என் மலர்
ராணிப்பேட்டை
- ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது
- பொதுமக்களை முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளியது.
கலவை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்க ஏராளமான பொதுமக்கள் வந்தனர்.
இதில் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். ஆனால் கலெக்டரை தவிர பிற துறை அதிகாரிகள், பொதுமக்களின் குறைகளை கவனிக்காமல் செல்போனில் மூழ்கினர்.
குறிப்பாக மின்வாரிய அதிகாரி ஒருவர் தனது செல்போனில், சமூக வலைதளமான பேஸ்புக் பயன்படுத்திக் கொண்டிருந்தது பொதுமக்களை முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளியது.
அதே போல பல அதிகாரிகள் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணம் பொது மக்களிடையே உள்ள நிலையில், அதில் பங்கேற்க வரும் அரசு அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளை கவனிக்காமல் செல்போனில் மூழ்குவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்
- போலீசார் மடக்கி பிடித்தனர்
அரக்கோணம்:
நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில், அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 6-வது பிளாட்பாரத்திற்கு வந்தது.
அப்போது பயணிகள் சிலர் இறங்கினர். சிலர் ரெயிலில் ஏறியதும் சிறிது நேரம் கழித்து ரெயில் புறப்பட்டது.
அந்த நேரத்தில் ரெயிலின் படியில் நின்று கொண்டிருந்த கன்னியாகுமரியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் இருந்து செல்போனை பிளாட்பாரத்தில் இருந்த ஒரு வாலிபர் பறித்து கொண்டு ஓடினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன் கூச்சலிட்டார். உடனடியாக சக பயணிகள் பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான், ரெயில்வே இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அவர் கர்நாடக மாநிலம், பங்காருபேட்டையைச் சேர்ந்த சக்திவேல் (வயது 24) என்பது தெரியவந்தது.
இவர் ஏற்கனவே பலமுறை ரெயிலில் பயணிகளிடம் செல்போன் பறித்தது தெரியவந்தது. மேலும், இவர் மீது பங்கா ருபேட்டை, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து, அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.20,000 மதிப்பிலான செல்போனை பறிமுதல் செய்தனர்.
- வருகிற 3-ந் தேதி நடக்கிறது
- 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறும்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு அருகே கிளாம்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வர சித்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற செப்டம்பர் மாதம் 3-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை)காலை நடைபெறுகிறது.
பின்னர் மகா தீபாரா தனை காண்பிக்கப்பட்டு அறுசுவை அன்னதானம் நடைபெறும்.
இதனையடுத்து இரவு 7 மணிக்கு சாமி ஊர்வலம் நடைபெறும்.முன்னதாக செப்டம்பர் 2-ந் தேதி (சனிக்கிழமை)காலை மகா கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெறும்.
இரவு முத்து மாரியம்மன் நாடக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கிளாம்பாடி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.
- போலீசார் கடும் எச்சரிக்கை
- ஆவணங்களை கட்டாயமாக சரிபார்க்க வேண்டும்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தனியார் திருமண மண்டபத்தின் உரிமையாளர்களுக்கு குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுப்பதோடு அதனை குறைப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி திருமணம் நடத்த மண்டபதிற்கு வரும் பெற்றோர்களிடம் மணப்பெண்ணிற்கு 18-வயது பூர்த்தி அடைந்துள்ளதா என்பதை கேட்டறிய வேண்டும்.
மேலும் மண்டப உரிமையாளர்களாகிய நீங்கள் பெண்ணின் வயதை உறுதி செய்ய கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயமாக சரிபார்க்க வேண்டும்.
அவ்வாறு சரிபார்க்காமல் குழந்தை திருமணம் ஏதாவது நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே நீங்களும் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மண்டப உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- ரெயில்வே போலீசார் விசாரணை
அரக்கோணம்:
சென்னை சென்டிரலில் இருந்து மங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் - செஞ்சி பனப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் பயணம் செய்ததிருப்பூர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (வயது 28) என்பவர் ரெயில் பெட்டியில் இருந்து தவறி விழுந்தார்.
இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், செந்தில் குமார் தலைமையிலான போலீசார், கை மற்றும் கால்களில் பலத்த காயமடைந்து இருந்த நந்தகுமாரை மீட்டு சிகிச்சைக் காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மீன் பிடிக்க சென்றபோது விபரீதம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது சலாவுதின் (வயது 43). திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன், 1மகள் உள்ளனர். முகமது சலாவுதின் அரக்கோணம் பாப்பாங்குளம் பகுதியில் தங்கி பழைய இரும்பு பொருள் வாங்கும் கடையில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் சலாவுதின் நேற்று அதி காலை சுமார் 5 மணியளவில் மங்கம்மாபேட்டை பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது திடீரென சலாவுதின் ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்து விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஏரியில் இருந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி பரிதாபம்
- ஆரணியை சேர்ந்தவர்
ராணிப்பேட்டை:
திருவண்ணாமலை மாவட்டம் ,ஆரணி தாலுகா, ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன், இவரது மகன் ரகுராஜ் (வயது 25).
இவர் நேற்று முன்தினம் வேலை சம்பந்தமாக ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த அைணக்கட்டு சாலை மேம்பாலம் பகுதியில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பைக் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது.
இதில் ரகுராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி ரகுராஜ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூடுதல் தலைமை செயலாளர் பேச்சு
- நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், மாசற்ற எரிசக்தியும், தொழில் முன்னேற்றமும் குறித்து ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்கள் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், எரிசக்தி வளர்ச்சி முகமை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து அதன் வாயிலாக பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்து, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறார்.
தமிழக அரசின் சிறப்பு திட்டத்தில், படித்த இளைஞர்களுக்கு, முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்கிட 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கி வருகிறது.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 35 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கி வருகிறது. மேலும் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கிடவும், காற்றாலை மற்றும் சூரிய மின் ஆலை அமைக்கவும், விடுதி மற்றும் உணவகம், திருமண மண்டபம், வணிக வளாகம் கட்டுவதற்கும் கடனுதவி அளித்து வருகிறது.
புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும், தொழில்களை விரிவுபடுத்து பவர்களுக்கும் பல்வேறு கடன் உதவிகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் செய்து வருகிறது. இதனை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இக்கழகத்தின் முக்கிய நோக்கம் கடனுதவி வழங்குவது அல்ல.
தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் என்ஜினீயரிங் தொழிற்சாலைகள், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் களம்பூர் பகுதிகளில் அதிக அளவில் நெல் அரவை செய்யப்பட்டு வருவதால் அவர்களுடைய தொழில்கள் விரிவுபடுத்துவதற்கும் நவீன உத்திகளான சூரிய தகடுகளை பயன்படுத்தி மாசற்ற எரிசக்தி, பசுமை உற்பத்தியை பின்பற்றி தொழில் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் சென்னை முதுநிலை மண்டல மேலாளர் பழனிவேல், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கிளை மேலாளர் ஜனார்தனன். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன் மற்றும் அரிசி ஆலை சங்கம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்கூடம் சங்கங்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
Heading
Content Area
- நெமிலி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
- மேம்பாலம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் முன்தினம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை வழங்கிய முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.நெமிலி ஒன்றியத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது .
நெமிலி கல்லாறில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்த அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், ஒன்றிய பொறியாளர் ராஜேஷ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
- கைவினை பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது
- ராணுவ அதிகாரிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே உள்ள வெங்கடேசபுரத்தில் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் செயல்பட்டு வருகிறது.
இங்கு தமிழக அரசின் கதர்துறை சார்பில் சிறப்பு பொருட்காட்சி நடைபெற்றது.
இதில் கதர் ஆடைகள் மற்றும் கைத்தறி ஆடைகள், பனை ஓலைகளால் செய்யப்பட்ட கைவினை பொருட்கள் மற்றும் மகளிர் குழு சார்பில் தயார் செய்யப்பட்ட பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்த கண்காட்சியில் ஐ.என்.எஸ் ராஜாளியில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டு பல்வேறு பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
காதி தலைமை நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு வீரர்களுக்கு காதி பொருட்கள் குறித்த சிறப்புகளை கூறினார்.
- கைவினை பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது
- ராணுவ அதிகாரிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே உள்ள வெங்கடேசபுரத்தில் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் செயல்பட்டு வருகிறது.
இங்கு தமிழக அரசின் கதர்துறை சார்பில் சிறப்பு பொருட்காட்சி நடைபெற்றது.
இதில் கதர் ஆடைகள் மற்றும் கைத்தறி ஆடைகள், பனை ஓலைகளால் செய்யப்பட்ட கைவினை பொருட்கள் மற்றும் மகளிர் குழு சார்பில் தயார் செய்யப்பட்ட பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்த கண்காட்சியில் ஐ.என்.எஸ் ராஜாளியில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டு பல்வேறு பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
காதி தலைமை நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு வீரர்களுக்கு காதி பொருட்கள் குறித்த சிறப்புகளை கூறினார்.
- கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்
- 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பாலசம் அகடமி இணைந்து, திடக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நிகழ்ச்சி விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பல்ராம் மெமோரியல் டிரஸ்ட் பொருளாளர் சுந்தர் தலைமை தாங்கினார்.
பேரூராட்சி தலைவர் லதாநரசிம்மன், துணை தலைவர் தீபிகாமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு திட்டக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.
முன்னதாக மகளிர் குழுவினர் அமைத்திருந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்களில் தயாரித்த பொம்மைகள், மற்றும் மக்கும் குப்பைகள்,மறுசூழற்சி குப்பைகள்,மக்காத மற்றும் மறுசுழற்சி செய்யமுடியாத பொருட்கள் அடங்கிய கண்காட்சியை பார்வையிட்டார்.
இதில் வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேஷ், திடக்கழிவு மேலாண்மை வல்லுநர் ராஜசேகர், மற்றும் வார்டு கவுன்சிலர்கள் காவேரி ப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி, தக்கோலம், அம்மூர், திமிரி, விளாம்பாக்கம், கலவை உள்ளிட்ட 8 பேரூராட்சிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள், பொது மக்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






