என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆம்பூர் நகராட்சி சுகாதார அலுவலர் பணியிடை நீக்கம்
- வியாபாரிகளிடமிருந்து முறைகேடாக அபராதம் வசூலித்ததால் நடவடிக்கை
- நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவு
ஆம்பூர்:
ஆம்பூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பரப்புரையாளர் கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அதில் 4 நபர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு ஆம்பூர் நகராட்சியின் பில் புத்தகத்தை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த வியாபாரிகளிடமிருந்து முறைகேடாக அபராதம் வசூலித்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ஷகிலாவிற்கு புகார் வந்தது. அதனடிப்படையில் அவர் இதுகுறித்து நகராட்சிக ளின் நிர்வாக மண்டல இயக்குநருக்கு தகவல் தெரிவித்தார்.
நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் ஆம்பூர் நக ராட்சிக்கு நேரடியாக வருகை தந்து இதுகுறித்து விசாரணை நடத்தி நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அறிக்கை அனுப் பியதாக கூறப்படுகிறது.
அதனடிப்படையில் தனியார் நிறுவ னத்தின் மூலம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்த 4 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர்களை சரிவர கண்கா ணிக்காத ஆம்பூர் நகராட்சி சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்