என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவிழாவில் நடனமாடியதை தட்டி கேட்டவர்கள் மீது தாக்குதல்
    X

    திருவிழாவில் நடனமாடியதை தட்டி கேட்டவர்கள் மீது தாக்குதல்

    • 3 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த நேர்காச்சி நகரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா நேற்று நடந்தது.

    அப்போது அதே போதையைச் சேர்ந்த லெனின் (வயது 25), அஜித் குமார் (27), சுலைமான் (20) ஐயோ குடிபோதையில் சாலையில் நடனம் ஆடினர்.

    அப்போது அதனைப் பார்த்த லெனினின் தந்தை ராஜா (50) மற்றும் அவரது அண்ணன் ஸ்ரீகாந்த் (28) ஆகியோர் தட்டி கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த லெனின் மற்றும் அவரது நண்பர்கள் ராஜா மற்றும் ஸ்ரீகாந்த்தை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    இது குறித்து ஸ்ரீகாந்த் வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லெனின், அஜித்குமார், சுலைமான் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×