search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
    X

    தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

    • சோளிங்கரில் நாளை நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    சோளிங்கரில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய துறைகள் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.

    சோளிங்கரில் எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசினர் மாதிரி மகளிர் மேநிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

    முகாமில் முன்னணி நிறுவனங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட தனி யார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் 10, 12 ம் வகுப்புகள்,ஐ.டி.ஐ., டிப்ளமோ , டிகிரி, நர்சிங், என்ஜினீயரிங் உள்ளிட்ட கல்வித் தகுதிகளை உடைய வேலை தேடுவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இந்த சிறப்பு முகாமில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

    இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×