என் மலர்
ராணிப்பேட்டை
- நெய்தீபம் ஏற்றி அம்மனை வழி பட்டனர்
- குழந்தையின்மை, திருமண தடை, தொழில்தடை ஆகியவை விலகும் என்பது நம்பிக்கை
கலவை:
ஆற்காடு அடுத்து முப்பந்தொட்டியில் பகுதியில் உள்ள வாராஹி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் திரளான பக்தர்கள் வாராஹி அம்மனை வழிபட்டுசெல்வது வழக்கம். இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி அடுத்த 5-வது நாளில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது.
இந்த மாதத்திற்கான தேய்பிறை பஞ்சமி வழிபாடு நேற்று காலை நடந்தது. அதில் பக்தர்கள் தேங்காய் மற்றும் பூசணிக்காயை 2 உடைத்து அதில் நெய்தீபம் ஏற்றி அம்மனை வழி பட்டனர்.
நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் குடும்பத்தில் உள்ள பிரச்சினை குழந்தையின்மை, திருமண தடை, தொழில்தடை ஆகியவை விலகும் என்பது நீண்ட கால நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த பஞ்சமி வழிபாட்டில் கலந்து கொள்ள மாதந்தோறும் ராணிப்பேட்டை, வேலூர், பெங்களூர் திருப்பத்தூர், சென்னை மற்றும் வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வாராஹி அம்மனை வழிபட்டு அருள் பெற்று செல்கின்றனர்.
- பாணாவரம் சுப்பிரமணிய சாமி கோவிலில் நடந்தது
- பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
காவேரிப்பாக்கம்:
பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் உள்ள சுப்ரமணியசாமி, வள்ளி,தேவசேனா கோவிலில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு மூலவர், உற்சவர் சுப்ரமணியசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம், செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து மாலை சுப்ரமணிய சாமி, வள்ளி, தேவசேனா சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு மங்கள வாத்தியங்களுடன் கிரிவல நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாணாவரம், நெமிலி, காவேரிப்பாக்கம், ஓச்சேரி, சோளிங்கர் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- புதிய கட்டுப்பாடுகள்
- பெட்டி வடிவிலான ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சிலை நிறுவிட சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பத்துடன் சிலை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் தனியார் இடமாக இருப்பின் நில உரிமையாளர் இசைவுக்கடிதமும், பொது இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட துறையின் ஆட்சேபணையில்லாச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொட்டகைக்கு உட்பகுதியில் வைக்கக் கூடாது. விநாயகர் சதுர்த்தி அன்று நிறுவ உத்தேசி க்கப்பட்டுள்ள சிலைகள் அதன் அடிப்பாகம் உட்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாற்று மதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் மருத்துவமனைகள்,கல்வி நிறுவனங்கள் அருகாமை யில் சிலைகள் அமைக்க க்கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி அமைப்பது தவிர்த்து பெட்டி வடிவிலான ஒலிபெரு க்கிகளை பயன்படுத்த வேண்டும்.
இவ்விழா தொடர்பாக கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பின் அவற்றின் ஒலி அளவும் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே இருத்தல் வேண்டும். விழாக்குழுவினர் சட்டத்திற்கு புறம்பான வகையில் மின்சாரத்தினை பயன்படுத்துவதை தவிர்க்க உரிய கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். விழாக்குழுவினர் சார்பாக இரு தன்னார்வ லர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணி மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மற்ற மதத்தினர்களின் வழிபாட்டினை, நம்பிக்கை களை இழிவுபடுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்ப கூடாது.
5 நாளில் கரைப்பு
சிலை நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள் சிலைகள் கரைப்பதற்கு விழாக்குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலங்கள் காவல் துறை யினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்று கரைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் எந்திரமயமாக்கல் திட்டத்தின் விவசாயிகளுக்கு மானியத்தில் பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் அரசு மானியத்துடன் கூடிய பவர் டில்லர் எந்திரங்களை வழங்கினார். மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ 2 கோடியே 62 லட்சம் மதிப்பில், ரூ.1 கோடி மதிப்பிலான மானியத்தில் மொத்தம் 117 பவர் டில்லர், 4 பவர் வீடர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் அமைச்சர் ஆர்.காந்தி ,மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது சோளிங்கர் அருகே சோமசமுத்திரம் பகுதியை சேர்ந்த மணி தான் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறேன்.
சிகிச்சைக்காக சென்னை சென்று வருவதால் போக்குவரத்து செலவினைமேற்கொள்ள போதிய வசதி இல்லை, மேலும் முதியோர் உதவி தொகை பெற தகுதி இல்லை எனமனு கொடுத்தார். இதை தொடர்ந்து அவருக்கு மாதந்தோறும் தனது சொந்த செலவில் ரூ.1000 வழங்குவதாகவும், தனது அலுவலகத்தில் வந்து பெற்று கொள்ளுமாறு அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
இதில் ஆற்காடு ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வழிபாடு
- நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பீடாதிபதி டாக்டர்.முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நாளை புதன்கிழமை முதல் 3 நாட்கள் முப்பெரும் யாகங்கள் நடைபெறுகிறது.
அதன்படி நாளை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாலை 4 மணிக்கு நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு ஹோமமும், அபிஷேகமும், வெண்ணெய் சாற்றி சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு நடைபெறுகிறது.
7-ந் தேதி வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அஷ்ட கால மகா பைரவர் ஹோமமும், சொர்ண கால பைரவர் பூஜையும் விசேஷ அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுகிறது.
வருகிற 8-ந் தேதி நவமி திதியில் காலை முதல் மாலை வரை சர்வ மங்களங்களை தரும் மங்கள சண்டி யாகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
- பெங்களூரில் நடந்தது
- பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
கலவை:
பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குங்பூ மற்றும் கராத்தே போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு முதல் மற்றும் 2-ம் இடம் பெற்றனர்.
மாஸ்டர் கோட்டிஸ்வரன் தலைமையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ரோட்டரி தலைவர் பரத்குமார் ஏ.பி.ஜே அறக்கட்டளை தலைவர் கோபி மற்றும் கிரான்ட் மாஸ்டர் லீ ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
- 2 கார் பறிமுதல்
- போலீசார் விசாரனை
கண்ணமங்கலம்:
சந்தவாசல் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்த போது திருடப்பட்ட கார் என்பதுதெரியவந்தது.
விசாரணையில் அவர் முனியந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 24) என்பதும்,திருடப்பட்ட கார் வெள்ளூர் குஜால்பேட்டையில் வசிக்கும் சத்துணவு அமைப்பாளர் மணிவண்ணனுக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் இருந்து மற்றொரு காரையும்
திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
- பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்
- ஆசிரியர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசிபெற்றனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1987-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவியர்கள் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 'மலரும் நினைவுகள் நண்பர்கள்' என்ற தலைப்பில் சிப்காட்டில் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
முன்னாள் மாணவர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அப்போது பள்ளியில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வி.ஆர்.கல்யாணசுந்தரம், தீனதயாளன், அக்பர், பழனி, கல்யாணி, பிரகாசம், உஷா, ஷீபா ஆகியோர் கலந்து கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை நினைவு கூர்ந்து பேசினர்.
பின்னர் முன்னாள் மாணவ அனைவரும் தங்களின் ஆசிரியர்களின் கால்களை விழுந்து வணங்கி ஆசிபெற்றனர்.
- ஆசிரியர் தினம் கொண்டாடும் நிலையில் அவலம்
- நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ராணிப்பேட்டை:
முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதா கிருஷ்ணன். இவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் 1888-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பிறந்தார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன வாலாஜா அரசு பள்ளியில் சேர்ந்தார். இதற்காக அவர் வாலாஜாவில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து பள்ளி படிப்பை முடித்தார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த வாலாஜா அரசு பள்ளி தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.
இந்த பள்ளி 120 ஆண்டுகளை கடந்தும் திறமை மிக்க மாணவ ர்களை உருவாக்கி வருகிறது.
இந்த பள்ளியில் மு.வரதரா சனார் முன்னாள் தலைமைச் செயலர் பத்ம நாபன், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் உள்ளிட்ட சாத னையா ளர்கள் படித்துள்ளனர்.
இந்த அரசு பள்ளி 1867 -ம் ஆண்டு தொடங்க ப்பட்டது. நகராட்சி நிர்வா கத்தால் அந்த காலத்திலேயே மிகத் தரம் வாய்ந்த பர்மா தேக்குகளால் மேற்தளம் மாடிபடிக் கட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .
மிகப் பெரிய வாணிப நகர மாக விளங்கிய வாலா ஜாவில் பல வியா பாரி களின் பிள்ளைகள் இந்த பள்ளிக்கூ டத்தில் கல்வி கற்பதை மிகவும் பெருமை யாக கருதுகின்றனர்.
கடந்த 1920 -ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் திவான் பகதூராகவும் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்த ராஜகோபாலாச்சாரி யார் முயற்சியினால் எச். வடிவில் பெரிய அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சுதந்திரத்தி ற்கு பிறகு 1949 -ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றியு ள்ளனர்.
தற்போது பழமை வாய்ந்த இந்த பள்ளியில் உள்ள கட்டி டங்கள் சிலமடைந்து உள்ளன. சில கட்டிடங்கள் இடித்து விழும் நிலையில் உள்ளன. ஓடுகள் சரிந்தும், சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. நாளை இந்த பள்ளியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக கொண்டாடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இடியும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(வயது 63), இவர் காவேரிப்பாக்கம் பஜார் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இவரது தம்பியின் மகள் திருமணம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் நள்ளிரவு வீடு திரும்பினர்.
பின்னர் அதிகாலை 4-மணியளவில் மீண்டும் குடும்பத்தினருடன் ஆரணி திருமணத்திற்கு சென்று விட்டு, நேற்று காலை 11-மணி அளவில் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தத. இதில் பீரோவில் இருந்த 13 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விக்னேஷ் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.
- விக்னேசை அழைத்து கொன்றது யார்? முன்விரோதம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 27). இவரது மனைவி யாமினி (22). இவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
தம்பதியினருக்கு குழந்தை இல்லை. விக்னேஷ் தனது மனைவி யாமினியுடன் மாமனார் ஒலிச்சந்திரன் வீட்டில், வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு விக்னேஷ், யாமினி அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனி குடித்தனம் சென்றனர்.
விக்னேஷ் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு விக்கி மற்றும் யாமினி ஆகியோர் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது நண்பர் அழைப்பதாக செல்போனை சார்ஜர் போட்டுவிட்டு விக்னேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
பொழுது விடிந்த பின்பும் விக்னேஷ் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன யாமினி மற்றும் அவரது உறவினர்கள் அந்த பகுதியில் தேடினர்.
அப்போது சித்தேரி ரெயில்வே கேட் அருகே மாந்தோப்பில் கிணற்றின் அருகே விக்னேஷ் கழுத்து அறுத்து ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர்.
அவரது உடலை பார்த்து யாமினி கதறி அழுதார்.
இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவில் விக்னேசை அழைத்து கொன்றது யார்? முன்விரோதம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த வாலாஜா அரசு பள்ளி தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.
- சுதந்திரத்திற்கு பிறகு 1949-ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.
ராணிப்பேட்டை:
முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். இவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் 1888-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பிறந்தார்.
அப்போது தமிழகத்தின் முதல் நகராட்சியான வாலாஜாவில் அரசு பள்ளி தரம் வாய்ந்ததாக இருந்தது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் வாலாஜா அரசு பள்ளியில் சேர்ந்தார். இதற்காக அவர் வாலாஜாவில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து பள்ளி படிப்பை முடித்தார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த வாலாஜா அரசு பள்ளி தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.
இந்த பள்ளி 120 ஆண்டுகளை கடந்தும் திறமைமிக்க மாணவர்களை உருவாக்கி வருகிறது .
இந்த பள்ளியில் மு.வரதராசனார் முன்னாள் தலைமைச் செயலர் பத்மநாபன், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் உள்ளிட்ட சாதனையாளர்கள் படித்துள்ளனர்.
இந்த அரசு பள்ளி 1867-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தால் அந்த காலத்திலேயே மிகத் தரம் வாய்ந்த பர்மா தேக்குகளால் மேற்தளம் மாடிபடிக் கட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .
மிகப் பெரிய வாணிப நகரமாக விளங்கிய வாலாஜாவில் பல வியாபாரிகளின் பிள்ளைகள் இந்த பள்ளிக்கூடத்தில் கல்வி கற்பதை மிகவும் பெருமையாக கருதுகின்றனர்.
கடந்த 1920-ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் திவான் பகதூராகவும் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்த ராஜகோபாலாச்சாரியார் முயற்சியினால் எச். வடிவில் பெரிய அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு பிறகு 1949-ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.
தற்போது பழமை வாய்ந்த இந்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் சிதிலமடைந்து உள்ளன. சில கட்டிடங்கள் இடித்து விழும் நிலையில் உள்ளன.
ஓடுகள் சரிந்தும், சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது.
நாளை இந்த பள்ளியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக கொண்டாடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இடியும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






