search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மளிகைகடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
    X

    மளிகைகடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(வயது 63), இவர் காவேரிப்பாக்கம் பஜார் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இவரது தம்பியின் மகள் திருமணம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் நள்ளிரவு வீடு திரும்பினர்.

    பின்னர் அதிகாலை 4-மணியளவில் மீண்டும் குடும்பத்தினருடன் ஆரணி திருமணத்திற்கு சென்று விட்டு, நேற்று காலை 11-மணி அளவில் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தத. இதில் பீரோவில் இருந்த 13 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×