என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி பரிதாபம்
    • ஆரணியை சேர்ந்தவர்

    ராணிப்பேட்டை:

    திருவண்ணாமலை மாவட்டம் ,ஆரணி தாலுகா, ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன், இவரது மகன் ரகுராஜ் (வயது 25).

    இவர் நேற்று முன்தினம் வேலை சம்பந்தமாக ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த அைணக்கட்டு சாலை மேம்பாலம் பகுதியில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென பைக் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது.

    இதில் ரகுராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ரகுராஜ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூடுதல் தலைமை செயலாளர் பேச்சு
    • நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், மாசற்ற எரிசக்தியும், தொழில் முன்னேற்றமும் குறித்து ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்கள் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், எரிசக்தி வளர்ச்சி முகமை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து அதன் வாயிலாக பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்து, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறார்.

    தமிழக அரசின் சிறப்பு திட்டத்தில், படித்த இளைஞர்களுக்கு, முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்கிட 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கி வருகிறது.

    அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 35 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கி வருகிறது. மேலும் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கிடவும், காற்றாலை மற்றும் சூரிய மின் ஆலை அமைக்கவும், விடுதி மற்றும் உணவகம், திருமண மண்டபம், வணிக வளாகம் கட்டுவதற்கும் கடனுதவி அளித்து வருகிறது.

    புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும், தொழில்களை விரிவுபடுத்து பவர்களுக்கும் பல்வேறு கடன் உதவிகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் செய்து வருகிறது. இதனை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இக்கழகத்தின் முக்கிய நோக்கம் கடனுதவி வழங்குவது அல்ல.

    தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் என்ஜினீயரிங் தொழிற்சாலைகள், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் களம்பூர் பகுதிகளில் அதிக அளவில் நெல் அரவை செய்யப்பட்டு வருவதால் அவர்களுடைய தொழில்கள் விரிவுபடுத்துவதற்கும் நவீன உத்திகளான சூரிய தகடுகளை பயன்படுத்தி மாசற்ற எரிசக்தி, பசுமை உற்பத்தியை பின்பற்றி தொழில் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் சென்னை முதுநிலை மண்டல மேலாளர் பழனிவேல், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கிளை மேலாளர் ஜனார்தனன். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன் மற்றும் அரிசி ஆலை சங்கம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்கூடம் சங்கங்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

    Heading

    Content Area


    • நெமிலி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
    • மேம்பாலம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் முன்தினம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

    நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை வழங்கிய முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.நெமிலி ஒன்றியத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது .

    நெமிலி கல்லாறில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்த அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், ஒன்றிய பொறியாளர் ராஜேஷ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

    • கைவினை பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது
    • ராணுவ அதிகாரிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள வெங்கடேசபுரத்தில் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு தமிழக அரசின் கதர்துறை சார்பில் சிறப்பு பொருட்காட்சி நடைபெற்றது.

    இதில் கதர் ஆடைகள் மற்றும் கைத்தறி ஆடைகள், பனை ஓலைகளால் செய்யப்பட்ட கைவினை பொருட்கள் மற்றும் மகளிர் குழு சார்பில் தயார் செய்யப்பட்ட பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    இந்த கண்காட்சியில் ஐ.என்.எஸ் ராஜாளியில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டு பல்வேறு பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    காதி தலைமை நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு வீரர்களுக்கு காதி பொருட்கள் குறித்த சிறப்புகளை கூறினார்.

    • கைவினை பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது
    • ராணுவ அதிகாரிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள வெங்கடேசபுரத்தில் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு தமிழக அரசின் கதர்துறை சார்பில் சிறப்பு பொருட்காட்சி நடைபெற்றது.

    இதில் கதர் ஆடைகள் மற்றும் கைத்தறி ஆடைகள், பனை ஓலைகளால் செய்யப்பட்ட கைவினை பொருட்கள் மற்றும் மகளிர் குழு சார்பில் தயார் செய்யப்பட்ட பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    இந்த கண்காட்சியில் ஐ.என்.எஸ் ராஜாளியில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டு பல்வேறு பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    காதி தலைமை நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு வீரர்களுக்கு காதி பொருட்கள் குறித்த சிறப்புகளை கூறினார்.

    • கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பாலசம் அகடமி இணைந்து, திடக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நிகழ்ச்சி விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பல்ராம் மெமோரியல் டிரஸ்ட் பொருளாளர் சுந்தர் தலைமை தாங்கினார்.

    பேரூராட்சி தலைவர் லதாநரசிம்மன், துணை தலைவர் தீபிகாமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு திட்டக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    முன்னதாக மகளிர் குழுவினர் அமைத்திருந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்களில் தயாரித்த பொம்மைகள், மற்றும் மக்கும் குப்பைகள்,மறுசூழற்சி குப்பைகள்,மக்காத மற்றும் மறுசுழற்சி செய்யமுடியாத பொருட்கள் அடங்கிய கண்காட்சியை பார்வையிட்டார்.

    இதில் வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேஷ், திடக்கழிவு மேலாண்மை வல்லுநர் ராஜசேகர், மற்றும் வார்டு கவுன்சிலர்கள் காவேரி ப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி, தக்கோலம், அம்மூர், திமிரி, விளாம்பாக்கம், கலவை உள்ளிட்ட 8 பேரூராட்சிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள், பொது மக்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    கலவை:

    கலவையை அடுத்த குப்பிடி சாத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜி மகன் ஆறுமுகம் (வயது 21). இவர் மேளம் அடிக்கும் இசைக்கலைஞராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் செங்கனாபுரம் கிராமத்தில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் மேளம் அடிக்க ஆறுமுகம், அவரது நண்பர் தினேஷ் சென்றுள்ளனர்.இரவு நாடகம் பார்த்துக் கொண்டிருந்தபோது பென்னகர் பகுதியைச் சேர்ந்த சிவலிங்க மகன் அஜித் (24), வெங்கடேசன் ஆகிய இருவரும் ஆறுமுகத்தையும் தினேசையும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கியுள்ளனர். அருகே இருந்த வர்கள் தடுத்தபோது அஜித்தும் வெங்கடேசனும் தப்பி ஓடிச் சென்றுள்ளனர்.காயமடைந்த ஆறுமுகம், தினேஷ் ஆகிய இருவரும் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இது குறித்து கலவை சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்து விசா ரணை செய்தார்.கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆறுமுகம், அவரது மாமா நிலத்தில் நுங்கு, பனங்காய் வெட்டியபோது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஆறுமுகத்தை தாக்கியதாக அஜீத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் வெங்கடேசனை போலீ சார் தேடி வருகின்றனர்.

    • ஜல்லிகற்களில் சிக்கி தவறி கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 35). இவர் சென்னை மடிப்பாக்கத்தில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    நேற்று காலை சென்னை செல்வதற்காக அருள்தாஸ் பைக்கில் சென்றார். அனந்தலை தனியார் கல் குவாரி அருகே வந்த போது சாலையில் கிடந்த ஜல்லிகற்களில் பைக் சிக்கியது. இதில் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். அருள்தாஸ் பலத்த காயமடைந்தார்.

    இதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் அருள் தாசை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அருள்தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இனிப்புகள் வழங்கினர்
    • 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் பழனி பேட்டை அங்காளம்மன் கோவில் அருகே ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி தலைமையில் அ.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை பட்டாசு வெடித்தும், 108 தேங்காய் உடைத்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    இதில் அரக்கோணம் அ.தி.மு.க நகர செயலாளர் கே.பி.பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ், பழனி, விஜயன், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள்,கழக நிர்வாகிகள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்தார்
    • வாலாஜா பஸ் நிலையம் விரிவாக்க பணிக்கு அடிக்கல் நாட்டினார்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.56 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கருணாநிதி நூற்றாண்டு சிமெண்டு சேமிப்பு கிடங்கு திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா.வெங்கட், துணை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சிமெண்டு சேமிப்பு கிடங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம், சிவராமன், தி.மு.க.ஒன்றிய செயலாளர் கடப்பேரி.சண்முகம், நிர்வாகிகள் சுந்தரம், தியாகராஜன் உள்பட ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,தி.மு.க.வின் மாவட்ட, ஒன்றிய,நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக வாலாஜா நகரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 8 லட்சம் மதிப்பில் வாலாஜா பஸ் நிலையம் விரிவாக்க பணிக்கும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்.

    இதில் வாலாஜா நகர மன்றத் தலைவர் ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், திமுக நகர செயலாளர் தில்லை உள்பட நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரி திடீர் ஆய்வு
    • ரூ.15 ஆயிரம் அபராதம்

    அரக்கோணம்:

    அரக்கோணம் பஜார், காந்தி ரோடு, பழைய பஸ் நிலையம் மற்றும் சுவால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடைகள், டீக்கடைகள், சிற்றுண்டி கடைகள் மற்றும் பெட் டிக்கடைகளில் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆனந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட் டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப், தெர்மாகோல் கப், கேரி பேக் உள்ளிட்டவைகளை பதுக்கி வைத்திருந்த 2 குடோன்களில் இருந்து சுமார் 500 கிலோ பிளாஸ்டிக்பொருட்களை மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆனந்த் பறிமுதல் செய்து ரூ.15 ஆயிரம் அபரா தம் விதித்தார்.

    ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் ரகுராமன், என் ஜினீயர் செல்வகுமார், சுகாதார அலுவலர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நீச்சல் பழக சென்றபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 23), தச்சு தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் அரக்கோணம் அடுத்த அம்மனூர் தேவதானம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பழகச் சென்றார்.

    அப்போது திடீரென தாமோதரன் நீரில் மூழ்கினார். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அந்த பகுதி மக்கள் கிணற்றில் குதித்து தாமோதரனை தேடினர்.

    இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தாமோதரனை பிணமாக மீட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் தாமோதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×