என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் விபத்தில் வாலிபர் பலி
- பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி பரிதாபம்
- ஆரணியை சேர்ந்தவர்
ராணிப்பேட்டை:
திருவண்ணாமலை மாவட்டம் ,ஆரணி தாலுகா, ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன், இவரது மகன் ரகுராஜ் (வயது 25).
இவர் நேற்று முன்தினம் வேலை சம்பந்தமாக ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த அைணக்கட்டு சாலை மேம்பாலம் பகுதியில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பைக் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது.
இதில் ரகுராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி ரகுராஜ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






