என் மலர்
ராணிப்பேட்டை
- 3 பேர் கைது
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த நேர்காச்சி நகரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா நேற்று நடந்தது.
அப்போது அதே போதையைச் சேர்ந்த லெனின் (வயது 25), அஜித் குமார் (27), சுலைமான் (20) ஐயோ குடிபோதையில் சாலையில் நடனம் ஆடினர்.
அப்போது அதனைப் பார்த்த லெனினின் தந்தை ராஜா (50) மற்றும் அவரது அண்ணன் ஸ்ரீகாந்த் (28) ஆகியோர் தட்டி கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த லெனின் மற்றும் அவரது நண்பர்கள் ராஜா மற்றும் ஸ்ரீகாந்த்தை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இது குறித்து ஸ்ரீகாந்த் வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லெனின், அஜித்குமார், சுலைமான் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
காவேரிப்பாக்கம்:
ஆந்திரா மாநிலம் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் காதர் பாஷா (வயது 70). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக காதர் பாஷா தனது உறவினர்கள் நபி பாஷா அகமது பாஷா, அபிஷா, அம்மாஜி ஆகியவுடன் ஆம்புலன்ஸ் மூலம் இன்று அதிகாலை 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர்.
அதே வழியாக கடப்பா கற்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லோடு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரும்புலிப்பாக்கம் அருகே வரும்போது லோடு லாரியும், ஆம்புலன்சும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் டீசல் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து ஆம்புலன்ஸ் பற்றி எரிந்தது. அப்போது திடீரென ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் சிவா மற்றும் சுனில், ஊழியர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து அவளூர் போலீசருக்கும், காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஆம்புலன்சை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை அடித்து அணைக்க முயன்றனர்.
ஆனால் ஆம்புலன்ஸ் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது. மேலும் இந்த விபத்து குறித்து அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் தகவல்
- 3 ஆயிரத்து 559 பணியிடங்களுக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், இடைநிலை ,பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பும்பொருட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வை அறிவிக்க உள்ளது.
6 ஆயிரத்து 556 இடைநிலை ஆசிரியர், 3 ஆயிரத்து 587 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்கள், இந்த தேர்வை எழுத இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால், 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் என 3 ஆயிரத்து 559 பணியிடங்களுக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு வருகிற செப்டம்பர் 17-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் ராணி ப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தகுதி உடையவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
- குடி போதையில் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த பஷிராபாத் பகுதியை சேர்ந்தவர் ஆசிம் (வயது 28). இவர் குடி போதையில் அதே பகுதியில் ஒரு வீட்டில் நள்ளிரவில் புகுந்து 38 வயது பெண்ணை சரமாரியாக தாக்கி உள்ளார்.
இந்நிலையில் அந்த பெண் கூச்சலிடவே அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கினார்.
மேலும் ஆசீமை வாணியம்பாடி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஆசீமை கைது செய்தனர்.
- வாலிபர் போக்சோவில் கைது
- ெஜயிலில் அடைத்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த லோகேஸ்வரன் (வயது 20)என்ற வாலிபருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு சிறுமி தனியாக இருந்தபோது லோகேஸ்வரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து ள்ளார். மேலும் இதே போல் பலமுறை உல்லாசமாக இருந்து விட்டு தற்போது திருமணத்திற்கு மறுத்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி நேற்று ராணி ப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லோகேஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ெஜயிலில் அடைத்தனர்.
- காலை 9 முதல் முதல் பிற்பகல் 2 மணி வரை
- மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்
ஆற்காடு:
வேலூர் மின்பகிர்மான வட் டம் ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் அத்தியாவ சிய மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத னால் நாளை (சனிக்கிழமை) காலை 9 முதல் முதல் பிற்ப கல் 2 மணி வரை இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்ன கர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்கு மேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங் களில் மின்நிறுத்தம் செய்யப் படும்.
இந்த தகவலை ஆற்காடு மின்வாரிய செயற்பொறியா ளர் விஜயகுமார் தெரிவித்துள் ளார்
- நோயாளிகளிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்
- குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர வேண்டும்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசு மருத்துவமனை யில் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விஜயா முரளி திடீர் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அனைத்து டாக்டர்களையும் அழைத்து அவர்க ளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது பழுதடைந்த ரத்த பரிசோதனை செய்யும்நுண்ணியல் மைக்ரோ பயாலஜி கருவி புதிதாக வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், டாக்டர்களும், செவிலியர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர வேண்டும். உள்நோ யாளிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பல் சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் காது கேட்கும் கருவி வழங்குவ தற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் டாக்டர்கள், செவிலியர்கள் அன்புடன் பழக வேண்டும் என்று கூறினார்.
அப்போது டாக்டர்கள் விவேக், வெண்ணிலா, சதீஷ்குமார், சங்கீதா, இளவரசி, பல் மருத்துவர் ஹர்சிதா, மருத்துவ எழுத் தாளர் அன்வர் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.
- நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம்
- கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் வருகிற 20-ந் தேதி நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கைப்பிடி இல்லாத மாடிப்படியில் ஏறியபோது விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் கிராமத்தில் பத்மஜா என்பவரின் வீடு உள்ளது. இவரது 6 மாடி கொண்ட அடுக்குமாடி வீட்டில் மாடிக்கு செல்ல படிக்கட்டில் கைப்பிடி வைக்கப்படவில்லை.
இந்நிலையில் அந்த வீட்டிற்கு வண்ண பூச விழுப்புரம் மாவட்டம் துருவை கிராமத்தில் இருந்து 3 தொழிலாளர்கள் பணிசெய்து வந்தனர்.
இவர்கள் சுண்ணாம்பு அடிக்கும் பணியை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று இரவு தனஞ்செழியன் (வயது 51) என்ற தொழிலாளி கைப்பிடி இல்லாத மாடிப்படியில் ஏறிய போது 3-வது மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார்.
இதனால் பலத்த காயம் அடைந்த தனஞ்செழியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தத்ரூபமாக செய்து காட்டினர்
- சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் நடந்தது
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. மலைமேல் உள்ள லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்ய 1,305 படிகளை கடந்து பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இங்கு அமிர்த வள்ளி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மலை மீது உள்ள லட்சுமி நரசிம்மரை உள்ளூர், வெளியூர் என ஏராளமான பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், உடல் பாதிப்புள்ளவர்கள் படிக்கட்டு வழியாக சென்று லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்வது கடினமானது. இவர்களை டோலி தொழிலாளர்கள் கட்டணம் பெற்று சுமந்து செல்கின்றனர்.
இதுபோன்ற வயதானவர்கள் உட்பட படிக்கட்டுகளை ஏற முடியாத பக்தர்களுக்கு என 'ரோப் கார்' வசதி அமைக்க வேண்டுமென பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அதற்கான பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. இதில், பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு 'ரோப் கார்' அமைக்கும் பணிகள் முழுமை அடைந்து, சோதனை ஓட்டமும் வெற்றி கரமாக முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவிலுக்கு 'ரோப் கார்' மூலமாக பயணிக்க வரும் பக்தர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய காத்திருப்பு அறை, மலை உச்சியில் 15 படிக்கட்டுகளை கடக்க லிப்ட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும் இந்த பணிகள் முழுமையடைந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பக்தர்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்த நிலையில் லட்சுமி நரசிம்ம சுவாமி மலைகோவிலுக்கு செல்லும் ரோப் காரில் பயணிக்கும் போது ஏற்படும் அவசரகால விபத்துக்களை எதிர்கொள்ளும் பொருட்டு மீட்பு ஒத்திகை பணி இன்று காலை அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் நடைபெற்றது. ரோப்காரில் பக்தர்கள் விபத்தில் சிக்கினால் எப்படி மீட்பது என தத்ரூபமாக செய்து காட்டினர்.
இந்நிகழ்வில் சோளிங்கர் தீயணைப்பு துறையினர், சோளிங்கர் வட்டாட்சியர், சோளிங்கர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், மற்றும் இந்து சமய அறநிலைய துறையினர் கலந்து கொண்டனர்.
- உறவினர்கள் சாலை மறியல்
- போலீசார் பேச்சுவார்த்தை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த மலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். விவசாயி, இவருடைய மனைவி ரேவதி இவர்களுடைய மகன் சஞ்சய் (வயது 17). இவர் சோளிங்கர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டிலிருந்து பாணாவரத்திற்கு பைக்கில் சென்றார்.
அப்போது பாணாவரம் அருகே சென்ற போது சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் பைப் லைனில் மோதி கீழே விழுந்தார். இந்த விபத்தில் சஞ்சய் பலத்த காயம் அடைந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாணாவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அங்கு மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லாததால் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபேட்டை அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சஞ்சய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பாணாவரம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்திருந்தால் சஞ்சய் இறந்திருக்க மாட்டார்.
மேலும் மருத்துவர் இல்லாததே இறப்பிற்கு காரணம் எனக் கூறி 100-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவு 12 மணிக்கு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
உடனடியாக அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆவேசம் அடைந்த உறவினர்கள் காவேரிப்பாக்கம்-பாணாவரம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிமாறன்,பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பார்த்திபன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் . இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
- மகனுடன் சென்ற போது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த பொன்னை அருகே உள்ள பரமசாத்து கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி இவரது மனைவி ராதா (வயது 40).
ராதா நேற்று மதியம் தனது மகனுடன் பைக்கில் பரமசாத்து கிராமத்தி லிருந்து ராணிப்பேட்டை நோக்கி சென்றனர்.
குமணந்தாங்கல் கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ராதாவின் சேலை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராதாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை ராணிப்பேட்டையில் தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் ராதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் ராதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






