என் மலர்
ராணிப்பேட்டை
- 2 கார் பறிமுதல்
- போலீசார் விசாரனை
கண்ணமங்கலம்:
சந்தவாசல் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்த போது திருடப்பட்ட கார் என்பதுதெரியவந்தது.
விசாரணையில் அவர் முனியந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 24) என்பதும்,திருடப்பட்ட கார் வெள்ளூர் குஜால்பேட்டையில் வசிக்கும் சத்துணவு அமைப்பாளர் மணிவண்ணனுக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் இருந்து மற்றொரு காரையும்
திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
- பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்
- ஆசிரியர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசிபெற்றனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1987-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவியர்கள் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 'மலரும் நினைவுகள் நண்பர்கள்' என்ற தலைப்பில் சிப்காட்டில் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
முன்னாள் மாணவர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அப்போது பள்ளியில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வி.ஆர்.கல்யாணசுந்தரம், தீனதயாளன், அக்பர், பழனி, கல்யாணி, பிரகாசம், உஷா, ஷீபா ஆகியோர் கலந்து கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை நினைவு கூர்ந்து பேசினர்.
பின்னர் முன்னாள் மாணவ அனைவரும் தங்களின் ஆசிரியர்களின் கால்களை விழுந்து வணங்கி ஆசிபெற்றனர்.
- ஆசிரியர் தினம் கொண்டாடும் நிலையில் அவலம்
- நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ராணிப்பேட்டை:
முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதா கிருஷ்ணன். இவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் 1888-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பிறந்தார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன வாலாஜா அரசு பள்ளியில் சேர்ந்தார். இதற்காக அவர் வாலாஜாவில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து பள்ளி படிப்பை முடித்தார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த வாலாஜா அரசு பள்ளி தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.
இந்த பள்ளி 120 ஆண்டுகளை கடந்தும் திறமை மிக்க மாணவ ர்களை உருவாக்கி வருகிறது.
இந்த பள்ளியில் மு.வரதரா சனார் முன்னாள் தலைமைச் செயலர் பத்ம நாபன், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் உள்ளிட்ட சாத னையா ளர்கள் படித்துள்ளனர்.
இந்த அரசு பள்ளி 1867 -ம் ஆண்டு தொடங்க ப்பட்டது. நகராட்சி நிர்வா கத்தால் அந்த காலத்திலேயே மிகத் தரம் வாய்ந்த பர்மா தேக்குகளால் மேற்தளம் மாடிபடிக் கட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .
மிகப் பெரிய வாணிப நகர மாக விளங்கிய வாலா ஜாவில் பல வியா பாரி களின் பிள்ளைகள் இந்த பள்ளிக்கூ டத்தில் கல்வி கற்பதை மிகவும் பெருமை யாக கருதுகின்றனர்.
கடந்த 1920 -ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் திவான் பகதூராகவும் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்த ராஜகோபாலாச்சாரி யார் முயற்சியினால் எச். வடிவில் பெரிய அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சுதந்திரத்தி ற்கு பிறகு 1949 -ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றியு ள்ளனர்.
தற்போது பழமை வாய்ந்த இந்த பள்ளியில் உள்ள கட்டி டங்கள் சிலமடைந்து உள்ளன. சில கட்டிடங்கள் இடித்து விழும் நிலையில் உள்ளன. ஓடுகள் சரிந்தும், சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. நாளை இந்த பள்ளியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக கொண்டாடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இடியும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(வயது 63), இவர் காவேரிப்பாக்கம் பஜார் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இவரது தம்பியின் மகள் திருமணம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் நள்ளிரவு வீடு திரும்பினர்.
பின்னர் அதிகாலை 4-மணியளவில் மீண்டும் குடும்பத்தினருடன் ஆரணி திருமணத்திற்கு சென்று விட்டு, நேற்று காலை 11-மணி அளவில் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தத. இதில் பீரோவில் இருந்த 13 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விக்னேஷ் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.
- விக்னேசை அழைத்து கொன்றது யார்? முன்விரோதம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 27). இவரது மனைவி யாமினி (22). இவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
தம்பதியினருக்கு குழந்தை இல்லை. விக்னேஷ் தனது மனைவி யாமினியுடன் மாமனார் ஒலிச்சந்திரன் வீட்டில், வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு விக்னேஷ், யாமினி அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனி குடித்தனம் சென்றனர்.
விக்னேஷ் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு விக்கி மற்றும் யாமினி ஆகியோர் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது நண்பர் அழைப்பதாக செல்போனை சார்ஜர் போட்டுவிட்டு விக்னேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
பொழுது விடிந்த பின்பும் விக்னேஷ் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன யாமினி மற்றும் அவரது உறவினர்கள் அந்த பகுதியில் தேடினர்.
அப்போது சித்தேரி ரெயில்வே கேட் அருகே மாந்தோப்பில் கிணற்றின் அருகே விக்னேஷ் கழுத்து அறுத்து ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர்.
அவரது உடலை பார்த்து யாமினி கதறி அழுதார்.
இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவில் விக்னேசை அழைத்து கொன்றது யார்? முன்விரோதம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த வாலாஜா அரசு பள்ளி தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.
- சுதந்திரத்திற்கு பிறகு 1949-ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.
ராணிப்பேட்டை:
முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். இவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் 1888-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பிறந்தார்.
அப்போது தமிழகத்தின் முதல் நகராட்சியான வாலாஜாவில் அரசு பள்ளி தரம் வாய்ந்ததாக இருந்தது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் வாலாஜா அரசு பள்ளியில் சேர்ந்தார். இதற்காக அவர் வாலாஜாவில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து பள்ளி படிப்பை முடித்தார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த வாலாஜா அரசு பள்ளி தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.
இந்த பள்ளி 120 ஆண்டுகளை கடந்தும் திறமைமிக்க மாணவர்களை உருவாக்கி வருகிறது .
இந்த பள்ளியில் மு.வரதராசனார் முன்னாள் தலைமைச் செயலர் பத்மநாபன், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் உள்ளிட்ட சாதனையாளர்கள் படித்துள்ளனர்.
இந்த அரசு பள்ளி 1867-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தால் அந்த காலத்திலேயே மிகத் தரம் வாய்ந்த பர்மா தேக்குகளால் மேற்தளம் மாடிபடிக் கட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .
மிகப் பெரிய வாணிப நகரமாக விளங்கிய வாலாஜாவில் பல வியாபாரிகளின் பிள்ளைகள் இந்த பள்ளிக்கூடத்தில் கல்வி கற்பதை மிகவும் பெருமையாக கருதுகின்றனர்.
கடந்த 1920-ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் திவான் பகதூராகவும் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்த ராஜகோபாலாச்சாரியார் முயற்சியினால் எச். வடிவில் பெரிய அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு பிறகு 1949-ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.
தற்போது பழமை வாய்ந்த இந்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் சிதிலமடைந்து உள்ளன. சில கட்டிடங்கள் இடித்து விழும் நிலையில் உள்ளன.
ஓடுகள் சரிந்தும், சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது.
நாளை இந்த பள்ளியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக கொண்டாடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இடியும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- செயற்பொறியாளர் தகவல்
அரக்கோணம்:
அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பாதைகளில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மோசூர், அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி. மற்றும் வின்டர்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எச்.டி.சர்வீசஸ், அரக்கோணம் நக ரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ் குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரிகுப்பம், அம்மனூர், நேவல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும். இதனை செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
- மின்சார கட்டண விவரம் குறித்து விசாரணை
- அதிகாரிகள் உடன் இருந்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் உரிமை தொகை பெற விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி வாலாஜா நகராட்சிக்குட்பட்ட கச்சால் நாயக்கர் தெருவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் கலெக்டர் வளர்மதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்தவர்களின் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு ஆகியவற்றை பார்வையிட்டும், குடும்ப ஆண்டு வருமானம், சொந்த நிலம் உள்ளதா, குடும்பத்தில் உள்ள நபர்கள் விவரம், வேலை, கார் உள்பட வாகனம் உள்ளதா, மின்சார கட்டண விவரம் ஆகியவை குறித்து வீடு வீடாக சென்று கலெக்டர் கேட்டறிந்தார்.கலெக்டர் ஆய்வின்போது தாசில்தார் வெங்கடேசன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மங்கையர்க்கரசன் உள்பட வருவாய்த் துறையினர் உடன் இருந்தனர்.
- மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை சோளிங்கர் ரோடு பகுதியைச் சேர்ந்த கரண் (வயது 21), கணபதி நகரை சேர்ந்தவர் சரண்குமார் (22) மற்றும் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுபாஷ் (30). இவர்கள் மூவரும் நண்பர்கள்.
இந்நிலையில் நேற்று மாலை வாலாஜாபேட்டையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு மெடிக்கல் பார்ம் வாங்குவதற்காக 3 பேரும் ஒரே பைக்கில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது காவேரிப்பாக்கம் அடுத்த மலைமேடு அருகே வரும் போது பைக் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் பாதையை மாற்றுவதற்காக வைத்திருந்த தடுப்ப கல் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கரண் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பலத்த காயமடைந்த சரண்குமார் மற்றும் சுபாசை மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிைலயில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சரண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் இவரது மகள் ராசாத்தி (வயது 22).
இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 31-ந் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது எந்த பதிலும் இல்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர் .
இந்நிலையில் நேற்று காலை கட்டளைபாட்டை தெருவில் உள்ள விவசாய கிணற்றில் ஒரு இளம் பெண்ணின் உடல் மிதப்பதாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து போலீசார் விசாரணையில் மாயமான துரைராஜ் மகள் ராசாத்தி என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக இளம் பெண்ணின் தந்தை துரைராஜ் நேற்று காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லஞ்சம் வாங்கியதால் நடவடிக்கை
- கலெக்டர் உத்தரவு
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே செல்வமந்தை கிராமத்தில் கடந்த 29-ந் தேதி மனை பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர் வாக அலுவலர் சதீஷ் மற்றும் உதவியாளர் ராஜலிங்கம் ஆகிய இருவரும் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது ராணிப் பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் உதவியாளர் ராஜலிங்கத்தை அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
- அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர்
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த செங்காடு மோட்டூர் கிராம பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் மண் அள்ளுவதற்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் முயற்சித்துள்ளது.
ஏற்கெனவே கிராம பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து, ஏரியில் மண் அள்ளுவதற்காக கொண்டுவரப்பட்ட இயந்திரங்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஏரியில் மண் அள்ள கூடாது என வாலாஜாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷா. வெங்கட் மற்றும் அதிகாரிகளிடம் ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து புகார் மனுவை வழங்கினர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






