணிக்கு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

    உடனடியாக அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இதனால் ஆவேசம் அடைந்த உறவினர்கள் காவேரிப்பாக்கம்-பாணாவரம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிமாறன்,பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பார்த்திபன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் . இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

    • மகனுடன் சென்ற போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த பொன்னை அருகே உள்ள பரமசாத்து கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி இவரது மனைவி ராதா (வயது 40).

    ராதா நேற்று மதியம் தனது மகனுடன் பைக்கில் பரமசாத்து கிராமத்தி லிருந்து ராணிப்பேட்டை நோக்கி சென்றனர்.

    குமணந்தாங்கல் கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ராதாவின் சேலை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராதாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை ராணிப்பேட்டையில் தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் ராதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் ராதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாளை வெள்ளிக்கிழமை முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை தேர்ந்தெடுக்க மனுக்கள் பதிவேற்றம் செய்யும் பணி கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.

    மேலும் இந்த இரு கட்டங்களிலும் ஏதேனும் ஒரு காரணத்தால் பதிவேற்றம் செய்ய இயலாமல் விடுபட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் பணி நாளை வெள்ளிக்கிழமை முதல் 20-ந்தேதி வரை 3 நாட்களில் ஏற்கனவே மனுக்களை பெற்று பதிவேற்றம் நடைபெற்ற மையங்களிலேயே மீண்டும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    மேலும் தற்போது முதல் அமைச்சரின் அறிவிப்பின்படி, வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், முதல் அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெரும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்.

    மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

    இதுவரை விண்ணப்பிக்காத பயனாளிகள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களின் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்
    • போலீசார் குவிப்பு

    நெமிலி:

    நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட சயனபுரம் ஊராட்சியில் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலை வர் பவானி தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற் றது.

    அப்போது சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஊராட்சியில் எந்தவித வளர்ச்சிபணி களும் நடைபெறவில்லையென்றும், பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும் கிராம சபை கூட் டத்திற்கு வராமல் புறக்கணிப்பு செய்தனர்.

    பின்பு கிராம சபை புறக்கணிப்பு கூட்டதுண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கிராம சபை புறக்கணிப்பு கூட்டத்தை நடத்தினர். அப்போது ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங் களை எழுப்பினர்.

    இந்த நிலையில் அப்பகுதியில் எந்த அசம்பாவிதமும் நடை பெறாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகு தியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நிறுத்தம்
    • செயற்பொறியாளர் தகவல்

    ஆற்காடு:

    ஆற்காடு, பூட்டுத்தாக்கு, கத்தியவாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆற்காடு நகரம் முழுவதும், அவுசிங்போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழ னூர், ராமநாதபுரம், கூராம் பாடி, உப்புப்பேட்டை, கிருஷ் ணாவரம், லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், கத்திய வாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம் புதூர், ராமாபுரம், ரத்தினகிரி, கன் னிகபுரம்,சனார்பண்டை, மேலகுப்பம், கீழ்செங்காநத் தம், மேல் செங்காநத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.

    இந்த தகவலை ஆற்காடு மின்வினியோகசெயற்பொறி யாளர் விஜயகுமார் தெரிவித் துள்ளார்.

    • தொழிலாளர் உதவி கமிஷனர் தகவல்
    • 110 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன

    ராணிப்பேட்டை:

    சென்னை தொழிலாளர் கமிஷனர் அதுல்ஆனந்த் உத்தரவின் பேரிலும் கூடுதல் தொழிலாளர் கமிஷனர் உமாதேவி, வேலூர் தொழிலாளர் இணை கமிஷனர் புனிதவதி அறிவுரையின்படியும், வேலூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) தே.ஞானவேல் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேசிய விடுமுறை தினமான (சுதந்திர தின விழா) நேற்று கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக் கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

    160 நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில் கடைகள் மற் றும் நிறுவனங்களில் 55 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 51முரண்பாடுகளும் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 4 முரண்பாடுகளும் என்று மொத்தம் 110 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. அந்த அபராதம் விதித்து நிறுவனங்களின் மீது இணக்க கட்டண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு அரசு ஒப்பந்த பணிகளில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் பணிய மர்த்தப்படவில்லை என்று ஒப்பந்ததாரர்களிடம் சுயசான்று பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை வேலூர் தொழிலாளர் உதவிகமிஷனர் (அமலாக்கம்) தே.ஞானவேல் தெரிவித்துள்ளார்.

    • பிள்ளைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
    • கலெக்டர் வளர்மதி அறிவுரை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த குடிமல்லூர் ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பேசியதாவது -

    பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் காலங்களில் நீங்கள் தெரிவித்த தேவைகள், வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

    தாய்மார்கள், குழந்தைகளிடையே ரத்தசோகை பிரச்சனை இல்லாமல் இருக்க நாம் அனைவரும் ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    நம்மை சுற்றியுள்ள இயற்கை உணவுப் பொருட்களையே சரியான முறையில் எடுத்துக்கொண்டு ராணிப்பேட்டையை ரத்தசோகை இல்லாத மாவட்டமாக உருவாக்கிட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    நம் குழந்தைகளை நல்ல பண்போடும், பெரியவர்களிடத்தில் நல்ல மரியாதையுடன் நடந்து கொள்வதை சொல்லி வளர்க்க வேண்டும். ஒழுக்கம் தான் மிகவும் முக்கியம். படித்தால் அனைத்தும் தெரியும் என்று எண்ணி விடக் கூடாது. பிள்ளைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதை உறுதி செய்திட வேண்டும். யாரேனும் பள்ளிக்கு செல்லாமல் இருந்தால் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு தகவல் தெரிவித்திடுங்கள். பிள்ளைகளை தொடர்ந்து படிக்க வைத்திடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்தக் கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் குமார், ஒன்றிய குழு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், சிவப்பிரகாசம் உள்படபலர் கலந்து கொண்டனர். 

    • 80 வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டது
    • செயல் இயக்குனர் பேச்சு

    ராணிப்பேட்டை;

    ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பெல் நிறுவன செயல் இயக்குனர் ராஜீவ் சிங் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை பார்வையிட்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பெல் நிறுவனமானது கடந்த 2022-23-ம் ஆண்டு ரூ.23ஆயிரத்து 365 கோடியை வருவாயாக பெற்றுள்ளது. இது கடந்த நிதிஆண்டை விட 10 சதவீதம் கூடுதலாகும்.மேலும் வரிக்குப் பிந்திய ரூ.448 கோடியை லாபமாக ஈட்டி உள்ளது.

    இது அனைவரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

    பெல் நிறுவனம் கடந்த 2022-23 ம் ஆண்டு 1,580 மெகாவாட் தேவையான மின் உற்பத்தி உபகரணங்களை தயாரித்து நிறுவியுள்ளது.

    மேலும் 2,498 மெகாவாட்டுக்கான சோலார் மின் உற்பத்தி உபகரணங்களையும் தயாரித்துள்ளது.

    இதில் பங்களாதேஷ் மைத்திரி பவர் ப்ராஜெக்ட் திட்டமும் அடங்கும். பெல் நிறுவனம் நடப்பு ஆண்டில் ரூ.23ஆயிரத்து 548 கோடிக்கான புதிய ஆர்டர்களை பெற்றுள்ளது. இதனுடன் சேர்த்து பெல் நிறுவனத்தின் தற்போதைய மொத்த ஆர்டர் கையிருப்பு ரூ.91ஆயிரத்து 336 கோடி ஆகும்.

    பெல் நிறுவனமானது சமீபத்தில் மிகப்பெரிய ரெயில்வே டெண்டர்களில் ஒன்றான 80 வந்தே பாரத் ெரயில் பெட்டிகள் தயாரிப்பிற்கான ஆர்டர்களை பெற்றுள்ளது. இந்த ஆர்டரானது பெல் நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்கு மிகவும் உந்துதலாக அமையும்.

    ராணிப்பேட்டை பெல் நிறுவனமானது பெல் கார்ப்பரேட் பாதுகாப்பு துறை ஏற்பாடு செய்த போட்டியில் 2022-23ம் ஆண்டு சிறந்த பாதுகாப்பு திட்ட விருதை வென்றுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×