search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரி மர்ம சாவு
    X

    வியாபாரி மர்ம சாவு

    • சிகரெட்டு கேட்டதில் வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜாபேட்டை அடுத்த கீழ் புதுப்பேட்டையை சேர்ந்தவர் சின்னபையன் (வயது64). பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த 19-ந் ்தேதி அன்று இரவு இவரது கடையில் வாலிபர் ஒருவர் சிகரெட்டு கேட்டதில் வாய்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.

    இதில் அந்த வாலிபர் தாக்கியதில் சின்னப்பையனுக்கு வாயில் காயம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் சின்னப்பையன் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாக கூறவே அவரை சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது பற்றி தகவலறிந்த வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, கடையில் சிகரெட் கேட்ட போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் தாக்கியதால் சின்னபையன் இறந்து விட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×