என் மலர்
ராணிப்பேட்டை
- போக்குவரத்து விதிகளை மீறினர்
- அதிகாரிகள் நடவடிக்கை
ராணிப்பேட்டை:
வாலாஜாபேட்டையில் இருந்து ஆற்காடு நோக்கி இரு தனி யார் பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது. ஆட்டோ நகர் அருகே வந்த போது பின்னால் வந்த பஸ் முன்னால் சென்ற பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது பொதுமக்களையும், பயணிகளையும் அச்சுறுத்தும் வகையில் இரண்டு பஸ்களும் அதிவேகமாக சென்றுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் முத்துக்கடை பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்த போலீசார் இரண்டு பஸ்களையும் நிறுத்தி போக்குவ ரத்து விதிகளை மீறி அதிவேகமாக வந்ததால் தலா ரூ.5,000 அபராதம் விதித்தனர்.
- தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த சாலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 24). தெருக்கூத்து கலைஞர். திருமணமாகி மனைவி சுகன்யா மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் செல்வம் சாலை கிராமத்தில் இருந்து அரக்கோ ணத்தில் உள்ள மனைவியை பார்ப்பதற்காக நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அரக் கோணம் சோளிங்கர் ரோடு - ரெயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப் போது அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்ற தனி யார் தொழிற்சாலை பஸ் எதிர் பாரதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த செல்வம் பஸ்சில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்வத்தை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
இந்த விபத்து குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
- விளையாட சென்ற குழந்தை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி கவுரி (32).
சந்திரன் ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், கவுரி தனது 3 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை கடைசி குழந்தை யான கபிலேஷ் வீட்டை விட்டு வெளியே வந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே இருந்த கசக்கால்வாயில் குழந்தை எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டதாகத் தெரிகிறது.
விளையாட சென்ற குழந்தை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் தாய் கவுரி அக்கம் பக்கத்தில் தேடினார். அந்த நேரத்தில் கபிலேஷின் பாட்டி உமா மாடுகளுக்கு தண்ணீர் காண்பிக்க குட்டை பகுதிக்கு சென்றுள்ளார்.
அந்த குட்டையில் கபிலேஷ் மிதந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். உறவினர்கள் உதவியுடன் சிறுவனை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவேரிப்பாக்கம் ஏரியில் நடந்தது
- 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவிரிப்பாக்கம் ஏரியில் மாநில பேரிடர் மீட்புக் படையினர் சார்பில் மழைக்காலங்களில் துரிதமாக செயல்பட போலீசாருக்கு பயிற்சி அளித்தனர்.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த காவலர்களுக்கு மழை, பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படுவது குறித்து 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் 2-வது நாள் பயிற்சியாக நேற்று காவேரிப்பாக்கம் ஏரியில் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் மழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது. மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பது, தண்ணீரில் விழுந்தவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
- வியாபாரிகள் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது
- போலீசார் சமாதானம் செய்தனர்
ராணிப்பேட்டை:
வாலாஜா நகரில் உள்ள அணைக்கட்டு சாலை மிகவும் குறுகி காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசலால் பாதசாரிகள் மற்றும் வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதி படுகின்றனர்.
எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வாலாஜா நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
அதன்படி சோளிங்கர் சாலை, பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த வாரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நேற்று வாலாஜா- அணைக்கட்டு சாலையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகள், வீடுகளின் ஆக்கிரமிப்பு மேற்கூரைகள், விளம்பர போர்டுகள் மற்றும் கட்டுமானங்கள் ஆகியவை இடித்து அகற்றப்பட்டன.
வாலாஜா நகராட்சி ஊழியர்களும் இந்த பணியில் ஈடுபட்டனர்.ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியினை நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கிருந்த வியாபாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- 25 கிலோ சிக்கியது
- பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை
நெமிலி:
பனப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் பெரும்பாலான மளிகை, டீ மற்றும் பேக்கரி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இந்தநிலையில் நேற்று பனப் பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் குமார் ஆகியோர் உத்தரவின் பேரில், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பிரவீன் குமார் மற்றும் பணியாளர்கள் பஸ் நிலையம், அரக்கோணம் ரோடு, அண்ணா நகர், பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
இது போன்று பிளாஸ்டிக் கவர் மற்றும் கப்புகளை பயன்ப டுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- கலெக்டர் ஆசிரியர்களுக்கு அறிவுரை
- பணிபுரியும் பள்ளியினை என்னுடைய பள்ளி என்ற மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளை மேம்படுத்துவது மற்றும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை முன்னேற்றத்திற்கான ஒரு மைல் கல்லை எய்திட முழு மனதுடன் கல்வி கற்பிக்க வேண்டும். மாணவர்கள் பலதரப்பட்ட பொருளாதார சூழ்நிலைகளை கொண்ட குடும்பங்களில் இருந்து கல்வி கற்க பள்ளிகளுக்கு வருகின்றனர்.
அவர்களுக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். இதில் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். மேலும் ஆசிரியர்கள் தாங்கள் பணி புரியும் பள்ளியை என்னுடைய பள்ளி, எங்களுடைய கல்வி நிறுவனம் என்று பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய பள்ளியின் சுகாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் தனியார் பள்ளிகள் எவ்வாறு செய்கின்றனரோ அதே போன்று சிறிது கவனம் செலுத்தி தூய்மையுடன் வைத்துக்கொள்ள உறுதி ஏற்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே உள்ள போட்டி, பொறாமைகள் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.
ஆசிரியர்கள் இனிவரும் காலங்களில் தாங்கள் பணிபுரியும் பள்ளியினை என்னுடைய பள்ளி என்ற மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்.
என்பது உள்பட பள்ளிகளை மேம்படுத்துவதற்கும், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இளைஞர்கள் எதிர்பார்ப்பு
- சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் ஒட்டியுள்ள பகுதியில் ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. பல மாதங்களுக்கு முன்பு வரை அம்மா பூங்கா மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்பின் பூங்கா தற்போது பராமரிப்பின்றி உள்ளது.
இதில் மின் கம்பங்கள், சிமெண்டு கான்கிரீட், பேவா் பிளாக், பொதுமக்கள் மக்கள் அமரும் இருக்கை, கூழாங்கல்லால் 8 வடிவிலான நடைப்பாதை, குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் என அனைத்தும் பராமரிப்பின்றி துருப்பிடித்து உடைந்த நிலையில் உள்ளது. செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்ததால் பூங்கா புதர் மண்டி காட்சியளிக்கிறது.இதேப்போல் பூங்காவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
அதில் உள்ள நவீன கருவிகள் எல்லாம் இதுவரை பயன்படுத்தவில்லை. இந்தஉடற்பயிற்சி கூடம் இதுவரை திறக்கப்படாமல் இளைஞா்களின் பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது.
உடற்பயிற்சி கருவிகள் துருப்பிடித்து நிலையில் உள்ளதாக இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
மேலும் இங்கு உடைந்த குப்பைகள் அள்ளுவதற்காக பயன்படுத்தும் வண்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிக்குயில் அதிகாரிகள் பலமுறை ஆய்வுக்கு வந்தும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதனால் அந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சிகூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
இது குறித்து அந்த பகுதி மக்களும், இளைஞர்களும் கூறியதாவது:-
இந்த பூங்கா மிகவும் எங்கள் பகுதி மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக உள்ளது. இந்த பூங்கா சரியான பராமரிப்பு இல்லாததால் கடந்த 3 ஆண்டுகளாக செடி கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது.
சிறுவர்கள் விளையாடு வதற்காக அமைக்கப்பட்ட ஊஞ்சல், சறுக்குதல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும் உடைந்து காணப்படுகிறது.
மேலும் பூங்காவுக்கு வருபவர்களின் அவசர தேவைக்காக கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிக அளவில் நடமாடுவதால் பூங்காவுக்குள் சென்று வர அணைவரும் அச்சப்படுகின்றனர்.
எனவே பழுதடைந்து கிடக்கும் பூங்காவை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பராமரித்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சிகரெட்டு கேட்டதில் வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
வாலாஜாபேட்டை அடுத்த கீழ் புதுப்பேட்டையை சேர்ந்தவர் சின்னபையன் (வயது64). பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த 19-ந் ்தேதி அன்று இரவு இவரது கடையில் வாலிபர் ஒருவர் சிகரெட்டு கேட்டதில் வாய்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.
இதில் அந்த வாலிபர் தாக்கியதில் சின்னப்பையனுக்கு வாயில் காயம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் சின்னப்பையன் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாக கூறவே அவரை சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது பற்றி தகவலறிந்த வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, கடையில் சிகரெட் கேட்ட போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் தாக்கியதால் சின்னபையன் இறந்து விட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படைக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
- போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் சோகன் தாஸ் என்று கூறினார்.
அரக்கோணம்:
ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 20-ந் தேதி காலை புறப்பட்டு எர்ணாகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்-2 பெட்டியின் கழிவறை ரெயில் புறப்பட்டதில் இருந்து பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. ஆனால் கழிவறையின் உள்ளே ஆள் இருக்கும் சத்தம் மட்டும் கேட்டது.
இதற்கிடையே ரெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை கடந்து அரக்கோணம் வந்து கொண்டிருந்த போது மீண்டும் கழிவறையில் இருந்து சத்தம் வந்தது. பயணிகள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ரெயில் பெட்டியில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படைக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சென்று அந்த கழிவறை கதவை உடைத்து திறந்தனர். அதில் வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார்.
அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் சோகன் தாஸ் என்று கூறினார்.
சுமார் 31 மணி நேரம் வாலிபர் உணவு, தண்ணீர் அருந்தாமல் கழிவறையில் பயணம் செய்து உள்ளார்.
மேலும் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று முன்னுக்கு பின் முரணாக பேசியதால் முழுமையான விவரம் தெரியவில்லை. அவரை பாதுகாப்புப் படை போலீசார் அரக்கோணம் ரெயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர்.
வாலிபர் மனநிலை பாதிக்கபட்டவர் என்பது தெரியவந்தது. இன்று அதிகாலை வாலிபரை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு வாலிபருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- ரோந்து பணியில் சிக்கினர்
- ஜெயிலில் அடைத்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையில் போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு வாழைப்பந்தல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட குப்பிடிச்சாத்தம் பஸ் நிறுத்தத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செய்யாறு தாலுகா மேட்டுகாலனியை சேர்ந்த விக்னேஷ் (வயது 26) கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் கலவை அப்பாதுரைபேட்டை பகு தியை சேர்ந்த அலி (33) என்பவர் கஞ்சா விற்றபோது அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- டீ குடிக்க செல்வதாக சென்றவர் மீண்டும் திரும்பவில்லை
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
வேலூர் அடுத்த கம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது57). இவர் நேற்று முன்தினம் ஓச்சேரி பகுதியில் நடை பெற்ற உறவினர் திருமணத்திற்கு தன்னுடைய உறவினர் மகளுடன் சென்றுள்ளார்.
அப்போது டீ குடிக்க செல்வதாக திருமண மண்டபத்தில் இருந்து வெளியே சென்ற அந்தபெண் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் இதுகுறித்து அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான பெண் ணுக்கு இரண்டு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.






