search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகளில் காலை உணவு திட்டம்
    X

    சென்ன சமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் ஆர்.காந்தி காலை உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு ஊட்டி விட்ட காட்சி.

    பள்ளிகளில் காலை உணவு திட்டம்

    • 35 ஆயிரத்து 58 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்

    ராணிப்பேட்டை :

    ராணிப்பேட்டை மாவட் டத்தில் நகராட்சிகளில் உள்ள 35 பள்ளிகளிலும், பேரூராட்சிகளில் உள்ள 34 பள்ளிகளிலும், ஊரக பகுதிகளில் 541 பள்ளிகள் என மொத்தம் 610 பள்ளிகளில் படிக்கும் 35 ஆயிரத்து 58 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

    வாலாஜா டோல்கேட் அடுத்த சென்ன சமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற காலை உணவு திட்ட தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது மாணவர்களுடன் அமர்ந்து உணவு ஊட்டி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷா.வெங்கட், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் கடப்பேரி.சண்முகம் உள்பட தி.மு.க.நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×