என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகள்
    • பங்குனி உத்திர திருவிழாவை முனனிட்டு நடைபெற்றது

    புதுக்கோட்டை, 

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலையில் ஜல்லிகட்டு நடைபெற்றது.  நான்கு ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான காளைகள் கலந்து கொள்ள வைக்கப்பட்டன.   வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்குவதற்கு மாடுபிடி வீரர்கள் தங்களது துணிச்சலை காட்டினர். ஜல்லிகட்டு முன்னிட்டு அப்பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

    • தெருவிளக்கு வசதி செய்திடவும் வேண்டுகோள்
    • நரிமேடு பகுதி பொதுமக்கள் கோரிக்கை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் நகர் வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தில் 42 பிளாக்குகளில் 1920 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லாத நிலை உள்ளது. மின் கம்பங்கள் ஊன்றப்பட்டு மின் கம்பி இணைக்கப்பட்ட நிலையில், தெரு விளக்குகள் பொருத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நகர் பகுதியில் மின்சார டிரான்பார்மார் பழுது அடைத்திருப்பதாக கூறி இரவோடு இரவாக பிளாக் 35 முன்பாக இருந்த டிரான்ஸ்பார்மரை மின்ஊழியர்கள் கழற்றி சென்றுள்ளனர். டிரான்பார்மரை கழற்றும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டப்போது அப்பகுதியில் உள்ள நலச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தப் போதும் அதை கண்டுகொள்ளாமல் டிரான்பார்மரை கழற்றி சென்றதாக கூறப்படுகிறது. தற்போது டிரான்ஸ்பார்மர் இல்லாமல் நேரிடையாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மின்சார வாரிய அதிகாரிகள் இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. டிரான்ஸ்பார்கள் அமைத்து தெரு விளக்குகள் பொருத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • 8ம் தேதி குறைதீர் முகாம் நடைபெறுகிறது
    • அந்தந்த வட்டங்களில் நடைபெறும் என்று கலெக்டர் கவிதா ராமு அறிவிப்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் தொடர்பான குறைதீர் கூட்டம் அந்தந்த வட்டங்களில் நடைபெற உள்ளது. வரும் சனிக்கிழமை(8ம்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடும்ப அட்டைகள், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெறும். குடும்ப அட்டைகளில் பெயர்சேர்த்தல், பெயர்நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு முகாமில் கலந்து கொண்டு தீர்வு காணலாம். நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனியார்சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர்பாதுகாப்பு சட்டம் 2019 ன் படி மேற்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர்கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

    • தலைக்கு மூன்று கிலோ வரை அள்ளி சென்றனர்
    • வேடிக்கை பார்க்க வந்த வெளியூர்வாசிகளும் மீன் பிடித்து சென்றனர்

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில் மழைபெய்யவும், விவசா யம் தழைக்கவும் வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெற்றது.அதிகாலையிலேயே பொது மக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் ஊத்தா,வலை,பரி,கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். ஜாதி மதம் பாராமல் உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குறவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. தூரி என்ற மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்பிடித்தவர்கள் சிறிய வகை மீன்களை அள்ளிச்சென்றனர். முன்ன தாக ஊர் பெரிய வர்களால் வெள்ளை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காண வந்த வெளியூர் நபர்களும் கண்மாய்க்கு வந்து ஆர்வத்தோடு மீன்பிடித்தனர்.ஒரு சிலர் கைகளுக்கு இரண்டு கிலோ முதல் மூன்று கிலோ வரை எடை கொண்ட கட்லா வகை மீன்கள் கிடைத்தன.

    • கோடிக்கரை கடற்கரையில் ஒதுங்கிய பைபர் படகு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சிக்கினர்
    • இரண்டு பேர் தமிழகத்திற்குள் ஊடுருவியதால் துருவிதுருவி விசாரணை

    அறந்தாங்கி, 

    புதுக்கோட்டை மணமே ல்குடி கோடியக்கரை கடலோர பகுதியில் கடந்த 4ம் தேதி மர்மமான முறையில் இலங்கையை சேர்ந்த ஃபைபர் படகு ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் நங்கூரமிடப்பட்டிருந்தது. இதனை அறிந்த வனத்துறை அதிகாரிகள்,கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று படகை ஆய்வு செய்தனர்.ஆய்வில் இலங்கையை சேர்ந்த 40 குதிரைதிறன் கொண்ட அதிவிரைவு பைபர் படகு என்பதும், அதில் டீசல் கேன்கள், 2 சட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து படகை கைப்பற்றிய கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், படகிலிருந்து எஞ்சினை தனியாக பிரித்து யாரும் இயக்காதவாறு செய்தனர்.மேலும் அந்தப் படகில் யாரேனும் இலங்கையில் இருந்து தப்பித்து வந்துள்ளார்களா, வேறு ஏதேனும் மர்ம பொருட்கள் கடத்தி வரப்பட்டதா, அல்லது பழுதாகி காற்றில் இழுத்து வரப்பட்டதா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிபூண்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 2 பேர் ஒழிந்திருப்பதாக க்யூ ப்ரான்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார் மறைந்திருந்த 2 நபர்களை பிடித்து விசாரித்ததில் அதே முகாமை சேர்ந்த சிந்துஜன் (28) என்பவர் இலங்கைக்கு சென்று லிங்கேஸ்வரன்(25), தூசன் (21)ஆகிய இருவரை கள்ளத்தனமாக படகில் கூட்டி வந்திருப்பது தெரியவந்துள்ளது. 3 பேரையும் கைது செய்த போலீசார், படகு உள்ள மணமேல்குடி கோடியக்கரை பகுதிக்கு நேரில் அழைத்துச் சென்று, பின்பு கடலோர பாதுகாப்பு குழும அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்க்கொண்டு வருகி ன்றனர். இலங்கையிலிருந்து 2 பேர் கள்ளத்தனமாக தமிழகத்திற்குள்ஊடுரு வியுள்ள சம்பவம் அப்பகு தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • படகு இலங்கை பதிவெண் கொண்ட பைபர் படகு என்பதும், அதிவேக என்ஜின் கொண்டதும் தெரியவந்தது.
    • 3 பேரையும் கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.

    மணமேல்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் வெளிநாட்டு படகு ஒன்று மர்மமான முறையில் நிற்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த படகு இலங்கை பதிவெண் கொண்ட பைபர் படகு என்பதும், அதிவேக என்ஜின் கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த படகில் வந்த மர்ம ஆசாமிகள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் பதிவு இல்லாமல் வசித்து வரும் சிந்துஜன் (வயது 28) என்பவர் இலங்கைக்கு சென்று அங்கிருந்து இலங்கை அலைதீவை சேர்ந்த விந்துசன் என்கின்ற துசன் (21), லிங்கேஸ்வரன் (25) ஆகியோரை பைபர் படகு மூலம் மணமேல்குடி கோடியக்கரைக்கு அழைத்து வந்து அங்கிருந்து பஸ் மூலம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டிக்கு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோலப்போட்டியில் கலந்து கொண்ட பெண்களுக்கு பரிசு
    • முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது

    புதுக்கோட்டை

    வடக்கு மாவட்ட திமுக மகளிரனி சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கோலப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கேகே செல்ல பாண்டியன் பரிசு வழங்கினார். அருகில் மேற்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன், விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ரவி,வடுகபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி குமார், ஒன்றிய இளைஞரனி சிவக்குமார், விராலிமலை தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சுகி என்கிற சுகுமாரன், ஊராட்சி மன்ற உறுப்பினர் வசந்தி பிரபு, அரசு ஒப்பந்தக்காரர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலோர பாதுகாப்பு குழு, வனத்துறை, காவல்துறையினர் படகில் இருந்து என்ஜினை துண்டித்தனர்
    • இலங்கையில் இருந்து வந்தவர்கள் யார் என்று தீவிர விசாரணை,

    அறந்தாங்கி, 

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியிலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது மணமேல்குடி கோடியக்கரை கடலோர பகுதியில் மர்மமான முறையில் இலங்கையை சேர்ந்த ஃபைபர் படகு ஒன்று நங்கூரமிடப்பட்டுள்ளதை மீனவர்கள் கண்டுள்ளனர். அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், காவல்துறை யினர் ஆகியோர் இலங்கை படகு நின்ற பகுதிக்கு சென்று படகை ஆய்வு செய்தனர். ஆய்வில் இலங்கையை சேர்ந்த 40 குதிரைதிறன் கொண்ட அதிவிரைவு பைபர் படகு என்பதும், அதில் டீசல் கேன்கள், 2 சட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து படகை கைப்பற்றிய கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், படகிலிருந்து எஞ்சினை தனியாக பிரித்து யாரும் இயக்காதவாறு செய்தனர். மேலும் அந்தப் படகில் யாரேனும் இலங்கையில் இருந்து தப்பித்து வந்துள்ளார்களா, வேறு ஏதேனும் மர்ம பொருட்கள் கடத்தி வரப்பட்டதா, அல்லது பழுதாகி காற்றில் இழுத்து வரப்பட்டதா என்ற பல்வேறு கோணத்தில் விசார ணையை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ராமேஸ்வரத்தில் சேட்டிலைட்செல்ஃபோன் கண்டெடுக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், மணமேல்குடி கோடியக்கரை கடலோர பகுதியில் இலங்கையை சேர்ந்த 40 குதிரை திறன் கொண்ட அதிவிரைவு ஃபைர் படகு கரையோரத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், அச்ச த்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • குழந்திரான்பட்டு அரசு தொடக்க பள்ளி ஆண்டுவிழாவில் வழங்கப்பட்டது
    • பல்சுவை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் குழந்திரான்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்கள் யோகா, பரதநாட்டியம், நடன நிகழ்ச்சிகள் மற்றும் சமூக விழிப்புணர்வு நாடகங்கள் கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பன்னீர் தேவர் அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளையின் தலைவரும் பெரும் தொழில் அதிபருமான கரிகாலன் தேவர் சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்களை வழங்கினார். பரிசு பொருட்களை வழங்கிய கரிகாலன் விழாவில் பேசும்போது, இந்தப் பகுதியின் கல்வி வளர்ச்சிக்கு பன்னீர் தேவர் அறக்கட்டளை என்றும் துணை நிற்கும். நன்றாக படித்து அதிக மதிப்பெண்களை பெறும் மாணவ மாணவியர்களுக்கு மேல் படிப்புக்கான செலவுகளை அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும் பேசினார். இந்த அறிவிப்பினை கேட்டு பெற்றோர்கள் அனைவரும் கைத்தட்டி பாராட்டினர். நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை, வட்டார கல்வி அலுவலர், ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் சிவ திருமேனிநாதன், பட்டிமன்ற நடுவரும் பழனி ஆண்டவர் கலை கல்லூரியின் பேராசிரியருமான முனைவர் தங்க ரவிசங்கர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கருப்பையா, ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள், பள்ளியின் இருபால்ஆசிரிய திரளாக கலந்து கொண்டனர்.

    • இலங்கையில் இருந்து பைபர் படகு மூலம் மர்ம ஆசாமிகள் மணமேல்குடி கோடியக்கரை வழியாக தமிழ்நாட்டிற்குள் இரவில் ஊடுருவி உள்ளனர்.
    • இலங்கையில் உணவு தட்டுப்பாட்டால் குடும்பமாக வந்துள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை சுற்றுலா தலத்துக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் வெளிநாட்டு படகு ஒன்று மர்மமான முறையில் நிற்பதாக மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த படகை பார்வையிட்டனர். அப்போது அது இலங்கை பதிவெண் கொண்ட பைபர் படகு என்பதும், அதிவேக என்ஜின் கொண்டதும் என உறுதி செய்யப்பட்டது. அந்த படகின் உள்ளே 2 டீசல் கேன், தண்ணீர் பாட்டில், இலங்கை தின்பண்டங்கள் ஆகியவை இருந்தன.

    இலங்கையில் இருந்து பைபர் படகு மூலம் மர்ம ஆசாமிகள் மணமேல்குடி கோடியக்கரை வழியாக தமிழ்நாட்டிற்குள் இரவில் ஊடுருவி உள்ளனர். அவர்கள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. இவர்கள் கடத்தல் தொழிலுக்காக வந்தனரா? அல்லது இலங்கையில் உணவு தட்டுப்பாட்டால் குடும்பமாக வந்துள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பைபர் படகில் 2 டீசல் கேன் இருந்ததால் மணமேல்குடி கோடியக்கரை வழியாக கிழக்கு கடற்கரை செல்லும் சாலையில் இணைந்து சென்னை அல்லது கன்னியாகுமரி செல்ல முடியும். இதனை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் கோடியக்கரை பகுதியை தேர்வு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கோடியக்கரை வழியாக செல்லும் சாலை முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர். மேலும் மீனவ கிராமங்களுக்கு சென்ற போலீசார் மர்ம ஆசாமிகள் வந்தனரா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் இலங்கை பைபர் படகு மர்மமான முறையில் நின்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு தகவல்
    • உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், கூட்டுறவு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கண்காட்சி அரங்கினை பார்வையிட்டு, செறிவூ ட்டப்பட்ட அரிசியின் மூலம் தயார் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் அரிசிகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படவுள்ளதை முன்னிட்டு, செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே விழி ப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியில் இருந்து சமைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு, அதன் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.இந்த செறிவூட்டப்பட்ட அரிசி அதே சுவை, அதே தோற்றம், அதே சமையல் முறையில் சமைக்கலாம். இதில் உள்ள இரும்பு சத்து மூலம் இரத்த சோகையினை தடுக்கலாம். போலிக்அமிலம் மூலம் கருவளர்ச்சிக்கும், இரத்த உற்பத்திக்கும் உதவுகிறது. வைட்டமின் பி-12 மூலம் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு தமிழக அரசால் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியினை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், துணைப் பதிவாளர் (பொ.வி.தி.) கோபால் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • புதுக்கோட்டை மாவட்ட பட்டுபுழு வளர்பவர்களுக்கு தளவாடங்கள் வழங்கப்பட்டது
    • மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தல் நடைபெற்ற இக்கூட்டத்தில் 352 மனுக்கள் பெறப்பட்டது.மேலும், பட்டுப்புழு வளர்ப்பு மனை கட்டி முடிக்கப்பட்டு பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ளும் 7 பட்டு புழு வளர்ப்போருக்கு தலா ரூ.37,500 வீதம் நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களையும், மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.25,000மும், இரண்டாம் பரிசாக ரூ.20,000மும், மூன்றாவது பரிசாக ரூ.15,000மும் மொத்தம் ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், பட்டு வளர்ச்சி ஆய்வாளர் வெள்ளையம்மாள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    ×