search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nutritional program"

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சத்துணவுத்திட்ட கண்காணிப்புக்குழுக்கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சத்துணவுத்திட்ட கண்காணிப்புக்குழுக்கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் உள்ள 1,642 சத்துணவு மையங்களில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு   தரமான சத்துணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் மாவட்ட சத்துணவுத் திட்ட கண்காணிப்புக்  குழுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

    கூட்டத்தில் சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு சத்துணவை தொடர்ந்து சுகாதாரமான முறையில் சமைத்து  வழங்கவும், உணவு பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையை தினமும் குறுஞ்செய்தியாக தலைமையிடத்திற்கு அனுப்பிவைக்கவும், சத்துணவு  மையங்களை தூய்மையாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரிக்கவும், குடிநீர்த் தொட்டிகளை ஆய்வு செய்து தூய்மையாக பராமரிக்கவும், மேலும் முட்டையின்தரம் குறித்த ஆய்வு செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. 
    இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவுத்திட்டம் சிறப்பாக செயல்பட தொடர்புடைய அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×