search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுந்தர விநாயகர் கோவில் தேர் வெள்ளோட்டம்
    X

    சுந்தர விநாயகர் கோவில் தேர் வெள்ளோட்டம்

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா நகரில் மிகப் பழமையான சுந்தர விநாயகர் கோவில் உள்ளது.

    இங்கு மூலவர் விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமி, விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், பர்வதவர்தினி சமேத ராமநாதார், மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளது.

    இதற்கிடையே இந்த கோவிலுக்கு சிறிய அளவிலான தேர்செய்திட தீர்மானிக்கப்பட்டது இதற்காக பக்தர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் அடங்கிய திருப்பணிகுழு அமைக்கப்பட்டது.

    நன்கொடையாளர்கள் உதவியுடன் தேர்செய்யும் பணியில் ஈடுப்பட்டனர். இந்தப் பணியை மதுரை மணிகண்ட ராஜா தலைமை யிலான ஸ்தபதிகள் ஈடுபட்டனர்.

    ரூ.25 லட்சம் மதிப்பில் 18 அடி உயரத்தில் 3 டன் எடையில் வெக்கை தேக்கு மரத்தினால் தேர் செய்யப்பட்டு இதற்கான வெள்ளோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர். காந்தி கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா என கோஷமிட்டனர். தொடர்ந்து 4 மாடவீதி களிலும்தேர் பவனி வந்தது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் லட்சுமணன், வாலாஜா ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோபி, திருப்பணி குழு தலைவர் வேலு உள்பட கோவில் நிர்வா கிகள், நகரமன்ற உறுப்பி னர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×