search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disaster recovery training"

    • பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியின் போது பல்வேறு உயிர்காப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    முக்கூடல்:

    முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி யில் தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் பேரிடர் மீட்புப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி நிறுவனர் பாலகன் ஆறுமுகச்சாமி, கல்லூரி முதல்வர் கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமை தாங்கினர். சேரன்மகாதேவி தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அரக்கோ ணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படை சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் தேஸ்வால் தலைமையிலான 16 வீரர்கள் கலந்து கொண்டு மழை, வெள்ளம், இயற்கை சீற்றங்கள், பேரிடர், பூகம்பம், சுனாமி காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்புப் பணிகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்வது, வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்பது, தக்க வைப்பது, மாரடைப்பு ஏற்படும் போது உடனடியாக உயிர் காப்பது எப்படி?, விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்புவது, ஆம்புலன்சை வரவழைப்பது உள்ளிட்ட பல்வேறு உயிர்காப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

    இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரி யர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
    • புயல் மழை நேரங்களிலும் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி வகுப்பு பள்ளியின் வளாகத்தில் பொன்னேரி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் மாணவிகளின் மத்தியில் பேரிடர் காலத்தில் தீ தொற்று, வெள்ள அபாயம், புயல் மழை நேரங்களிலும் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது எனவும், அந்நேரங்களில் மற்றவர்களை எவ்வாறு எல்லாம் காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட பயிற்சி ஒத்திகையை செய்முறையாக செய்து காட்டி விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.

    அதேபோன்று மாணவிகளை அழைத்து செயல்முறையையும் செய்து காட்டசொல்லி விளக்கினார் இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • காவேரிப்பாக்கம் ஏரியில் நடந்தது
    • 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவிரிப்பாக்கம் ஏரியில் மாநில பேரிடர் மீட்புக் படையினர் சார்பில் மழைக்காலங்களில் துரிதமாக செயல்பட போலீசாருக்கு பயிற்சி அளித்தனர்.

    தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த காவலர்களுக்கு மழை, பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படுவது குறித்து 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் 2-வது நாள் பயிற்சியாக நேற்று காவேரிப்பாக்கம் ஏரியில் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் மழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது. மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பது, தண்ணீரில் விழுந்தவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இப்பயிற்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    ×