என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டை மகிமை நாயகி அம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் முளைபாரி எடுத்து வந்தனர்
    • பக்தர்கள் அலகு குத்தி பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை, 

    வடக்கு மூன்றாம் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மகிமைநாயகி முத்துமாரிஅம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அம்மன்வீதியுலா நடைபெற்றது.  தினமும் மண்டகப்படியும் நடைபெறு கிறது. பக்தர்கள் அலகு குத்தியும், மஞ்சள் ஆடையில் பால்குடம்ஏந்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும், கரும்பு தொட்டில் கட்டி அதில்குழந்தையை வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தும், பொங்கல்வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மாலையில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர். இரவு அம்மன் சிம்ம வாகனத்தில்மலர் அலங்காரத்தில்பல்வேறு வீதி  வழியாக பவனி வந்தார்.கோவிலில்மூலவர் மகிமைநாயகி முத்துமாரிஅம்மன்  வெள்ளிக்காப்பு மலர் அலங்காரத்திலும் உற்சவர் சிம்ம வாகனத்தில் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடு களை விழாக்குழுவினர் செய்திருந்தனர். 

    • திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
    • விராலிமலை அருகே இருந்திரப்பட்டியில் நடைபெற்றது

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட் டம் இலுப்பூர் அருகே உள்ள இருந்திரப்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்து–மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் 19-ந்தேதி பூச்சொரிதல் விழா நடை–பெற்றது. இதைத்தொ–டர்ந்து கடந்த 26-ந்தேதி பங்குனி தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழா நாட்களில் தின–மும் முத்துமாரியம்மன் காலையிலும், மாலையிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பால்கு–டம் ஊர்வலமும், தீச்சட்டி ஏந்திச்செல்லுதல், அலகு நேர்ச்சை, தொட்டில் கட்டு–தல், மாவிளக்கு ஏற்றுதல், பொங்கல் வைத்தல் என பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த தேரை முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தேங்காய் உடைத்து வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரி–யம்மன் தேரில் எழுந்தரு–ளினார். இதையடுத்து மாலை 5 மணிக்கு மேள, தாளம் முழங்க, வாண–வேடிக்கையுடன் திர–ளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந் தாடி வந்தது.ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடிநின்று தேங் காய், பூ, பழம் வைத்து முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழி–பட்டனர். மாலை 7 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.பின்னர் முத்துமாரியம் மனுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் இலுப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவிற்கு வந்த பக் தர்களுக்கு முன்னாள் அமைச் சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் குடும்பத்தினர் சார்பில் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்தும, அன்னதானமும் வழங்கப்பட்டது. திரு–விழாவை தொடர்ந்து நாளை (புதன்கிழமை) மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடு–களை விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் செய் திருந்தனர்.

    • ஆவின் பால் தட்டுப்பாட்டை கண்டித்து போராட்டம் நடைபெற்றது
    • கண்ணில் கருப்பு துணிக்கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்

    அறந்தாங்கி, 

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஆவின்பால் தட்டுப்பாட்டைக் கண்டித்து தே.மு.தி.க. சார்பில் கண்ணில் கருப்பு துணிக்கட்டி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆவின் பால் பாக்கெட்டிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பால்தட்டுப்பாட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கியில் தெற்கு மாவட்டச் செயலாளர் மன்மதன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆவின் பால் தட்டுப்பாட்டிற்கு எதிராகவும், அதனை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.ஆர்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நகரச் செயலாளர் மணிகாந்த், நகரப் பொருளாளர் ஆனநத், புதுக்கோட்டை நகரச் செயலாளர் பரமஜோதி,நகர்மன்ற உறுப்பினர் ரூபினி, மாவட்ட மகளிர் அணி அனிதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீரங்கம் இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத்தின் அங்கம்
    • தலைவருக்கு சுத்தியல் வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை, 

    ஸ்ரீரங்கம் இன்ஸ்பையர் லயன்ஸ் சங்கத்தின் புதியஅங்கமாக, புதுக்கோட்டை ஆனந்தம் புதிய சங்க துவக்க விழா நேற்று மாலை புதுக்கோட்டையில் எழில் நகரில் உள்ள தாஜ் மினி ஹாலில் நடைப்பெற்றது. ஸ்ரீரங்கம் இன்ஸ்பையர் லயன்ஸ் சங்கம் தலைவர் கண்ணன் தலைமையில் மாவட்ட ஆளுநர் சேது சுப்பிரமணியன் புதிய சங்கத்தை துவக்கி வைத்து, புதிய நிர்வாகிகளை பணியமர்த்தி, புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து சிறப்புரையாற்றினார். புதிய தலைவரிடம், கூட்டங்களை நடத்த பாரம்பரிய சுத்தியல் வழங்கப்பட்டது.புதிய சங்கத்தின் பேனரும் வழங்கப்பட்டது.மாவட்ட அவை செயலர் செல்வராஜ், மாவட்ட அவை பொருளாளர காமராஜ், கூடுதல் மாவட்ட அவை செயலாளர் சசிகுமார், கூடுதல் மாவட்ட அவை பொருளாளர் சிபக்குமார், மாவட்ட உறுப்பினர் வளர்ச்சி தலைவர் டாக்டர் மகேந்திரன், சங்கம் விரிவாக்கம் நெல்சன் ஆரோக்கியம், மண்டல தலைவர்சிவக்குமார், வட்டார தலைவர் டாக்டர் அம்முட்டி பாபா வாழ்த்துரை வழங்குகினார். புதுக்கோட்டை ஆனந்தம் சங்க நிர்வாகிகள் தலைவராக சோலை சுப்பிரமணியன், செய லாளராக இளவரசு சோம சுந்தரம், பொருளாளராக எஸ்.என்.பழனியப்பன், முதல் துணைத் தலைவராக இளஞ்சேரன், இரண்டாம் துணை தலைவராக விஜயலெட்சுமி, துணைச் செயலாளராக ஆண்டோ கலைச்செல்வன், இயக்கு நர்களாக அமுதன், அமல சவரிராஜ், உறுப்பினர் வளர்ச்சி தலைவராக சுவாமிநாதன், தலைமை பண்பு பயிற்சி தலைவராக ச.மனோகர், முடுக்குனராக தங்கராஜ், அடுக்குனராக ஜெயராஜ், மக்கள் தொடர்பு அலுவலராக சோலைச்சி, உறுப்பினர்களாக பத்பநாபன், அரவிந்த்ராஜா, கீதா, சூரஜ் ஜம்பாஜி ஜாதவ், இளங்கோவன், ருத்ர சங்கர் மாலி, சேகர், செல்வராஜ், பெரியசாமி, பிரேம் ஆனந்த், இராசு.க.கவிவேந்தன், அருள்செல்வம், நல்லதம்பி ஆகியோர்ப தவியேற்றனர். விழாவில் தலைவர் கண்ணன், செயலாளர் சுரேஷ்குமார், செயலாளர் பாண்டியன், பொருளாளர் செல்வராஜ், மருத்துவர் ராம்பிரகாஷ், லயன்ஸ் மேனா.குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • இருசக்கர வாகனத்தில் சென்ற கொள்ளையர்களை விரட்டி பிடித்து போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்
    • சிசிடிவி கேமிராவால் அடையாளம் காணப்பட்டனர்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகளில் ஒருவர், அதிகாலை நேரத்தில் எழுந்து, மின்சார பல்வை ஆன் செய்து விட்டு, வீட்டை திறந்து வெளியில் வந்துள்ளார். அப்போது அவர் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து இரண்டு மர்ம நபர்கள் எகிறி குதித்து ஓடுவதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் சத்தம் போட்ட அவர் சம்பந்தப்பட்ட வீட்டில் வசிப்பவர்களை எழுப்பி இரண்டு மர்ம நபர்கள் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து எகிறி குதித்து ஓடுவதை கூறி உள்ளார். இதனை தொடர்ந்து அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை அவர்கள் பார்த்து உள்ளனர். அப்போது இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டை நோட்டமிடுவதும், அதன் பின்னர் வீட்டின் சுவரை ஏறி குதிப்பதும் அதில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.இதனை அடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது நண்ப ர்கள் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு அந்த இரண்டு மர்ம நபர்களையும் தேடி வந்த நிலையில் அந்த இருவரும் அதிகாலையில் சுவர் ஏறி குதித்த அதே உடையில் ஆலங்குடி வடகா டு முக்கம் பகுதியில் அதே இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த போது அவர்களை அடையாளம் கண்ட அந்த வீட்டின் உரிமையாளர் மற்று ம் அவரது நண்பர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுடன் சேர் ந்து அந்த இருவரையும் விரட்டி சென்றுள்ளனர்.

    அப்போது அந்த இரண்டு இளைஞர்களும் பொதுமக்கள் விரட்டி வருவதைப் பார்த்து இருசக்கர வாகனத்தில் வேகமாக புதுக்கோட்டை சாலையில் சென்றுள்ளனர். ஆலங்குடி அடுத்த அம்புலி ஆறு பாலம் அருகே நிலை தடுமாறி விழுந்துள்ளனர். பின்னர் இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓடும்போது பொதுமக்கள் அந்த இரண்டு இளைஞர்களையும் விரட்டி பிடித்துள்ளனர். அதன் பின்னர் அவர்க ளை ஆலங்குடிகாவல் நிலையத்தில் ஒப்படைத்த னர். மேலும் சிசிடிவி கேமிரா பதிவும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இரண்டு பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கோயமுத்தூர் மாவட்டம் கள்ளுப் பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சிவப்பிரகாசம் (வயது 31) என்பதும் , நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அரக்கார் ராமர் மகன் பிரசாந்த் (வயது 24) என்பதும் தெரிய வந்தது.மேலும் அந்த இரண்டு இளைஞர்களும் வந்த இருசக்கர வாகனம் ஈரோடு மாவட்டத்தில் திருடப்பட்ட வாகனம் என்பதும் தெரியவந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்த காரணத்தால், முதலுதவி சிகிச்சைக்காக ஆலங்குடி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இவர்கள் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என்ற சந்தேகம் போலீசாரிடம் எழுந்ததால், அது குறித்து விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, இருவரும் புதுக்கோட்டை கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் ஆலங்கு டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடைபெற்றது
    • முதல் பரிசை தட்டி சென்ற காவல்துறையினர்

    கந்தர்வகோட்டை, 

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கந்தர்வகோட்டை வடக்கு தி.மு.க. கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியை புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் கே. கே. செல்ல பாண்டியன் தொடங்கி வைத்தார். அரை இறுதி ஆட்டத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார். முதல் பரிசை தமிழ் நாடு காவல் துறை அணியும் , இரண்டாவது பரிசை கோமாபுரம் அணியினரும் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் மாவட்ட கழகச் செயலாளர் கே.கே. செல்லபாண்டியன், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விராலிமலை சந்திரசேகரன், தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பரமசிவம், நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மா. தமிழ் அய்யா செய்திருந்தார்..

    • முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது
    • அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைத்தார்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மழையூரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.அந்த வகையில் இந்த வருடமும் மழையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மேலும் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவரும், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளருமான தவ பாஞ்சாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜல்லிக்கட்டில் பல்வேறு புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். காளையை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றி பெற்ற காளைகளுக்கும் தங்க நாணயம், கட்டில், பீரோ, சைக்கிள், மிக்சி, பேன் ஆகிய பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி டி.எஸ்.பி. தலைமையில் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் முன்னிலையில் போலீசார் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    • அன்னவாசல் அருகே துணிகரம் திருட்டு
    • இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது

    விராலிமலை, 

    புதுக்கோட்டை மாவட் டம் அன்னவாசல் அருகே உள்ள அண்ணாநகர் புங்கி–னிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 45). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக் கிளை தாண்றீஸ்வரம் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்திவிட்டு அருகில் கடைக்கு சென்றிருந்தார்.அவர் மீண்டும் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதேபோன்று பரம்பூரை சேர்ந்த வைத்திலிங்கம் (52) என்பவர் பரம்பூர் வங்கி அருகே நிறுத்தி விட்டு பின்னர் வந்து பார்த்த போது தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.இதுகுறித்து அவர்கள் அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அன்னவாசல் சப் -இன்ஸ் பெக்டர் நாகராஜன் உள் ளிட்ட போலீசார் நடத் திய விசாரணையில் இரண்டு மோட்டார் சைக் கிள்களையும் திருடியது பேராவூரணி செங்கமங்களம் பகுதியை காளிதாஸ் (28), மேலூர் சந்தைப் பேட்டை பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி (19) என்பதும் தெரிய வந்தது/இதனையடுத்து அவர் களை கைது செய்த போலீசார் இரண்டு மோட்டார் சைக் கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    • புதுக்கோட்டை அன்னவாசல் அருகே பரிதாபம்
    • உடல்கூறு ஆய்விற்கு பிறகு செத்த மானை, வனத்துறையினர் புதைத்தனர்

    விராலிமலை,

    அன்னவாசல் அருகே 1500-ஏக்கர் பரபப்பளவில் அரசுக்கு சொந்தமான அண்ணாபண்ணை உள்ளது. இங்கு அதிக அளவில் மான்கள் உள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் அங்கிருக்கும் மான்கள் தண்ணீர் தேடி காட்டை விட்டு வெளியேறும் போது வாகனங்களில் அடிபட்டும் நாய்களிடம் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வயலோகம் அருகே உள்ள குறும்பக்குளம் பகுதியில் மான் ஒன்று சுற்றி திரிந்தது. இதைபார்த்த நாய்கள் துரத்தி சென்று அந்த புள்ளிமானை கடித்து குதறியது. இதில் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை, வருவாய்த்துறை, கால்நடைத்துறை அலுவலர்கள் புள்ளிமானை உடற்கூறு ஆய்வு செய்து அப்பகுதியில் புதைத்தனர்.

    • மீன்களை உற்சாகமாக அள்ளி சென்ற கிராமமக்கள்
    • அன்னவாசல் அருகே புதூர் பெரியகுளத்தில் நடைபெற்றது

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட் டம் அன்னவாசல் அருகே உள்ள புதூர் பெரிய–குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து குளம் நிறைந்து விவசாயம் செழிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண் டுதல். இந்தநிலையில் கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததால் இந்த குளம் நிரம்பியது.மேலும் அந்த குளத்தில் மீன்களும் அதிக அளவில் இருந்தன. இதனையடுத்து குளத்தில் தண்ணீர் வற்றியதால், குளத்தில் இருக்கும் மீன்களை பிடித்து கிராமமக்கள் சேர்ந்து திருவிழா–வாக கொண்டாடி மகிழ்வதும் வழக்கம்.இதனையடுத்து இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. முன்னதாக ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டை எடுத்து வீசிய உடன், குளத்து கரையில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கொண்டு வந்த கச்சா, தூரி, வலை, சேலை என அவற்றை குளத்தில் வீசி ஒவ்வொருவரும் மீன் பிடிப்பதும், தங்களுக்கு கிடைக்கும் மீன்களை எடுத்து சென்று சமைத்து சாப்பிடுவதும் கிராம மக்களுக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி ஆகும்.இந்த மீன்பிடி திருவிழா சகோதரத்துவத்தையும் கிராம மக்களின் ஒற்றுமையையும் ஜாதி, இன பாகுபாடு அற்ற தன்மையையும் தரும் ஒரு உன்னத நிகழ்ச் சியாகும். இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்று வட் டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நாட்டுவகை மீன்களான கெழுத்தி, குரவை, ஜிலேபி, அயிரை, கட்லா, கெண்டை, விரால் ஆகிய மீன்களை பிடித்தனர். பின்னர் பிடித்த மீன்களை பொதுமக்கள் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அதிகாலை முதலே கூடியிருந்தனர். ஒரே நேரத்தில் குளத்தில் இறங்கி மீன்பிடித்த சம்பவம் அனைவருக்கும் மகிழ்ச் சியை ஏற்படுத்தியது.

    • ராகுல் எம்.பி.பதவி பறிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ஏராளமான கம்யூனிஸ்ட்டுகள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை,

     ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு மற்றும் திரிபுரா மாநிலத்தில் பயங்கரவாத செயலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில், கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், மாவட்டக்குழு உறுப்பின ர்கள் க.முகமதலிஜின்னா, ஆர்.வி.ராமையா, நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்த னன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சி. ஜீவானந்தம், வி.ரெத்தி னவேல், தென்றல் கருப்பையா, அ.மணவாளன், பி.வீரமுத்து, டி.சலோமி, பி.சுசிலா, சி.மாரிக்கண்ணு, எஸ்.பாண்டிச்செல்வி, என். பக்ருதீன், கே.தங்கராஜ் உள்ளிட்ட ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர். 

    • புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் இருந்து முத்துகுடா வரையிலும் 32 மீனவ கிராமங்கள் உள்ளன.
    • இருதரப்பு மீனவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் இருந்து முத்துகுடா வரையிலும் 32 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மீன் பிடித்தொழிலுக்காக கடலுக்குள் சென்று வருகின்றன.

    அதே போன்று ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லுகின்றன. இந்நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் கரை பகுதியிலிருந்து 5 நாட்டிக்கல் வரையிலும், 5 நாட்டிக்கலுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வரையறுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கின்ற கரை பகுதியிலிருந்தே விசைப்படகு மீனவர்களும் மீன்பிடிப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவ்வப்போது இருதரப்பு மீனவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

    ஏனெனில் விசைப்படகுகளில் அரிவலை போன்ற வலைகளை பயன்படுத்துவதால் மீன் வளர்ச்சிக்கு ஆதாரமான கடல்பாசி, பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் அனைத்தும் அரிக்கப்படுவதால் எதிர் காலத்தில் கடலில் மீன் இனமே இருக்காது எனக் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்களின் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த புதுக்குடி பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனர்வர்கள், அத்துமீறிய கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களை தடுத்து நிறுத்தி தட்டிக் கேட்டுள்ளனர்.

    அப்போது இருதரப்பு மீனவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து தங்கள் பகுதியிலுள்ள வலைகளை சேதப்படுத்தி மீன்பிடித்ததாகக் கூறி கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 3 விசைப்படகுகள் மற்றும் அதில் சென்ற 12 மீனவர்களையும் புதுக்குடி நாட்டுப் படகு மீனவர்கள் சிறைபிடித்தனர்.

    இதற்கிடையில் படகுகளையும் மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே சென்ற மீன்வளத்துறையினர், காவல்த்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தைக்கு பிறகு 12 மீனவர்கள் மட்டும் காவல்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்னர். மேலும் சிறை பிடிக்கப்பட்ட விசைப்படகுகள் புதுக்குடி கடல் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கடலில் வலை விரித்து மீன்பிடிப்பதில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல் நடைபெற்றுவருவது தொடர்கதையாகி உள்ளது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதே இருதரப்பு மீனவர்களின் கோரிக்கையாகும்.

    ×