என் மலர்
உள்ளூர் செய்திகள்

பச்சிளம் குழந்தை கழிவறை குப்பை தொட்டியில் வீச்சு
- சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
வாலாஜாபேட்டையில் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி உள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் இங்குள்ள கழிவறை குப்பை தொட்டியில் பிறந்து 2 மணி நேரமே ஆண் குழந்தை பிணமாக கிடந்தது.
இது குறித்து ஆஸ்பத்திரி அலுவலர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய்மார்கள், குழந்தைகளின் விவரம் சரியாக இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே ஆஸ்பத்திரிக்கு வெளியிலிருந்து குழந்தையை கொண்டு வந்து கழிவறை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளார்களா? முறையின்றி குழந்தை பிறந்ததால் குப்பை தொட்டியில் வீசி சென்று விட்டார்களா? என பல்வேறு கோணங்களிலும், ஆஸ்பத்திரி சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






