என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Termination of employment"

    • அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க்கின் ஆலோசனைப்படி ஏராளமான அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
    • நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் துறை (டி.இ.ஐ) தலைவராக நீலா ராஜேந்திரா பணியாற்றி வந்தார்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி 20-ந்தேதி பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இதில் அரசில் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நடவடிக்கையும் அடங்கும். அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க்கின் ஆலோசனைப்படி ஏராளமான அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பல்வேறு அமைச்சகங்களில் சில துறைகளின் செயல்பாட்டை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில் டிரம்பின் நிர்வாக உத்தரவால் அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவில் பணியாற்றிய இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரியான நீலா ராஜேந்திரா பணிநீக்கம் செய்யப்பட்டார்.

    நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் துறை (டி.இ.ஐ) தலைவராக நீலா ராஜேந்திரா பணியாற்றி வந்தார். இதற்கிடையே டி.இ.ஐ துறையை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. அத்துறையில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நீலா ராஜேந்திராவை தக்க வைத்து கொள்ள நாசா நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி அவரது பதவியை 'குழு சிறப்பு மற்றும் பணியாளர் வெற்றி அலுவலகத் தலைவர்' என்று மாற்றியது. ஆனால் இதை டிரம்ப் நிர்வாகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நீலா ராஜேந்திராவை பணிநீக்கம் செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நாசா தனது உயர்மட்ட விண்வெளி ஆய்வகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நீலா ராஜேந்திராவின் வெளியேற்றம் குறித்து மின்னஞ்சலில் தகவல் தெரிவித்தது.

    அதில், நீலா ராஜேந்திரா இனி ஆய்வகத்தில் பணிபுரியவில்லை. எங்கள் நிறுவனத்திற்கு அவர் ஏற்படுத்திய நீடித்த பயன்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவருக்கு நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளது.

    நீலா ராஜேந்திரா பல ஆண்டுகளாக நாசாவில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவர் நாசாவை பன்முகப்படுத்த உதவும் முயற்சிகளுக்காக பணியாற்றி வந்தார். இதன் முதன்மை நோக்கம் பெண்களையும் சிறுபான்மையினரையும் அமைப்பில் பணியமர்த்துவதாகும்.

    • வியாபாரிகளிடமிருந்து முறைகேடாக அபராதம் வசூலித்ததால் நடவடிக்கை
    • நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவு

    ஆம்பூர்:

    ஆம்பூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பரப்புரையாளர் கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    அதில் 4 நபர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு ஆம்பூர் நகராட்சியின் பில் புத்தகத்தை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த வியாபாரிகளிடமிருந்து முறைகேடாக அபராதம் வசூலித்துள்ளனர்.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ஷகிலாவிற்கு புகார் வந்தது. அதனடிப்படையில் அவர் இதுகுறித்து நகராட்சிக ளின் நிர்வாக மண்டல இயக்குநருக்கு தகவல் தெரிவித்தார்.

    நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் ஆம்பூர் நக ராட்சிக்கு நேரடியாக வருகை தந்து இதுகுறித்து விசாரணை நடத்தி நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அறிக்கை அனுப் பியதாக கூறப்படுகிறது.

    அதனடிப்படையில் தனியார் நிறுவ னத்தின் மூலம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்த 4 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர்களை சரிவர கண்கா ணிக்காத ஆம்பூர் நகராட்சி சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    • லஞ்சம் வாங்கியதால் நடவடிக்கை
    • கலெக்டர் உத்தரவு

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே செல்வமந்தை கிராமத்தில் கடந்த 29-ந் தேதி மனை பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர் வாக அலுவலர் சதீஷ் மற்றும் உதவியாளர் ராஜலிங்கம் ஆகிய இருவரும் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது ராணிப் பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் உதவியாளர் ராஜலிங்கத்தை அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • நகராட்சி ஆணையாளர் உத்தரவு
    • முறையாக வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபடவில்லை என புகார்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இந்த வார்டு பகுதிகளில் பல்வேறு வரி இனங்களை வசூல் செய்வ தற்காக நகராட்சி பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நகராட்சி வருவாய் உதவியாளராக (பில் கெலக்டர்) பணி யாற்றி வருபவர் தேவகுமார். இவர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பகுதிகளில் முறையாக வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபடவில்லை என்றும், நகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத் தும் வகையில் நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்தது.

    அதன் பேரில் நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் அவரை பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இது வாணியம்பாடி நகராட்சி ஊழியர்க ளிடையே பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×