என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளிகளில் காலை உணவு திட்டம்
- 35 ஆயிரத்து 58 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்
ராணிப்பேட்டை :
ராணிப்பேட்டை மாவட் டத்தில் நகராட்சிகளில் உள்ள 35 பள்ளிகளிலும், பேரூராட்சிகளில் உள்ள 34 பள்ளிகளிலும், ஊரக பகுதிகளில் 541 பள்ளிகள் என மொத்தம் 610 பள்ளிகளில் படிக்கும் 35 ஆயிரத்து 58 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
வாலாஜா டோல்கேட் அடுத்த சென்ன சமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற காலை உணவு திட்ட தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது மாணவர்களுடன் அமர்ந்து உணவு ஊட்டி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷா.வெங்கட், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் கடப்பேரி.சண்முகம் உள்பட தி.மு.க.நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்