என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    இலுப்பூர் பகுதியில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர், அன்னவாசல் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முககவசம் அணியாமலும், ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 391 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 487 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு தற்போது 2 ஆயிரத்து 478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. தமிழக அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் மாவட்டத்தில் மேலும் 8 பேர் பலியாகி இருந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.

    அதே நேரத்தில் நேற்று தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது. புதிதாக 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து197 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 391 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 487 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு தற்போது 2 ஆயிரத்து 478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அரிமளம் ஒன்றியம் கடியாபட்டி கிராமத்தை சேர்ந்த 30 வயது ஆண், அதே கிராமத்தை சேர்ந்த 50 வயது பெண், குருந்தங்குடி கிராமத்தை சேர்ந்த 21 வயது பெண், அதே கிராமத்தை சேர்ந்த 30 வயது ஆண் ஆகிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரிமளம் ஒன்றியத்தில் கொரோனா தொற்று முழு ஊரடங்கு காரணமாக வெகுவாக குறைந்துள்ளது.

    ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று புதிதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 74 ஆக குறைந்த நிலையில் 351 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது.
    ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 19 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த 2 பேர் என 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    அன்னவாசல்: 

    இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 19 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த 2 பேர் என 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 19 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். 
    பொன்னமராவதி ஒன்றியம் ஆர்.பாலக்குறிச்சி, தேனூர், பகவாண்டிப்பட்டி, வார்பட்டு உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி ஒன்றியம் ஆர்.பாலக்குறிச்சி, தேனூர், பகவாண்டிப்பட்டி, வார்பட்டு உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சி செயலர்கள், பணித்தள பொறுப்பாளர், பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை உள்ளிட்டவைகளை எடுத்தனர்.
    புதுக்கோட்டை சிறை கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சிறை கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதனை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறையில் உள்ள கைதிகளில் பரோலில் விடுவதற்கு தகுதியானவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் தீவிரவாத செயல்கள் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களை பரோலில் விடுவதற்கு வாய்ப்பில்லை. சிறைகளில் 57 சதவீதம் கைதிகளே உள்ளனர்.

    கொரோனா காலத்தில் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கைதிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். தமிழக சிறைகளில் உள்ள கைதிகளில் இதுவரை 1,700 கைதிகள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் சிறைகளில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விரைவில் அனைத்து கைதிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். சிறைகளில் மருத்துவ பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் உரிய முறையில் நிரப்பப்பட்டு கைதிகளுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கி பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார். முகாமில் முத்துராஜா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    கொரோனா வைரசுக்கு புதுக்கோட்டையில் 4 மாத குழந்தை ஒன்று பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்த கொரோனாவின் இரண்டாவது அலைக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் உயிரிழப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

    இதுவரை 25,665 பேர் பலியாகி உள்ளனர். கடந்த சில வாரங்களாக தினசரி உயிரிழப்பு 450-ஐ கடந்து பதிவாகி வருகிறது. அதிலும் குறிப்பாக 40 முதல் 50 வயதுக்குட்பட்டோர் அதிகம் பலியாகி வருவது சுகாதாரத்துறையினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

    இந்தநிலையில் புதுக்கோட்டையில் 4 மாத குழந்தை ஒன்று பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள மந்த குடிப்பட்டியை சேர்ந்த தம்பதியரின் 4 மாத குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை கடந்த மாதம் 27-ந்தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    கொரோனா வைரஸ்

    குழந்தையை பரிசோதித்ததில் 29-ந்தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 4 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.

    தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் மிகக்குறைந்த வயதில் கொரோனாவுக்கு பலியான முதல் குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவது நமக்கு நிம்மதியைக் கொடுக்கிறது என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவ கல்லூரி முதல்வரிடம் கேட்டறிந்தார்.

    அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

    தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவது நமக்கு நிம்மதியைக் கொடுத்தாலும், தொற்று பாதிப்பு குறைந்து வரும் நேரத்தில் இறப்பு சற்று மனக்கவலை அளிக்கிறது. இதனால் கொரோனா இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கு அரசு அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    கொரோனா வைரஸ்

    தமிழகத்தில் அதிகரித்து வரும் கருப்பு-பூஞ்சை நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதனால், பாதிக்கப்படுவோருக்கு அனைத்துவித மருந்துகளையும் தயார் நிலையில் வைத்திருந்து இறப்புகளைத் தடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 

    செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை உடனே செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பம். அ.தி.மு.க. ஆட்சியில் இம்மையத்தை ஆய்வு செய்து, செயல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். எனவே, இம்மையத்தை திறப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
    ஆண்டுதோறும் ஜூன் 3-ந்தேதி உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கிய சாதனமாக இருந்த சைக்கிள், இன்று உடற்பயிற்சி சாதனமாக மாறி விட்டது.
    புதுச்சேரி:

    ஆண்டுதோறும் ஜூன் 3-ந்தேதி உலக மிதிவண்டி (சைக்கிள்) தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கிய சாதனமாக இருந்த சைக்கிள், இன்று பெரும்பாலும் உடற்பயிற்சி சாதனமாக மாறி விட்டது. ஆனாலும், சமீபகாலமாக சைக்கிள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் உடல் ஆரோக்கியம் மற்றும் எடையை எளிதாக குறைக்க உதவுகிறது.

    இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த புதுச்சேரி ஆழ்கடல் நீச்சல் வீரரான அரவிந்த் கடலுக்கு அடியில் சைக்கிள் ஓட்டினார். இதற்காக பழைய மாமல்லபுரம் காரப்பாக்கம் கடல் பகுதியில் ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி அசத்தினார்.

    தினமும் உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக மிதிவண்டி தினத்தில் ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

    ஏற்கனவே இவர், ஆழ்கடலில் சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார். அதுமட்டுமின்றி ஆழ்கடலில் மீன்களுடன் பழகி நீச்சல் அடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    சென்னையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விராலிமலை மற்றும் அன்னவாசல் ஆகிய பகுதிகளில் முன்களப் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

    மேலும் இலுப்பூர் மற்றும் விராலிமலை பகுதியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை குறித்து மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கிராமப்புறங்களில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு கூடுதல் முகாம்களை அமைத்து அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் நான் எடுத்துக் கூறியபடி பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. அதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

    சென்னையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோன்று மண்டல அளவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்.

    அரசு கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் எப்படி நோய் இருக்கிறதோ அதன்படி பொதுமக்கள் நடக்க வேண்டும். முக கவசம் ஆயுதம் என்றால் தடுப்பூசி என்பது பேராயுதம்.

    பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது அறிகுறி தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஊரடங்கு காலத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சியது தொடர்பாக இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை:

    கொரோனா தொற்றின் 2-வது அலை தற்போது தாக்கி வருகிறது. அதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு இரண்டு வாரம் தொடர் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    இதனால் மது பிரியர்கள அல்லாடி வருகிறார்கள். இதனை பயன்படுத்தி வி‌ஷமிகள் சிலர் சாராய ஊறல் போட்டு சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய முயன்று வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஊரடங்கு காலத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சியது தொடர்பாக இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 20 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற் கொண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சாராய ஊறல்கள் காட்டு பகுதியில் போடப்படுவதால் ஊறலில் வி‌ஷப்பூச்சிகள் விழுவதாலோ, ஊறலில் கலவையின் தன்மை மாறும் போதோ உயிரிழப்புகள் ஏற்பட பெரிதும் வாய்ப்புள்ளது. சாராய ஊறல் போடுவதற்காக தங்களது காலியிடத்தினையோ அல்லது தோட்டத்தினையோ பயன்படுத்த அனுமதிக்கும் சம்மந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்கள் மீதும் கடும் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிவித்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதைத் தடுக்க தாமாக முன்வர வேண்டும் எனவும், குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் எனவும் மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    எந்த காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் காவல் துறையினருக்கு தெரிந்தே செயல்பட்டால் காவல் நிலையத்தில் உள்ள அனைவரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் காவல் துறைக்கு தெரியாமல் நடைபெறும் பட்சத்தில் காவல் நிலையத்தில் இருப்பவர்கள் பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். தங்கள் கட்டுபாட்டில் உள்ள பகுதிகளை இந்த மாதிரியான ஊரடங்கு காலத்தில் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்றார்.

    அதுபோல் டாஸ்மாக் மது பானங்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்வது குறித்து தகுந்த விவரங்கள் தரப்பட்டால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தற்போது கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக போலீஸ் தரப்பில் பாலம் என்ற வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டம் முழுதிலிருந்து அனைத்து தரப்பிலும் மக்கள் இணைந்துள்ளனர். அவர்கள் கூறும் புகார் களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவை முற்றிலும் அகற்ற தேவையான கருத்துகளையும் கேட்டறிந்து செயல்படுகிறோம் என்றார்.

    கொரோனா காலம் என்பதால் கருணாநிதியின் பிறந்த நாளை எளிமையாக கொண்டாடும்படி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
    புதுக்கோட்டை:

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினம், நாளை கொண்டாடப்படுகிறது. கொரோனா காலம் என்பதால் பிறந்த நாளை எளிமையாக கொண்டாடும்படி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். திமுகவினர் அவரவர் வீடுகளில் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தி கொண்டாடவேண்டும் என்றும், ஏழை-எளிய மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி திமுக நிர்வாகிகள் மக்களுக்கு உதவி செய்கின்றனர்.

    அவ்வகையில், கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம், ராணியார் மருத்துவமனை ஆகிய இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் சட்ட அமைச்சர் ரகுபதி தனது சொந்த செலவில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்தார். இதற்காக ரூ.1.50 லட்சம் வழங்கிய அவர், இலவச உணவு வழங்கும் திட்டத்தினை இன்று
    தொடங்கி வைத்தார்.

    இலவச உணவு வழங்கும் அமைச்சர் ரகுபதி

    இந்நிகழ்ச்சிகளில் புதுக்கோட்டை எம்.எல்.ஏ., வை.முத்துராஜா, திமுக மூத்த வழக்கறிஞர் எஸ்.திருஞானசம்பந்தம், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன், நகர செயலாளர் நைனா முகம்மது , வட்ட செயலாளர் சத்தியா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 
    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி முன்களப் பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஆட்சியர் உமா மகேஸ்வரி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
    ×