என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    கந்தர்வகோட்டையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    • கந்தர்வகோட்டையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்தும், அதானி குழுமம் மீது விசாரணை நடத்த கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர்கள் சரவணன், செல்வகுமார், சப்பானி முத்து தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி முன்னாள் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்தும், அதானி குழுமம் மீது விசாரணை நடத்த கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பாராளுமன்ற முடக்கத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விராலிப்பட்டி முத்து கருப்பு, மாவட்ட துணைத் தலைவர் பழக்கடை மாரிமுத்து, ஒன்றிய குழு துணைத் தலைவர் வடிவேல் குமார், நகரத் தலைவர் செந்தில் குமார், வட்டார தலைவர்கள் ராமையன், மாயக்கண்ணு, வடுகப்பட்டி மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×