என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • கலெக்டர் ஆசிரியர்களுக்கு அறிவுரை
    • பணிபுரியும் பள்ளியினை என்னுடைய பள்ளி என்ற மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளை மேம்படுத்துவது மற்றும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை முன்னேற்றத்திற்கான ஒரு மைல் கல்லை எய்திட முழு மனதுடன் கல்வி கற்பிக்க வேண்டும். மாணவர்கள் பலதரப்பட்ட பொருளாதார சூழ்நிலைகளை கொண்ட குடும்பங்களில் இருந்து கல்வி கற்க பள்ளிகளுக்கு வருகின்றனர்.

    அவர்களுக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். இதில் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். மேலும் ஆசிரியர்கள் தாங்கள் பணி புரியும் பள்ளியை என்னுடைய பள்ளி, எங்களுடைய கல்வி நிறுவனம் என்று பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய பள்ளியின் சுகாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் தனியார் பள்ளிகள் எவ்வாறு செய்கின்றனரோ அதே போன்று சிறிது கவனம் செலுத்தி தூய்மையுடன் வைத்துக்கொள்ள உறுதி ஏற்க வேண்டும்.

    தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே உள்ள போட்டி, பொறாமைகள் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.

    ஆசிரியர்கள் இனிவரும் காலங்களில் தாங்கள் பணிபுரியும் பள்ளியினை என்னுடைய பள்ளி என்ற மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்.

    என்பது உள்பட பள்ளிகளை மேம்படுத்துவதற்கும், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும. இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இளைஞர்கள் எதிர்பார்ப்பு
    • சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் ஒட்டியுள்ள பகுதியில் ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. பல மாதங்களுக்கு முன்பு வரை அம்மா பூங்கா மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்பின் பூங்கா தற்போது பராமரிப்பின்றி உள்ளது.

    இதில் மின் கம்பங்கள், சிமெண்டு கான்கிரீட், பேவா் பிளாக், பொதுமக்கள் மக்கள் அமரும் இருக்கை, கூழாங்கல்லால் 8 வடிவிலான நடைப்பாதை, குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் என அனைத்தும் பராமரிப்பின்றி துருப்பிடித்து உடைந்த நிலையில் உள்ளது. செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்ததால் பூங்கா புதர் மண்டி காட்சியளிக்கிறது.இதேப்போல் பூங்காவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.

    அதில் உள்ள நவீன கருவிகள் எல்லாம் இதுவரை பயன்படுத்தவில்லை. இந்தஉடற்பயிற்சி கூடம் இதுவரை திறக்கப்படாமல் இளைஞா்களின் பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது.

    உடற்பயிற்சி கருவிகள் துருப்பிடித்து நிலையில் உள்ளதாக இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

    மேலும் இங்கு உடைந்த குப்பைகள் அள்ளுவதற்காக பயன்படுத்தும் வண்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதிக்குயில் அதிகாரிகள் பலமுறை ஆய்வுக்கு வந்தும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை.

    இதனால் அந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சிகூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

    இது குறித்து அந்த பகுதி மக்களும், இளைஞர்களும் கூறியதாவது:-

    இந்த பூங்கா மிகவும் எங்கள் பகுதி மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக உள்ளது. இந்த பூங்கா சரியான பராமரிப்பு இல்லாததால் கடந்த 3 ஆண்டுகளாக செடி கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது.

    சிறுவர்கள் விளையாடு வதற்காக அமைக்கப்பட்ட ஊஞ்சல், சறுக்குதல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும் உடைந்து காணப்படுகிறது.

    மேலும் பூங்காவுக்கு வருபவர்களின் அவசர தேவைக்காக கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிக அளவில் நடமாடுவதால் பூங்காவுக்குள் சென்று வர அணைவரும் அச்சப்படுகின்றனர்.

    எனவே பழுதடைந்து கிடக்கும் பூங்காவை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பராமரித்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சிகரெட்டு கேட்டதில் வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜாபேட்டை அடுத்த கீழ் புதுப்பேட்டையை சேர்ந்தவர் சின்னபையன் (வயது64). பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த 19-ந் ்தேதி அன்று இரவு இவரது கடையில் வாலிபர் ஒருவர் சிகரெட்டு கேட்டதில் வாய்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.

    இதில் அந்த வாலிபர் தாக்கியதில் சின்னப்பையனுக்கு வாயில் காயம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் சின்னப்பையன் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாக கூறவே அவரை சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது பற்றி தகவலறிந்த வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, கடையில் சிகரெட் கேட்ட போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் தாக்கியதால் சின்னபையன் இறந்து விட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படைக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
    • போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் சோகன் தாஸ் என்று கூறினார்.

    அரக்கோணம்:

    ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 20-ந் தேதி காலை புறப்பட்டு எர்ணாகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

    இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்-2 பெட்டியின் கழிவறை ரெயில் புறப்பட்டதில் இருந்து பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. ஆனால் கழிவறையின் உள்ளே ஆள் இருக்கும் சத்தம் மட்டும் கேட்டது.

    இதற்கிடையே ரெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை கடந்து அரக்கோணம் வந்து கொண்டிருந்த போது மீண்டும் கழிவறையில் இருந்து சத்தம் வந்தது. பயணிகள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ரெயில் பெட்டியில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படைக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

    ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சென்று அந்த கழிவறை கதவை உடைத்து திறந்தனர். அதில் வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார்.

    அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் சோகன் தாஸ் என்று கூறினார்.

    சுமார் 31 மணி நேரம் வாலிபர் உணவு, தண்ணீர் அருந்தாமல் கழிவறையில் பயணம் செய்து உள்ளார்.

    மேலும் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று முன்னுக்கு பின் முரணாக பேசியதால் முழுமையான விவரம் தெரியவில்லை. அவரை பாதுகாப்புப் படை போலீசார் அரக்கோணம் ரெயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர்.

    வாலிபர் மனநிலை பாதிக்கபட்டவர் என்பது தெரியவந்தது. இன்று அதிகாலை வாலிபரை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு வாலிபருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையில் போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு வாழைப்பந்தல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட குப்பிடிச்சாத்தம் பஸ் நிறுத்தத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது செய்யாறு தாலுகா மேட்டுகாலனியை சேர்ந்த விக்னேஷ் (வயது 26) கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் கலவை அப்பாதுரைபேட்டை பகு தியை சேர்ந்த அலி (33) என்பவர் கஞ்சா விற்றபோது அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • டீ குடிக்க செல்வதாக சென்றவர் மீண்டும் திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    வேலூர் அடுத்த கம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது57). இவர் நேற்று முன்தினம் ஓச்சேரி பகுதியில் நடை பெற்ற உறவினர் திருமணத்திற்கு தன்னுடைய உறவினர் மகளுடன் சென்றுள்ளார்.

    அப்போது டீ குடிக்க செல்வதாக திருமண மண்டபத்தில் இருந்து வெளியே சென்ற அந்தபெண் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் இதுகுறித்து அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான பெண் ணுக்கு இரண்டு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • வயிற்று வலியால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த பெல் நரசிங்கபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் நிலா. இவரது மகன் பிரபாகரன்(29) சென்னையில் சினிமா படப்பிடிப்பிற்கான செட் அமைக்கும் பணியில் கூலி வேலை செய்து வந்தவர்.

    கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பிரபாகரன் அதற்காக மாத்திரை, மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் வயிற்று வலியால் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பிரபாகரன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக பிரபாகரனின் தாய் நிலா கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார், பிரபாகரன் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீட் தேர்வை ரத்து செய்ய மறுப்பதை கண்டித்து நடந்தது
    • 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் தி.மு.க.வின் இளைஞர் அணி,மாணவர் அணி, மருத்துவர் அணிகளின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி தலைமை தாங்கினார்.

    மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத் வரவேற்று பேசினார்.

    உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் மத்திய மந்திரி, அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ். ஜெகத்ரட்சகன் தொடங்கி வைத்து பேசினார்.

    தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஆலோசகர் லெனின் கண்டன உரையாற்றுகிறார்

    உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, சிவானந்தம், துரைமஸ்தான், ஏ.வி.சாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுந்தரம், அசோகன், கண்ணையன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி , வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை ,வாலாஜா நகர மன்ற தலைவர்கள் சுஜாதா,ஹரிணி,அம்மூர் பேரூராட்சிமன்ற தலைவர் சங்கீதா மகேஷ்,

    நகர செயலாளர்கள் பூங்காவனம், தில்லை உள்பட ஒன்றிய,நகர, பேரூர் நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், இளைஞரணி, மாணவரணி , மருத்துவர் அணி நிர்வாகிகள் உள்பட சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மருத்துவ அணி அமைப்பாளர் சரவணன் நன்றி கூறுகிறார்.

    • 3 கிலோ போதை பொருள் பறிமுதல்
    • ரோந்து பணியில் சிக்கினர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போலீஸ் ஏட்டு ரங்கநாதன் உள்பட போலீசார் கலவை அடுத்த குப்பிடி சாத்தம் கிராமப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அருகே உள்ள பில்லாந்தி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 26) என்பவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கலவையை சேர்ந்த அலி (33) என்பவரும் கஞ்சா வைத்திருக்கும் தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து போலீசார் கலவையில் அலியிடம் சோதனை செய்தபோது அவரிடம் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் இருவரிடமிருந்தும் மொத்தம் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • 3 கிலோ பறிமுதல்
    • புங்கனூர் காப்பு காட்டில் வேட்டையாடினர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள ஆற்காடு வனச்சரக அலுவலக குழுவினர் ஆற்காடு-கலவை சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த லாடாவரம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 62), விஜயன்(36) ஆகியோரை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் ஆற்காடு அடுத்த புங்கனூர் காப்பு காடு பகுதியில் மான் வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்ய சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களிடமிருந்து 3 கிலோ எடை உள்ள மான்கறியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, விஜயன் ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • பயணிகள் கடும் அவதி!
    • ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்-

    அரக்கோணம்:

    அரக்கோணம் ெரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவர்கள் பயணிக்க வேண்டிய ரெயிலுக்கு செல்ல ரெயில்கள் எந்தெந்த பிளாட்பாரத்தில் வருகிறது என்பது குறித்து சரியான அறிவிப்பு இல்லை.

    சமீப காலமாக அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் ரெயிலுக்கு பிளாட்பாரங்களை மாற்றி அனுமதிப்பது பயணிகளை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.

    நேற்று காலை சென்னை-திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் அரக்கோணம் ரெயில் நிலையத்திலிருந்து காலை 9.15 க்கு புறப்படுவது வழக்கம். இதனால் அந்த ரெயிலில் செல்லும் பயணிகள் வழக்கமாக வரும் 3-ம் பிளாட்பாரத்தில் காத்திருந்தனர்.

    திடீரென இந்த ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தை நெருங்கும் போது முதலாம் பிளாட்பாரத்திற்கு வந்து சேரும் என அறிவித்ததால் பயணிகள் கடும் அதிர்ச்சி க்குள்ளாகினர்.

    உடனடியாக 3-வது பிளா ட்பாரத்தில் காத்திருந்த பயணிகள் குறுகிய நேரத்தில் மேம்பாலத்தை பயன்படுத்தி விரைவாக செல்ல வாய்ப்பு இல்லாததால் வயதான வர்கள், பெண்கள் படிக்கட்டில் ஏறி வருவதற்குள் ரெயில் வந்து விடுமே என அச்சத்தில் தண்டவாளத்தில் இறங்கி முதலாம் பிளாட்பாரத்தில் ஏற தொடங்கினர்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் முதலாம் பிளாட்பா ரத்தை நெருங்கும் நிலையில் பெண்கள், வயதானவர்கள் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ரெயிலானது அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வருவதற்கு முன் எந்த பிளாட்பாரத்திற்கு வருகின்றது என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • பழமை வாய்ந்த இக்கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்றது.
    • நாளை காலை 6 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.


    அரக்கோணம் அருகே தக்கோலம் பேரூரில் பழம்பெருமை வாய்ந்த மோகனவல்லி சமேத கங்காதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழ்நாட்டில் உள்ள நந்தி தீர்த்த சிறப்புமிக்க ஒரே கோவில் என்ற பெயருடனும் வழிபாட்டு சிறப்புடனும் திகழ்ந்து வருகிறது. பழமை வாய்ந்த இக்கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்றது.

    இதையடுத்து பல நூற்றாண்டுகளுக்கு பின் நாளை (திங்கட்கிழமை) காலை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை ஒட்டி கடந்த 18-ந்தேதி லட்சுமி ஹோமம் மற்றும் தனபூஜை நடைபெற்றது. 19-ந்தேதி நவக்கிரக ஹோமமும் 20-ந்தேதி யாகசாலை பிரவேசம், பூர்ணாஹுதி நடைபெற்றது. நாளை காலை 6 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். இரவு 7. 30 மணிக்கு சாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    ×