என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து: தந்தை பலி - மகன் படுகாயம்
Byமாலை மலர்12 Aug 2018 6:16 PM GMT (Updated: 12 Aug 2018 6:16 PM GMT)
ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தந்தை பலியானார். மேலும் அவரது மகன் படுகாயமடைந்தார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமையா (வயது 50). இவரது மகன் அருண்குமார் (18). இந்தநிலையில் இவர்கள் இருவரும் காட்டுப்பட்டியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை நிமித்தமாக புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஆலங்குடி அருகே கூழையன்விடுதி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே தஞ்சாவூர் நோக்கி சென்ற ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருண்குமார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சம்பட்டு விடுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். பின்னர் படுகாயமடைந்த அருண்குமாரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் ராமையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமையா (வயது 50). இவரது மகன் அருண்குமார் (18). இந்தநிலையில் இவர்கள் இருவரும் காட்டுப்பட்டியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை நிமித்தமாக புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஆலங்குடி அருகே கூழையன்விடுதி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே தஞ்சாவூர் நோக்கி சென்ற ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருண்குமார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சம்பட்டு விடுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். பின்னர் படுகாயமடைந்த அருண்குமாரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் ராமையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X