என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அண்டக்குளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளம் முஸ்லிம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு வீட்டிற்கு அருகே உள்ள பள்ளிவாசலுக்கு தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று காலையில் சம்சுதீன் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அதில் பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.26 ஆயிரத்தை, மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் உடையாளிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, மோப்பம் பிடிக்கப்பட்டது. தொடர்ந்து மோப்பநாய் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை ஓடி சென்று நின்றது. மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.26 ஆயிரத்தை கொள்ளை யடித்து விட்டு, தப்பி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சம்சுதீன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் வீட்டின் அருகே வைத்து என்ன நகைகள் உள்ளது என சரிபார்த்து உள்ளனர். அப்போது அவர்கள் தங்க நகைகளை (30 பவுன்) மட்டும் எடுத்துக்கொண்டு, கவரிங் நகைகளை அங்கேயே போட்டு விட்டு சென்றனர். மேலும் அவர்கள் சம்சுதீன் வீட்டில் இருந்து எடுத்து வந்த ஒரு செல்போனையும் கவரிங் நகைகளை விட்டு சென்ற இடத்தில் உடைத்து போட்டு விட்டு சென்று உள்ளனர். மேலும் கவரிங் நகைகள் கிடந்த இடத்தில் ஒரு கிரிக்கெட் பேட்டும் கிடந்தது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்ததையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து நேற்று காலையில் புதுக்கோட்டை நகர பா.ஜ.க. சார்பில் பழைய பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த, அவரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாலையில் நகர பா.ஜ.க. சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் புரட்சி கவிதாசன், நகர பொது செயலாளர் சுரேஷ், கட்சி நிர்வாகிகள் மற்றும் வர்த்தக கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மணமேல்குடியில் வணிகர் சங்க தலைவர் முத்துமாணிக்கம் தலைமையில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒருமணி நேரம் கடைகளை அடைத்து கருப்பு பட்டை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.

    பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டு இருந்த வாஜ்பாய் உருவப்படத்திற்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் சேதுபதி தலைமையில் அக்கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாலையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஆலங்குடியில் அனைத்து கட்சியினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் சார்பில் மவுன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதற்கு பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் பாலு தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல கறம்பக்குடியில் அனைத்து கட்சிகள் சார்பில் மவுன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதேபோல கந்தர்வகோட்டையில் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் கார்த்திக்கேயன் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மவுன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டங்கள் நடைபெற்றது.
    கந்தர்வகோட்டை அருகே 2 வீடுகளில் பின்பக்க கதவை உடைத்து உள்ள புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் துணிகளை கொள்ளையடித்து சென்றனர்.
    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள பிசானத்தூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் ராமதாஸ்(வயது 65). இவருடைய வீட்டில், அதே பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலுக்கு சொந்தமான 30 பவுன் நகைகள் உள்ளன. தற்போது ராமதாஸ் சென்னையில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமதாஸ் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் நகைகள் இருந்த பெட்டகத்தை உடைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் பெட்டகத்தை உடைக்க முடியவில்லை. இதனால் பெட்டகத்தில் இருந்த கோவிலுக்கு சொந்தமான 30 பவுன் நகைகள் தப்பியது.

    இதையடுத்து மர்மநபர்கள், ராமதாஸ் வீட்டின் அருகே உள்ள சின்னையன் என்பவருடைய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரத்து 500-ஐ எடுத்து கொண்ட அவர்கள், வீட்டில் இருந்த பீரோவை வெளியே தூக்கி வந்து, பீரோவை உடைத்து பார்த்தனர். ஆனால் பீரோவில் பணம் இல்லை. இதனால் பீரோவில் இருந்து துணிகளை வெளியே தூக்கி வீசியுள்ளனர்.

    பின்னர் மர்மநபர்கள் அதே பகுதியில் உள்ள கோவிந்தராஜ் என்பவருடைய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த துணிகளை எடுத்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவங்களின்போது சின்னையன், கோவிந்தராஜ் ஆகியோர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    பொறியியல் படிப்பிற்கான மோகம் குறைவதால் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 12 வகையான புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #TNMinister #Sengottaiyan
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

    விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையா க உயர்த்தும் பணியை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    பிளஸ்-2 மாணவர்களுக்கு வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் இந்த ஆண்டு லேப்-டாப் வழங்க முடியவில்லை. ஒரு மாத காலத்திற்குள் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.

    இதே போன்று விரைவில் அரசு வழங்கும் விலையில்லா சைக்கிளும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும். பிளஸ்-2 படித்து முடித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் பட்டய படிப்பிற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக 25 ஆயிரம் மாணவர்களை அரசு தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பட்டய படிப்பிற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 10 சதவீதம் பேருக்கு கண் பார்வை குறைபாடு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் அவர்களுக்கு பரிசோதனை செய்து கண் குறைபாடிற்கான சிகிச்சையை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேசினார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசால் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எல்.கே.ஜி.-யூ.கே.ஜி. வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது சமூக நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்துடன் இணைந்து நடைபெறும். இதில் மாணவர்களுக்கு முதல் பாடம் தமிழாகத்தான் இருக்கும். இரண்டாவது பாடமாக ஆங்கிலம் இருக்கும்.

    தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பிற்கான மோகம் குறைந்து வரும் வேளையில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 12 வகையான புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. அந்த பயிற்சியால் படித்து முடித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆசிரியர்கள் குறித்து தமிழக முதல்வர் கூறியுள்ள கருத்து குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டார். #TNMinister #Sengottaiyan
    புதுக்கோட்டை கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் ஊழியரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பூபதி கண்ணன் கடந்த  ஜுலை மாதம் 27-ந்தேதி மாத்தூர் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை தொடர்பாக அவருடன் பணியாற்றும் திருச்சியை சேர்ந்த டைப் பிஸ்ட் சவுந்தர்யா கைது செய்யப்பட்டு  திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். கள்ளக்காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்தது போலீசார்  விசாரணையில் தெரியவந்தது.

    இந்தநிலையில் சவுந்தர்யாவின் காவல் நாளையுடன் முடியும் நிலையில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மாத்தூர் போலீசார், கீரனூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதற்காக சவுந்தர்யா நேற்று போலீஸ் பாதுகாப்புடன் கீரனூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.  சவுந்தர்யா தரப்பில் ஆஜரான வக்கீல்கள்,  ஏற்கனவே வழக்கு விசாரணை முடிந்து விட்ட நிலையில், போலீஸ்காவல் விசாரணை தேவையில்லை  என வாதிட்டனர். சவுந்தர்யா என்னை அடித்து துன்புறுத்தாமல் இருந்தால் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறினார். 

    போலீசார் தரப்பில், பெண் என்பதால் சரிவர விசாரணை நடத்தவில்லை. உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டோம்.  கொலைக்கான முக்கிய ஆதாரங்களை சேகரிக்க விசாரணை நடத்த வேண்டியது உள்ளது என்றனர்.இரு தரப்பு மனு  மீது விசாரணை நடத்திய நீதிபதி, போலீசார் கூறிய காரணங்கள் ஏற்று கொள்வதாக இல்லை என்று கூறி, போலீசார் தாக்கல் செய்த  மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து சவுந்தர்யாவை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.
    கீரமங்கலம் அருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
    கீரமங்கலம்:

    கீரமங்கலம் அருகே உள்ள மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ஹரிகரசுதன் (வயது 29). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டு, தனது நண்பர்களுடன் ஹரிகரசுதன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஹரிகரசுதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த ஹரிகரசுதனை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியவரை வலைவீசி தேடி வருகின்றனர். 
    கீரமங்கலம் அருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
    கீரமங்கலம்:

    கீரமங்கலம் அருகே உள்ள மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ஹரிகரசுதன் (வயது 29). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டு, தனது நண்பர்களுடன் ஹரிகரசுதன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஹரிகரசுதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த ஹரிகரசுதனை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தந்தை பலியானார். மேலும் அவரது மகன் படுகாயமடைந்தார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமையா (வயது 50). இவரது மகன் அருண்குமார் (18). இந்தநிலையில் இவர்கள் இருவரும் காட்டுப்பட்டியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை நிமித்தமாக புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தனர்.

    ஆலங்குடி அருகே கூழையன்விடுதி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே தஞ்சாவூர் நோக்கி சென்ற ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருண்குமார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சம்பட்டு விடுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். பின்னர் படுகாயமடைந்த அருண்குமாரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் ராமையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். 
    எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், ஏம்பவயல்  நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு, சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர்.

    மேலும் மீனவர்களின் படகுகளில் ஏறிய கடற்படை வீரர்கள் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி, மீனவர்களை தாக்கியதாகவும்  தெரிகிறது. இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். ஆனாலும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 27 மீனவர்களை சிறை பிடித்தனர். அவர்களது 4 நாட்டுப்படகுகளையும் பறிமுதல்  செய்தனர்.

    சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை படகுகளுடன் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இன்று காலை  ஊர்க்காவல் துறை நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை   மீனவர்களின் பெயர்  விவரம் வருமாறு:-

    வேலாயுதம், பாலா, செங்கமுத்து, விக்கி, முத்துக்காளி,  ராஜு, பாலா, கிருஷ்ணன், லோகமுத்து, முத்துமாரி, அபுதாகீர், ராக்கு, பவித்ரன், குமரன், சந்தனமாரி, பஞ்ச நாதன், ராஜாராம், காளிதாஸ், கருப்பையா, ராமு, கணே சன், நந்தகுமார், ரமேஷ், பரமசிவம், செந்தூர் பாண்டியன் உள்பட 27 பேர்.

    சிறைபிடிக்கப்பட்ட  மீனவர்கள் மீது இலங்கை அரசின் புதிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளதாக தெரிகிறது. இந்த சட்டத்தின் மூலம் மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்க வழிவகை உள்ளது குறிப்பிடத்தக்கது. மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதை அறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 
    தபால் நிலைய உதவியாளர் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளாதில் சிகிச் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    மணமேல்குடி:

    மணமேல்குடி தபால் நிலையத்தில் உதவியாளராக வேலை பார்த்தவர் ராமு (வயது 57). இவர் சம்பவத்தன்று தபால்களை பஸ்சில் அனுப்புவதற்காக பஸ் நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்த ஒரு பஸ்சில் தபால்பைகளை ஏற்றிக்கொண்டிருந்தார். இதை அறியாமல் அப்போது அந்த பஸ்சின் டிரைவர் பஸ்சை இயக்கினார். இதனால் ராமுவின் மீது அந்த பஸ் மோதியதில், அவரது கால் முறிந்தது. இதனால் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராமு பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சத்துணவுத்திட்ட கண்காணிப்புக்குழுக்கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சத்துணவுத்திட்ட கண்காணிப்புக்குழுக்கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் உள்ள 1,642 சத்துணவு மையங்களில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு   தரமான சத்துணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் மாவட்ட சத்துணவுத் திட்ட கண்காணிப்புக்  குழுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

    கூட்டத்தில் சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு சத்துணவை தொடர்ந்து சுகாதாரமான முறையில் சமைத்து  வழங்கவும், உணவு பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையை தினமும் குறுஞ்செய்தியாக தலைமையிடத்திற்கு அனுப்பிவைக்கவும், சத்துணவு  மையங்களை தூய்மையாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரிக்கவும், குடிநீர்த் தொட்டிகளை ஆய்வு செய்து தூய்மையாக பராமரிக்கவும், மேலும் முட்டையின்தரம் குறித்த ஆய்வு செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. 
    இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவுத்திட்டம் சிறப்பாக செயல்பட தொடர்புடைய அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுக்கோட்டை அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.40 மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். #Ganjasmuggling

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் வழியாக சமீப காலமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தல் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

    இதில் தொடர்புடைய நபர்கள் பலர் பிடிபட்ட போதும் அந்த பகுதிகளில் போதிய கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வில்லை. இந்த நிலையில் ஜெகதாப்பட்டினம் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு மர்ம பொருள் கடத்தப்படுவதாக திருப்புனவாசல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்று அதி காலை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணி மேற் கொண்டனர். அப்போது அங்குள்ள கடலோர பகுதியில் நாட்டுப்படகும், அதன் அருகில் சிலர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை நெருங்கியதும் அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    போலீசார் அந்த படகை சோதனை செய்தபோது அதில் 8 பண்டல்களில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். 200 கிலோ எடை கொண்ட அதன் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். இங்கிருந்து இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் பறிமுதல் செய்த போலீசார் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற நபர்கள் யார்? யாருக்கு கடத்தப்படுகிறது? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    அவ்வப்போது 10 கிலோ முதல் 50 கிலோ வரை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Ganjasmuggling

    ×