அரசு ஆஸ்பத்திரிக்கு ரத்த பரிசோதனை கருவி

30 ஆண்டுகளாக சிகிச்சை அளித்தற்காக இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது வழங்கப்பட்டது காசோலையினை கலெக்டரிடம் வழங்கினார்
அரசு ஆஸ்பத்திரிக்கு ரத்த பரிசோதனை கருவி
Published on

கலவை:

கலவை சுற்றுப்பகுதிகளில் உள்ள ஏராளமான மக்கள் மருத்துவ சிகிச்சை பெற அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

இங்கு வரும் மக்களின் நலனுக்காக ஓய்வு பெற்ற அரசு மருத்துவரும் மற்றும் கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு 30 ஆண்டுகளாக சிகிச்சை அளித்தற்காக இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது பெற்ற மனிதநேய மருத்துவருமான செங்கோட்டையன் கலவை அரசு மருத்துவமனைக்கு ரூ.74 ஆயிரம் மதிப்புள்ள ரத்த பரிசோதனை கருவி (செமி ஆட்டோ அனலைசர்) வாங்குவதற்கான காசோலையினை கலெக்டர் வளர்மதியிடம் வழங்கினார்.

அப்போது, மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் விஜயா முரளி , சமூக ஆர்வலர் புருஷோத்தமன் ஆகியோர் உடன் இருந்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com