என் மலர்
புதுக்கோட்டை
- பொன்னமராவதி அருகே அரசு மதுபானக்கடைகளை அகற்றகோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- ஒரே ஊராட்சியில் 2 இடங்களில் அரசு மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றது.
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மணப்பட்டி கிராமத்திற்கு மேற்கு பகுதியான உலகம்பட்டி சாலை மற்றும் கிழக்குப்பகுதியான புதுக்கோட்டை சாலை செம்பொட்டல் என ஒரே ஊராட்சியில் 2 இடங்களில் அரசு மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த கடைகள் பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளதாகவும், மது அருந்துபவர்களால் மதுபாட்டில்கள் உடைத்து விவசாய நிலங்களில் போடப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், எனவே உடனடியாக 2 அரசு மதுபானக்கடைகளையும் மூடவேண்டும் என வலியுருத்தி பெண்கள் பொன்னமராவதி-புழுதிபட்டி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி வட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவர்கள் மாமன்னர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு அவர்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவது மன்னரான மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் 1922-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் நாள் புதுக்கோட்டையில் பிறந்தார். அவரது நூற்றியோராவது பிறந்தநாள் விழா புதுக்கோட்டை மக்களால் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. மாமன்னர் இராஜகோபல தொண்டைமான் ஆட்சிகாலத்தில் புதுக்கோட்டை சமஸ்தான மக்கள் வளமுடன் நலமுடன் வாழ்ந்தனர். இந்திய அளவில் சமஸ்தானத்துக்கென்று தனியாக அம்மன்காசு என்ற நாணயத்தை வெளியிட்ட பெருமை தொண்டைமான் மன்னர்பரம்பரையைச் சேரும்.இந்திய அரசாங்கம் சமஸ்தானங்களை இணைக்கவேண்டும் என்று அறிவித்தவுடன் முதன்முதலில் தமது சமஸ்தானத்தை இந்திய அரசாங்கத்துடன் இணைத்து வரலாற்றில் இடம்பிடித்த மன்னர் ராஜா இரா ஜகோபாலதொண்டைமான் ஆவார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு அவர்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை சமஸ்தான மன்னரின் பெருமைகளை விளக்கி புதுக்கோட்டை நம் புகழ்க்கோட்டை எனும்பாடல் எழுதியதன் மூலம் உலகத்தமிழர்களால் பாராட்டப்பட்ட கவிஞர், பள்ளியின் முதல்வர் தமிழ்ச்செம்மல் தங்கம்மூர்த்தி வழிகாட்டுதலின் படி ஸ்ரீ வெங்கடே ஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ராஜாராஜகோபாலதொண்டைமானின் நூற்றி்யோராவது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாமன்னர் ராஜாராஜகோபாலதொண்டைமான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் மாணவ மாணவிகள் மன்னர் அரண்மனையை சுற்றிப்பார்த்தனர். நிகழ்வில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், மேலாளர்ராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிராமசுந்தரி, ஆசிரியர்கள் துர்காதேவி, சின்னையா, ரவிக்குமார், பாலமுருகன், காசாவயல் கண்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அக்கா உடலை பார்த்து அழுத்த தம்பி உயிரிழந்தார்
- போஸ் வெங்கட் சின்ன த்திரையில் பல்வேறு நாடக ங்களிலும், திரைப்படங்க ளிலும் நடித்துள்ளார்.
அறந்தாங்கி,
புதுக்கோட்ைட மாவட்டம் அறந்தாங்கி அருகே பாண்டிபத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு வளர்மதி (வயது 54) என்ற மகளும், ரங்கநாதன் (52) போஸ் வெங்கட் என்ற மகன்களும் உள்ளனர். போஸ் வெங்கட் சின்ன த்திரையில் பல்வேறு நாடக ங்களிலும், திரைப்படங்க ளிலும் நடித்துள்ளார். வளர்மதி திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்.அவரது கணவர் குணசேகரன் ஆட்டோ டிரைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வளர்மதி உயிரிழந்தார். இந்த செய்தியறிந்ததும் அறந்தாங்கியில் இருந்து சகோதரர் ரங்கநாதன் புறப்பட்டு சென்னைக்கு சென்றார்.
அங்கு சகோதரி உடலை பார்த்ததும் துக்கம் தாங்காமல் கதறியழுத அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்த ரங்கநாதன் சிறிது நேரத்தில் இறந்தார். இறந்த ரங்கநாதன் இன்சூ ரன்ஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு ஹேமா மாலினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். வளர்மதி உடலுக்கு நேற்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்ட நிலையில் ரங்கநாதன் உடல் சொந்த ஊர் அறந்தாங்கிக்கு கொண்டு வரப்பட்டு இன்று மாலை இறுதி சடங்கு நடக்கவுள்ள தாக உறவினர்கள் தெரிவி த்தனர். அடுத்தடுத்த சில மணி நேரங்களில் அக்காவும், தம்பியும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியையும் சோக த்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- வெளிப்படை தன்மையோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- தேசிய நெடுஞ்சாலை அமைக்குமாறு மாநில அரசுக்கு நிதி ஒதுக்குவதில்லை.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஓச்சம்பட்டியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில், மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் கலந்துகொண்டு கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும். இத்திட்டத்தில் மோசடி நடக்க வாய்ப்பு இல்லை. இத்திட்டத்தை பொறுத்த வரையில் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. வெளிப்படை தன்மையோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருச்சியில் விமான முனையம் கட்டுமான பணி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தி வருகிறது. கூட்டம் நடத்தக்கூடிய இடமானது பார்க்க வேண்டிய நல்ல இடம் அவ்வளவுதான்.
தேசிய நெடுஞ்சாலை அமைக்குமாறு மாநில அரசுக்கு நிதி ஒதுக்குவதில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கி சாலைகளை மத்திய அரசே அமைத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- இருவரும் மாரடைப்பால் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- இருவரின் இறுதி ஊர்வலமும் நாளை அறந்தாங்கியில் நடைபெறுகிறது.
'ஈரநிலம்' படத்தில் அறிமுகமாகி 60-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பவர் போஸ் வெங்கட். சின்னத்திரையில் பிரபல தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான 'கன்னி மாடம்' படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சாதி மற்றும் ஆணவக் கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதைதொடர்ந்து போஸ் வெங்கட் மா.பொ.சி என்ற படத்தை இயக்கினார்.

இந்நிலையில், நடிகர் போஸ் வெங்கட் ஒரே நாளில் சகோதரியையும், சகோதரனையும் இழந்துள்ளார்.
இருவரும் மாரடைப்பால் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி மாரணடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்ற போஸ் வெங்கட்டின் அண்ணன் ரங்கநாதனும் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
இருவரின் இறுதி ஊர்வலமும் இன்று அறந்தாங்கியில் நடைபெறுகிறது.
- கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஆலங்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது
- ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்தினார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தெட்சிணாபுரம் கிராமத்தில் ஒரு சமுதாயத்தினரை சேர்ந்த மக்களுக்குச் சொந்தமான பட்டையன் கோவில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பல்வேறு தனிநபர்கள் ஆக்கிரமித்து வைத்து மக்களை அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் நிலத்தை மீட்டு மீண்டும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள், புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிகர பெண்கள் இயக்கம் உள்ளிட்ட அமைப்பினர், ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்தினார். அப்போது, சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அளவிட்டு நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
- கறம்பக்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கபட்டது
- நெல் கொள்முதல் நிலையத்தை எம்.எல்.ஏ. முத்துராஜா திறந்து வைத்தார்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கரு கீழத்தெரு ஊராட்சியில் உள்ள குரும்பிவயலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. கொள்முதல் நிலையத்தை புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கரு கீழத்தெரு ஊராட்சி மன்ற தலைவரும், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான தவ பாஞ்சாலன், அரசு ஒப்பந்ததாரரும் மாவட்ட இலக்கிய அணியின் துணைச் செயலாளருமான கருக்காகுறிச்சி பரிமளம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழக அரசுக்கும், எம்.எல்.ஏ. முத்துராஜாவிற்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் அப்பகுதி கிராமமக்கள் எம்.எல்.ஏ.விடம் குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ. முத்துராஜா வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனால் அப்பகுதி பெண்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
- அறந்தாங்கி கூட்டுறவு நகர வங்கியில் வருமான வரித்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்
- ஆய்வு இரவு வரை தொடர்ந்து நடைபெற்றது.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நகர வங்கி கடந்த 105 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. அறந்தாங்கி நகரில் 2 கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் பலகோடி ரூபாய் அளவிற்கு வரவுசெலவு செய்யப்படுகிறது. இந்நிலையில் வங்கியில் வருமானவரித்துறை அதிகாரிகள் 11 பேர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு இரவு வரை தொடர்ந்து நடைபெற்றது. மேலும் வங்கியில் பணியாற்றக்கூடிய அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். இதுகுறித்து வங்கியின் தலைவர் ஆதிமோகன் (அ.தி.மு.க.) கூறுகையில்: தமிழகத்தில் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் கோர் பேங்கிங் செய்யப்பட்டு வங்கிகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான பண பரிவர்த்தனைகள் நடைபெற்றால் அது வருமான வரித்துறையினருக்கு கணிணி மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் கோர் பேங்கிங் செய்யப்படாத சில கூட்டுறவு வங்கிகளில் இன்னும் நோட்டு புத்தக அளவிலேயே வரவு செலவு பதியப்படுகிறது. அறந்தாங்கி வங்கியிலும் நோட்டு புத்தக முறைதான் நடைமுறையில் உள்ளது. அவ்வாறு கோர் பேங்கிங் செய்யப்படாத வங்கிகளிலிருந்து வரவு செலவு கணக்குகள் அறியப்படாததையடுத்து வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இங்கு வந்த அதிகாரிகள் அனைத்து கணக்கு வழக்குகளையும் சரிபார்த்து சரியாக உள்ளது என்று கூறினர். மேலும் கூட்டுறவு வங்கிகளை நவீனபடுத்த சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் வங்கிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வசதிகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
- பெருங்களூர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
- 200 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இரத்த சோகை உள்ளனவா என பரிசோதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை வட்டாரம் பெருங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பெருங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்து முதல் பத்தொன்பது வயதிற்குட்பட்ட வளரும் இளம் பருவத்தினர்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை பள்ளி தலைமை ஆசிரியர் ரவி முன்னிலையில் வட்டார மருத்துவ அலுவலர் பொன்.சரவணன் தொடங்கி வைத்தார். 200 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இரத்த சோகை உள்ளனவா என பரிசோதிக்கப்பட்டது. மேலும் கண் பரிசோதனை, பல் பரிசோதனைகளும் நடைபெற்றது. மேலும் இம்முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர். வைத்திலிங்கம், சமுதாய சுகாதார செவிலியர்.சுமிதா ஜான்சி, என்.எஸ்.எம்.வேலுசாமி, மற்றும் மருத்துவ அலுவலர் வெண்ணிலா, பல் மருத்துவ அலுவலர்திலீபா, ஆய்வக நுட்புணர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- ஆலங்குடியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதை வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினர்
- மேலும் பட்டாசு வெடித்து சாலையில் சென்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரின் பிரதான பகுதியான அரசமரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி சமூக ஆர்வலர்களும், பா.ஜ.க., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்து மூடப்படும் கடைகளின் பட்டியலையும் வெளியிட்டது. இந்த பட்டியலில் ஆலங்குடி பழைய கோர்ட் பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையும் அகற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆலங்குடி அரசமரம் பகுதியில் உள்ள மூடப்பட்ட டாஸ்மாக் கடையின் முன்னதாக திரண்ட பா.ஜ.க. மற்றும் சமூக ஆர்வலர்கள் மூடியிருந்த டாஸ்மாக் கடையின் கதவிற்கு மாலை அணிவித்து, கடை மூடப்பட்டதாக வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு நோட்டீஸிற்கு மாலை அணிவித்ததனர். மேலும் பட்டாசு வெடித்து சாலையில் சென்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
- பன்நோக்கு சிறப்பு இலவச மருத்துவமுகாம் வருகி்ற 24-ன் தேதி நடைபெற உள்ளது
- இந்த முகாம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது
புதுக்கோட்டை,
கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகின்ற 24-ந் தேதி இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது, கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் தமிழகம் முழுவதும் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் பொதுமக்கள் பயனடையும் வகையில் நடத்திட தமிழ்நாடு முதல்- அமைச்சர் உத்தர விட்டுள்ளார்.
அதன்படி வருகின்ற 24-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் மற்றும் அறந்தாங்கி ஒன்றியம், மறமடக்கி அரசு மேல்நிலை ப்பள்ளி வளாகத்திலும் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே இம்முகாம் குறித்து பொது மக்கள் அதிக அளவில் பயன் ெபறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இந்த முகாம்களில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று தங்களுக்கு தேவையான மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, இணை இயக்குநர் ராமு, துணை இயக்குநர் .ராம்கணேஷ் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 15ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது
- கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளுடன், மரக்கன்றுகளை வழங்கினர்
பொன்னமராவதி,
பொன்னமராவதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 15ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருமயம் தொகுதி துணை தலைவர் எம்.அக்பர் அலி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளுடன், மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நகர பொருளாளர் எஸ்.அமீர் ஹம்ஜா கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் நகர ஒருங்கிணைப்பாளர் இப்ராஹீம், நகரதலைவர்ஷேக் முகம்மது, நகர செயலாளர் ஆரிப், கிளை பொருளாளர் நூருல் அமீன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.






