என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
- காவேரிப்பாக்கம் ஏரியில் நடந்தது
- 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவிரிப்பாக்கம் ஏரியில் மாநில பேரிடர் மீட்புக் படையினர் சார்பில் மழைக்காலங்களில் துரிதமாக செயல்பட போலீசாருக்கு பயிற்சி அளித்தனர்.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த காவலர்களுக்கு மழை, பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படுவது குறித்து 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் 2-வது நாள் பயிற்சியாக நேற்று காவேரிப்பாக்கம் ஏரியில் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் மழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது. மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பது, தண்ணீரில் விழுந்தவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்