என் மலர்
ராணிப்பேட்டை
- பாணாவரம் போலீஸ் நிலையத்தில் நடந்தது
- சிலை 9 அடி உயரத்துக்கு மேல் இருக்கக்கூடாது
காவேரிப்பாக்கம்:
பாணாவரம் போலீஸ் நிலையத்தில் வரும் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பாணாவரம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், விநாயகா் சதுா்த்தி விழா குறித்த அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சிலை 9 அடி உயரத்துக்கு மேல் இருக்கக்கூடாது.
சென்ற ஆண்டு சிலை வைத்தவா்கள் மற்றும் ஊா்வலம் நடத்தியவா்களுக்கு மட்டும், இந்த ஆண்டு சிலை வைக்கவும், ஊா்வலம் நடத்தவும் அனுமதி வழங்கப்படும்.
சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குள் விஜர்சனம் செய்ய வேண்டும்.
தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- முதல் -அமைச்சரால் காணொளி மூலம் திறக்கப்பட்டது
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன வளாகத்தில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதியதாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டுள்ளது.
இந்த கிடங்கினை நேற்று தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சேமிப்பு கிடங்கை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்த கிடங்கில் அரசு நிர்ணயித்துள்ள கட்ட ணத்தின் அடிப்படையில் தனியார் துறை நிறுவன ங்களும் தங்கள் உற்பத்தி பொருட்களை வாடகையின் அடிப்படையில் சேமித்துக் கொள்வதற்கான வழிவகைகள் செய்ய ப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் ஆற்காடு ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி,சேமிப்பு கிடங்கு நிறுவன மண்டல மேலாளர் வசந்த். மாவட்ட கவுன்சிலர் செல்வம்,ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரி, நகரமன்ற உறுப்பினர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதிப்பு கூட்டலுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்த திட்டம்
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித் துள்ளவாறு, மாவட்டந்தோ றும் மகளிர் சுய உதவிக் குழுக் கள் உற்பத்தி செய்திடும் பொருட்களை மதிப்பு கூட் டுதல், சந்தைப்படுத்துதல் மற் றும் அதிக சந்தை செய்து தருதல் போன்றவை மேற் கொள்ள ஒவ்வொரு வட்டா ரத்திலும் ஒரு பொருளை கலெக்டர் தேர்வு செய்து 2023-2024-ம் ஆண்டில்மேம்ப டுத்திடவும், பொதுவான வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் தேவைப்படும் மதிப்பு கூட்டலுக்கான வாய்ப்பு களை ஏற்படுத்துவதற்கான இடவசதிகள், உற்பத்தி செய் திடும் ஒரு பொருளை தேர்வு செய்திடல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத் தில் அரக்கோணம் லுங்கி, ஆற்காடு இயற்கை தேன், காவேரிப்பாக்கம் பாக்கு மட்டை, நெமிலி புடவை, சோளிங்கர் ஊறுகாய், மசாலா தூள், திமிரி மஞ்சள், வாலாஜா சணல் பை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பள்ளத்தில் இறந்து கிடந்தார்
- போலீசார் விசாரணை
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மேல்நெல்லி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 65), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீட்டுக்கு வர வில்லை.
இதனால் மனைவி மல்லிகா மற்றும் மகன், மகள்கள் அவரை தேடினர். இந்தநிலையில் மேல்நெல்லி தட்டச்சேரி செல்லும் சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கலவை சப்- இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அவர் தடுமாறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது
- வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற அணிக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பரிசு வழங்கினார்.
இதில் தி.மு.க மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு எம்.எல்.ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட பொருளாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மனநலம் பாதிக்கப்பட்டவர்
- சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த குடிமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னம்மா (வயது85). இவர் அதே ஊரில் தனது மகள் அமுதா, மகன் அசோக் ஆகியோருடன் வசித்து வந்தார்.
அமுதாவின் மகள் தங்கமணி (36) திருமணமாகாதவர். மனநலம் பாதிக்கப்பட்ட தங்கமணி பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மதியம் அனைவரும் வீட்டில் இருந்த நேரத்திலேயே தங்கமணி திடீரென தான் வைத்திருந்த கத்தியால் தனது பாட்டி சின்னம்மாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட தங்கமணியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணிகளை நகராட்சி நிர்வாகம் முடித்துவிட்டு சென்றனர்
- தர்ணாவில் ஈடுபட்டனர்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி எல்லைக்குட்பட்ட 5-வது வார்டில் நகராட்சி நிர்வாகம் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கியது.
இதில் அதே பகுதியில் வசிக்கும் கஸ்தூரி- ரங்கன் தம்பதியினர் தனது குடும்பத்தினருடன் நகராட்சி பணிகளை நிறுத்தி அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மண் சாலையில் அமர்ந்து நகராட்சி பணி செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களை தடுத்து நிறுத்தினார்.
தகவல் அறிந்து உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, அமரேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். ஆணையருக்கு தகவல் அளிக்கப்பட்டு காவல்துறையினர் முன்னிலையில் நடத்தினர்.
பின்னர் இறுதியாக நீதிமன்ற தீர்ப்பின் பிறகு சாலைகளை அப்புறப்படுத்தி தருவதாக கூறினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 5 மணி நேரத்திற்கு பிறகு சாலை அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் முடித்துச்விட்டு சென்றனர் .
- நாளை தொடங்குகிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வட்டார அளவில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுகளுடன் கூடிய தேசிய அடையாள அட்டை மற்றும் அனைத்து வயது நிரம்பிய மாற்று திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கு வதற்கான தேர்வு முகாம்கள் நடைபெற உள்ளது.
நாளை 8-ந் தேதி திமிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வருகிற 12-ந் தேதி ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 15-ந் தேதி வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 16-ந் தேதி அரக்கோணம் ஜோதி நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 20-ந் தேதி சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 22-ந் தேதி நெமிலி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 26ம் தேதி காவேரிப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,27-ந் தேதி ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் நடைபெறுகிறது.
இதில் அனைத்து வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் தேவைப்படும் எனில் தங்களது அடையாள அட்டை நகல், மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை நகல், ரேசன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பெற்றிருந்தால் அதன் நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் 5 ஆகியவற்றுடன் முகாம்களில் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- போலீசாருக்கு டி.எஸ்.பி. உத்தரவு
- இன்ஸ்பெக்டர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்ட காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று அரக்கோணம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்களுக்கான ஆய்வு கூட்டம் ராணிப்பேட்டை டி.எஸ்.பி. பிரபு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குற்ற வழக்குகள் குறைப்பது, கோப்புக்கு எடுக்காத வழக்குகள், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து டி.எஸ்.பி., காவல் நிலைய அதிகாரிகளை கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடி விசாரணை நடத்த வேண்டும் மேலும் போலீஸ் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதில், இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், லட்சுமிபதி, பாரதி, பழனிவேலன், பாரதி மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காஞ்சனா, சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- நகராட்சி நிர்வாகம் நாளங்காடியை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
- காந்தி சிலையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரக்கோணம்:
அரக்கோணம் நகராட்சி நாளங்காடி கட்டிடம் கடந்த 1949-ம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போதே நாளங்காடியின் நுழைவுவாயிலின் மாடியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டது. அந்த நாளங்காடிக்கு காந்தி மார்க்கெட் என பெயரிடப்பட்டது.
தொடர்ந்து 1984-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் நாளங்காடி கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டப்பட்டபோது இந்த நுழைவு வாயில் பகுதி மட்டும் இடிக்கப்படாமல் சீரமைக்கப்பட்டது. இதனால் அந்த காந்தி உருவச்சிலை அதே இடத்தில் இருந்தது.
இந்த சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகள் காந்தி பிறந்தநாள், நினைவுநாள், குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
தற்போது கட்டிடங்கள் கட்டி 39 ஆண்டுகள் ஆகியுள்ளதாலும், தற்போது பழுதாகி பயன்பாட்டிற்ககு உகந்த நிலை உள்ளது.
இதனால் நகராட்சி நிர்வாகம் நாளங்காடியை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதில் நாளங்காடியின் பின்பக்கம் இருந்த இறைச்சி விற்பனை பகுதி மட்டும் இடிக்கப்பட்ட நிலையில் மற்ற பகுதிகள் இடிக்கப்படவில்லை.
இக்கட்டிடத்தில் வணிகம் செய்த வணிகர்கள் பலர் கடைகளை காலி செய்து தர தாமதம் செய்வதால் இடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் நகராட்சி நாளங்காடியின் நுழைவுப்பகுதிக்கு ஆட்டோவில் வந்த சிலர் மகாத்மா காந்தியின் உருவச்சிலையை பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர்.
காந்தியின் சிலை அகற்றப்பட் டது குறித்து அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் விசாரித்தபோது தங்களுக்கு இது குறித்து தெரியாது எனவும், சிலையை அகற்ற யாரிடமும் கூறவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மர்ம நபர்கள் சிலையை திருடி சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. காந்தி சிலையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இட பிரச்சினை காரணமாக முன்விேராதம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிளைவ் பஜார் பகு தியைச் சேர்ந்தவர்கள் நவீன் (வயது 26), ராஜேஷ் (42), சாமு வேல் (42). இவர்களுக்குள் இடம் பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாமுவேல், நவீன், ராஜேஷ் ஆகியோருக்குள் தகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் தகராறு முற்றி சாமுவேல் கத்தியால் நவீன், ராஜேஷ் ஆகிய இருவரையும் குத்தி உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த இருவரும் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிந்து சாமுவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோசமான செயலில் ஈடுபட்டு வந்ததால் நடவடிக்கை
- கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஊராட்சி ஒன் றிய வட்டார கல்வி அலுவல ராக பாபு என்பவர் பணி யாற்றி வந்தார். இவர் சாதி பாகுபாடு காட்டுதல், பெண் ஆசிரியர்களை கீழ்தரமாக பேசுவது உள்ளிட்ட மோச மான செயலில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர் மீது சட் டரீதியான நடவடிக்கை எடுக்ககோரி தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மணிமே கலை, மாநில பொருளாளர் மத்தேயு, மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட செயலா ளர் அமர்நாத், மாவட்ட பொருளாளர் தனலட்சுமி ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் வட்டார கல்வி அலுவலர் பாபுவை திருவண்ணாமலை மாவட் டம் துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.






