என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • ரூ.2 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா நகரில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு பங்க் கடையில் சோதனை நடத்தினர்.

    சோதனையில் கடையில் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது அதை தொடர்ந்து போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் சேட்டு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, கடைக்கு சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நலம் பாதித்து மாணவர்கள் படிக்க முடியாத சூழல் இருந்து வருகிறது
    • சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

    நெமிலி

    நெமிலி அருகே அரசு பஸ் வசதியில்லாததால், தினமும் சுமார் 5 கி.மீ தூரம் நடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள்,பள்ளி நேரத்திற்கு அரசு பஸ் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்வீதி, வேப்பேரி, கொந்தங்கரை, காபிகள்ஓடை ஆகிய கிராமங்களில் சேர்ந்த பள்ளி மாணவர்கள் காலை நேரங்களில் பஸ் வசதி இல்லாததால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். அதேபோல் மாலை நேரங்களில் பள்ளி முடிந்து நடந்து வருவதால் மாணவர்கள் சோர்வடைந்து விடுகின்றனர்.

    இதனால் உடல்நலம் பாதித்து மாணவர்கள் படிக்க முடியாத சூழல் இருந்து வருகிறது.

    இதுதொடர்பாக அப்பகுதி மக்கள், மாணவர்கள் கூறுகையில்:-

    பாணாவரம் பகுதியில் இருந்து கீழ்வீதி வழியாக நெமிலிக்கு அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக அந்த அரசு பஸ் வருவதில்லை.

    இதுதொடர்பாக சோளிங்கரில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நேரில் சென்று கோரிக்கை வைத்தும். இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் கீழ்வீதி பகுதியில் இருந்து வேப்பேரி வழியாக நெமிலிக்கு செல்லும் சாலையில் நெமிலி அருகே சென்னை- பெங்களூர் தேசிய அதிவிரைவு சாலை பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் அப்பகுதியில் அதிகளவில் கனரக வாகனங்கள் சென்று வருவதால் அந்த தார்சாலை முழுவதும் சிதலமடைந்து காணப்படுகிறது.

    அந்த வழியாக நடந்து மற்றும் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மாணவ, மாணவிகளின் நலன் கருதி காலை 8 மணி மற்றும் மாலை 5 மணிக்கு பாணாவரம் பகுதியில் இருந்து கீழ்வீதி வழியாக நெமிலிக்கு அரசு பஸ் வசதியை செய்து தர வேண்டும். கீழ்வீதி கிராமத்தில் இருந்து வேப்பேரி வழியாக நெமிலிக்கு செல்லும் சேதமடைந்த சாலைகளை விரைவில் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்
    • போலீசார் விசாரணை

    கலவை,

    ஆற்காடு அருகே தாழனூர் இந்திராநகரை சேர்ந்தவர் வெங்கடேசன் கட்டிடமேஸ்திரி. இவரது மனைவி மகேஸ்வரி(வயது 39).கண்பார்வை குறைபாடு உடையவர் என கூறப்படுகிறது.

    வீட்டின் அருகே உள்ள தொட்டியில் தண்ணீர் எடுக்க மகேஸ்வரி சென்றார்.

    அப்போது கால் தவறி தொட்டியில் விழுந்தார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மகேஸ்வரி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாசில்தார் பணிநீக்கம் எதிரோலியாக நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் செல்வகுமார், விஜயசேகரன், வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாசில்தார் மனோஜ் முனியன் என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதில் வருவாய்த்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

    • ஓமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை

    சோளிங்கர் அடுத்த பரவத் தூரில் ஒருவர் ஓமியோபதி படித்து ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தது.

    அதைத்தொ டர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் சோளிங்கர் அரசு மருத் துவமனை தலைமை மருத்துவர் பாஸ்கர், டாக்டர் கருணாகரன், மருந்தாளுனர் சேகர் ஆகியோர் பெரியவைலம்பாடி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அதில் பெரிய தெருவை சேர்ந்த விஜய் (வயது 29) என்பவர் ஓமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அங்கி ருந்த ஊசிகள் மற்றும் ஆங்கில மருந்துகளை பறிமுதல் செய்த னர். விஜயை சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.

    இது குறித்து சோளிங் கர் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலை பள்ளிக்கு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் சமூக பாதுகாப்புத்துறையின் சார்பில் சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லம் காரை கூட் ரோடு பகுதியில் இயங்கி வருகிறது.

    இந்த இல்லத்தில், பெற்றோரால் கைவிடப்பட்ட, பெற்றோர் இல்லாத, மாணவர்கள் 33 பேர் தங்கி சுற்றுப்புறங்களில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

    இவர்கள் பள்ளிக்கு சென்று மீண்டும் இல்லத்திற்கு திரும்பாமல் மாயமாகி வருவது தொடர்ந்து வருகிறது.

    இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டம் , மறைமலை நகர் பகுதியை சேர்ந்த மாணவன் சிவக்குமார் (வயது 16) ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து பள்ளிக்கு சென்று வந்தான்.

    நேற்று காலை பள்ளிக்கு சென்ற சிவக்குமார் மாலை இல்லத்திற்கு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்காததால் இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு) கோமதி ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் ஒரு மாணவன் மாயமாகிய நிலையில் மீண்டும் ஒரு மாணவன் மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
    • பொதுமக்களின் புகார்களுக்கு விரைவில் தீர்வு காண்பதால் முடிவு

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரம் போலீஸ் நிலையத்திற்க்கு பொதுமக்களின் புகார்களை 2 தினங்களில் விசாரணை செய்து தீர்வு காண்பது, பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் உரையாடுவது, போலீஸ் நிலையத்தை சுகாதாரமாக வைத்துள்ளது உள்ளிட்டவற்றை பாராட்டி ஐ.எஸ்.ஓ. சான்று வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் ஐ.எஸ்.ஓ. தணிக்கையாளர் பி.கார்த்திகேயன் பாணாவரம் போலீஸ் ஸ்டேஷனை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதியிடம் தரச்சான்றிதழை நேற்று வழங்கினார்.

    கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிருஷ் அசோக், பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பார்த்திபன் உள்ளிட்ட போலீசார் பலர் உடனிருந்தனர்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் அறிவுறுத்தல்
    • வளர்ச்சி பணிகளுக்காக அகற்றப்படுகிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பசுமைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மரக்கன்றுகள் நட வேண்டும்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரக்கோணம் நெடுஞ்சாலை பணி, பனப்பாக்கம் தொழிற்பூங்காவிற்கு அணுகு சாலை அமைத்தல், தண்டலம்- பேரப்பாக்கம், தக்கோலம்-அரிகிலபாடி சாலை அகலப்படுத்தும் பணி, வாலாஜா நெடுஞ்சாலைக்குட்பட்ட பாகவெளி-முசிறி-அரிசனகாலனி சாலை அமைத்தல் ஆகிய வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ள சாலை ஓரங்களில் உள்ள மரங்களை அகற்றிட பசுமைக் குழுவின் அனுமதி கோரி நடத்தப்பட்ட இந்த பசுமைக் குழுக் கூட்டத்தில் மரங்களை அகற்றிட ஒப்புதல் வழங்க ப்பட்டுள்ளது.

    அனைத்து வகையான வளர்ச்சி பணிகள், கட்டிடப் பணிகளுக்காக அகற்றப்படும் மரங்களுக்கு மாறாக ஒரு மரத்திற்கு தலா 10 மரக் கன்றுகள் நடப்பட வேண்டும் என்ற ஆணையினை அனைத்து துறைச்சார்ந்த அலுவலர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

    கண்காணிப்பு

    சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, வனத்துறை ஆகிய துறைகள் மூலம் இப்பணிகள் நடைபெறுவதை கண்காணித்திட தமிழ்நாடு முதல் அமைச்சர் அலுவலகத்திலிருந்து மாவட்டத்திற்கு ஒரு பசுமை இயக்க கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, பசுமைக்குழு மூலம் மரங்களை அகற்றிட ஒப்புதல் வழங்கிய மேற்படி இடங்களில் அகற்றப்படும் மரங்களுக்கு தலா 10 மரக்கன்றுகள் நடப்படு வதை மாவட்ட கலெக்டர் மற்றும் வனத்துறையி னருடன் இணைந்து பசுமை இயக்க கண்காணிப்பு அலுவலர் கண்கா ணிப்பார்கள்.

    ஆகவே இனிவரும் காலங்களில் மேற்படி பணிகளின் போது அகற்றப்படும் மரங்களுக்கு மாறாக துறைகளின் மூலம் நடப்படும் மரக்கன்றுகளை பசுமை இயக்க கண்காணிப்பு அலுவலர் கண்காணித்து அதன் அறிக்கையினை துறையின் மூலம் தமிழ்நாடு முதல் அமைச்சரின் பார்வைக்கு சமர்ப்பிக்க ப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் உதவி வன பாதுகாப்பு அலுவலர் மணிவண்ணன், சப்-கலெக்டர் சத்திய பிரசாத், வனசரகர் சரவணன் பாபு, பசுமை இயக்க கண்காணிப்பு அலுவலர் ஏஞ்சலின் சூசை நாயகி, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு உள்பட பசுமை இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • அஷ்டாபிஷேகம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் சபரி நகரில் உள்ள நவசபரி ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவில் குருசாமி ஜெயச்சந்திரன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    காலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம் நடைபெற்றது. மேலும் அத்தப்பு கோலம் வரையப்பட்டு ஓணம் பூஜைகள் நடைபெற்றது.

    இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும், சபரி சாஸ்தா சமிதி குழுவினரின் பஜனையும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு ஹரிவராசனம் பாடல் பாடி கோவில் நடை சாத்தப்பட்டது. இதில் ராணிப்பேட்டை சிப்காட் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.
    • இன்று காலை 4 மணிநேரம் ரெயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    அரக்கோணம்:

    சென்னை செண்ட்ரல் அரக்கோணம் இடையே தண்டவாள சீரமைப்பு பணிகள் இன்று நடந்தது.

    இதனால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை சென்னைக்கு செல்லும் மின்சார ரெயில்கள்,எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

    இதனால் சென்னை செல்ல திட்டமிட்டு இருந்த பயணிகள் அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு வந்த போது டிக்கெட் கொடுக்கும் இடத்தில் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என ஊழியர்கள் தெரிவித்தனர். முன் அறிவிப்பு இன்றி திடீரென அறிவித்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் இதுபோன்று தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இன்று காலை 4 மணிநேரம் ரெயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    • மின் கம்பங்கள் சாய்ந்தது
    • மின் சப்ளை பாதிப்பால் மக்கள் அவதி

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் மின் சப்ளை நிறுத்தம் செய்யப்பட்டது. மழை நின்ற பின்னர் மின் சப்ளை தரப்பட்டது.

    ஆனால் மழையுடன் பலத்த காற்று வீசியபோது போலீஸ் குடியிருப்பு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மரங்கள் முறிந்து மின்சார வயர்க ளின் மீது விழுந்ததால் சில மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.

    இதனால் அப்பகுதியில் இரவு முழுவதும் மின்சப்ளை பாதிக்கப்பட்ட தாக பொதுமக்கள் தெரிவித்தனர்

    வெயிலின் தாக்கத்திற்கு பின்னர் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    ராணிப்பேட்டை 24.6, பாலாறு அணைக்கட்டு 28, வாலாஜா 18.8, ஆற்காட்டு 24.8, கலவை 8.2 அளவு மழை பெய்துள்ளது.

    • நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம்
    • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதால் நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா நகர மன்றத்தின் சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் கமலராகவன், ஆணையாளர் (பொறுப்பு) மங்கையர்க்கரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வாலாஜா நகரில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.

    எனவே நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×